இடுகைகள்

2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பாரதியாரின் பிறந்தநாள்!

இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று முழங்கிய மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் இன்று! மகாகவி நம் தாய்த்தமிழகம் எப்படியெல்லாம் திகழ வேண்டும் என்ற மாபெரும் கனவுகளுடன் வாழ்ந்து மறைந்தும் இன்றும் ஒரு தவச் சித்தராய்த் தமிழகத்தை தம் பாடல் வரிகளால் வழி நடத்துபவர்! அவரின் கனவுகள் அனைத்தும் நனவாகும் காலம் வெகு விரைவில் வருகிறது! ஐந்தாம் தமிழ்ச்சங்கம் மகாகவியின் கனவுகளைச் சுமந்து தமிழ் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் இன்னும் வேகமாகச் செயல்பட தமிழ்நாட்டில் வாழும் அனைத்து சமுதாய மக்களும் ஒன்று சேர வேண்டும் என அவர் பிறந்த இந்த நன்னாளில் பணிவன்புடன் வேண்டுகிறது!

தூய்மை பாரதம்! தூய்மைத் தமிழகம்!

நாடெங்கும் காந்திய வழியில் தூய்மைப் படுத்தும் திட்டத்தை பாரதப் பிரதமர் அவர்கள் அறிவித்து அவரே முறைப்படி தூய்மைப்படுத்தி இந்தத் திட்டத்தைத் துவங்கி வைத்துள்ளார்! நாடு முழுவதும் உள்ள அரசியல் பிரபலங்கள் பிரதமரைப் போலவே தூய்மைத் திட்டத்தில் இணைந்து ஆங்காங்கே தூய்மைப் பணிகளில் இறங்கியுள்ளனர்! இதனைத் தொலைக்காட்சி செய்தி ஊடகங்களின் வாயிலாகக் காணும் போது பெரும்பாலானவர்களின் செயல் புகைப்படத்திற்கு காட்சி கொடுத்து தாங்கள் இந்தச் செயலைச் செய்வது மேலிடத்திற்குத் தெரிய வேண்டும் என்பது போலத்தான் உள்ளதே தவிர உண்மையான அக்கறையுடன் தூய்மைப் பணியில் ஈடுபடுவதாகத் தெரியவில்லை! எனினும் துப்புறவுத் தொழிலாளர்கள் வற்புறுத்தலின் பேரில் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படுவது ஆங்காங்கே தென்படுகிறது!  தனி மனிதர் தாமாக மனமுவந்து திருந்தாத வரை இந்த நாடு பாரதப் பிரதமர் அவர்கள் எதிர்பார்ப்பது போன்று உண்மையிலேயே ஒரு குறிப்பிட்ட காலத்தில் அவரது இலக்கு எட்டப்படும் என்பதாகத் தெரியவில்லை! ஒரு தெருவில் தனி மனிதர் திருந்தினால் அந்தத் தெருவே தூய்மையடையும்!  ஒரு தெரு தூய்மையடைந்தால் அந்தத் தெருவைக் காணும் அ

விவேகானந்த சித்தர்!

நோக்கம் எதுவென்பதை முதலில் தீர்மானி! அதுவே இலக்கு என்பதை உறுதி செய்து கொள்! கையில் பணம் இல்லையே, உடலில் வலு இல்லையே, உதவி செய்ய நண்பர்கள் இல்லையே, என்றெல்லாம் யோசித்து நேரத்தை வீணாக்காதே! இலக்கை நோக்கி அடியெடுத்து வை! தொடர்ந்து முன்னேறு!! சோதனைகள் விலகும்!!! பாதை தெளிவாகும்!!!! நோக்கத்தை அடைந்தே தீருவாய்!!!!! அதை யாராலும் தடுக்க முடியாது!!!!!!                                                                             இருபதாம் நூற்றாண்டுச் சித்தர் விவேகானந்தர்!

சாத்தான்கள் வேதம் ஓதுகின்றன!

தமிழகத்தில் உள்ள ஆளும் இயக்கத்திற்கு எதிரான மத்திய மற்றும் மாநில இயக்கங்கள் தமிழகத்தில் முழுமையான மதுவிலக்குக் கோரி அடிக்கடி அறிக்கைகள், போராட்டங்கள், விழிப்புணர்வுக் கூட்டங்கள், விழிப்புணர்வு நடைப்பயணங்கள் போன்றவற்றை மேற்கொண்டிருக்கின்றன! தேசத்தந்தையின் பெயர் தாங்கிய இயக்கமும் இவற்றில் அடக்கம்! இந்த இயக்கங்கள் எல்லாம் ஏதோ தற்பொழுதுதாம் தமிழகத்தில் துவங்கியவை போலவும், தமிழக மக்களை தற்பொழுதுள்ள ஆளும் இயக்கம் மது போதையில் வீழ்த்தியிருப்பதை இந்த இயக்கங்கள் இப்பொழுதுதாம் கண்ணுற்றது போலவும் பரப்புரைகள் மேற்கொண்டு வருகின்றன! பொதுவாக போதை ஏறிய ஒரு நபருக்கு சுயநினைவு தப்பிவிடுவது இயற்கை! போதை ஏறிய நிலையில் அவரிடம் எந்தவித அறிவுரைகளும் ஏறாதென்பதும் அனைவரும் அறிந்ததே!  மதுவால் வரும் வருமானத்தில் திலைக்கும் தமிழகத்தை ஆளும் இயக்கமும் ஏறக்குறைய இதே போதை நிலையில்தான் உள்ளதென்பதும் மதுவால் விளையும் கேடுகள் பற்றிய அறிவுரைகள் இவர்களிடம் எடுபடாதென்பதும் இந்த இயக்கங்களுக்கு விளங்காததல்ல! மதுவிற்கு எதிராகப் பரப்புரை நிகழ்த்தும் மத்திய மாநில இயங்கங்கள் அனைத்துமே தமிழகத்தில் மதுவை அறிமுகப்

இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்!

நவபாரதச் சிற்பி என்றழைக்கப்பட்ட பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் பிறந்த இந்த நன்னாள் பாரதத்தில் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது ! தமிழகத்திலுள்ள அனைத்து பெற்றோர்களுக்கும் ஐந்தாம் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக கீழ்க்ண்ட வேண்டுகோள்களை விடுக்கிறோம் ! தமிழகத்தில் பிறப்பெடுத்துள்ள பிறப்பெடுக்கும் ஒவ்வொரு குழந்தைகளும் அளவற்ற அறிவுடன் திகழக்கூடியவை ! எனவே தங்களின் குழந்தைகளின் கேள்விகளைப் புறக்கணிக்காதீர்கள் ! கேள்விகள் கேட்கக்கேட்கத்தான் அந்தக் குழந்தைகளின் அறிவுத் திறன் வளரும் !  அவர்களின் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க இயலாவிட்டால் முடிந்தவரை அடுத்தவரிடம் கேட்டாவது அவர்களி ; ன் அறிவுத்திறன் மேம்பட உதவுங்கள் ! எந்தக் காரணம் கொண்டும் குழந்தைகளை அடித்து வளர்க்காதீர்கள் ! உங்களின் தனிப்பட்ட கோபங்களுக்கு வடிகாலாகக் குழந்தைகளை அடிப்பதை தயவு செய்து நிறுத்துங்கள் ! அடிபட்டு வளரும் குழந்தைகள்தாம் எதிர்காலத்தில் எவர் பேச்சையும் கேளாமல் முரட்டுத்தனமாக வளர்ந்து தீவிரவாதிகளாக மாறும் வாய்ப்புகளுக்குக் கா

தமிழக இளைய சமுதாயமே உங்களின் வருங்கால நிலைப்பாடு என்ன?

தமிழகத்தில் புதிதாகத் துவக்கியுள்ள பிரபலமான நாளிதழின் தiலைப்புச் செய்தியினைப் படிக்க நேர்ந்தது! 2016 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு தமிழகத்தில் உள்ள அரசியல் இயக்கங்கள் தயாராகி வருவதாகவும் குறிப்பாகக் கூட்டணிகள் எவ்வாறு அமையுமென்பது குறித்தும் அந்த நாளிதழ் இன்றைய அரசியல் இயக்கங்களின் மன நிலையைக் கணித்துச் செய்தி வெளியிட்டுள்ளது! இந்தத் தேர்தலைச் சந்திக்க உள்ள தமிழகத்தின் இரு பிரதான இயக்கங்களின் நிலைப்பாடு அந்த இயக்கங்களின் தலைவர்கள் செய்துள்ளதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக வெளிவர இருக்கும் வாய்மை மன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில்தாம் அவற்றின் எதிர்காலத்தைத் தமிழக மக்கள் தீர்மானிப்பார்கள் என அந்தச் செய்தி கூறுகிறது! இந்த இரு அணிகளில் மட்டுமே தேர்தலுக்குத் தேர்தல் பச்சோந்தி குண நி;றம் காட்டி அணி மாறித் தங்களின் வாக்கு வங்கிச் சதவிகிதத்தை இங்குள்ள ஏராளமான உதிரி இயக்கங்கள் (குறிப்பாக சாதியம் சார்ந்த அரசியல் இயக்கங்கள்) தக்க வைத்துக் கொண்டு தங்கள் இயக்கம் சாதிய அடிப்படையில் செல்வாக்கு வகிக்கும் குறிப்பிட்ட சில இடங்களை மட்டுமே கைப்பற்றித் தொடர்ந்து தங்களி

ஒரு அப்பாவிப் பாமரனின் சந்தேகம்!

தமிழக முன்னாள் முதல்வர் ஊழல் வழக்கில் சிறை தண்டனை அடைந்து தனது பதவியை இழந்தவுடன் அவருக்குப் பதிலாக ஒரு புதிய முதல்வர் பதவியேற்றார்! நாடு முழுவதும் என்ன நடக்கிறது என ஊடகங்கள் வாயிலாகக்கூட மக்கள் தெரிந்து கொள்ள இயலாது செய்தி ஊடகங்கள் முடக்கப்பட்ட நிலையில் பதவியேற்றவுடன் புதிய முதல்வர் உடனடியாக கருநாடகத்திற்கு ஊழல் குற்றத்தில் சிறை சென்ற பழைய முதல்வரைப் பார்க்கச் சென்றது அரசு முறைப் பயணமாகக் கருதப்படலாமா? இந்தப் பயணத்திற்கு ஆன செலவு முழுவதும் அரசின் வரிப்பணத்திலிருந்து செலவிடப்படுவது!  சிறை தண்டனை பெற்ற ஒருவரை காண்பதற்காக ஒரு முதல்வர் மக்களின் வரிப்பணத்தில் செல்வது அதிகார விதி மீறலாகக் கருதப்படுமா? இவர் மட்டுமன்றி பெரும்பாலான அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும்பாலானவர்கள் கருநாடக மாநிலத்திற்கு இதே காரணத்தை முன்னிட்டுச் சென்றது அரசின் வரிப்பணத்தில் என்றால் மக்களின் வரிப்பணம் காரணமின்றி வீணடிப்பது சட்ட மீறலா? நாடு முழுவதும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில் அதிகாரத்தில் உள்ளவர்கள் முழுவதும் தமிழகத்திலேயே இல்லை கோட்டையே காலி

தமிழ்நாட்டு மக்கள் ஊழலுக்கு ஆதரவானவர்களா?

இலஞ்சமும் ஊழலும் புற்று நோயாகப் பரவியுள்ள நம் நாட்டில் தற்பொழுது மக்களே ஊழலுக்கு ஆதரவாக இருப்பதாக ஒருவித அச்சம் தோன்றுகிறது! ஒரு சாதாரண சாதிச் சான்றிதழ் துவங்கி அரசு மானியம், அரசின் உதவித் தொகைகள், அரசுப் பணி நியமனங்கள், கட்டுமான ஒப்பந்தங்கள், என ஒவ்வொரு மட்டத்திலும் ஆட்சியாளர்களும் அரசு அலுவலர்களும் கூட்டணி அமைத்து புற்று நோயாக வளர்த்துள்ள இலஞ்சமும் ஊழலும் புரையோடியவாறு நம் நாடு மிகவும் பலவீனப்பட்ட நிலையில் உள்ளது! தமிழ்நாட்டு மக்களை இன்றுள்ள பலமான இரண்டு திராவிட இயக்கங்களின் ஆதரவாளர்களாக வாக்கு சதவீத அடிப்படையில் கணக்கிட்டால் கிட்டத்தட்ட 55 சதவீத மக்கள் இரண்டு இயக்கங்களின் ஊழலையும் ஆதரிப்பவர்களாக உள்ளதாகத்தான் அர்த்தம்! மீதமுள்ள வாக்களிக்காத 20 சத மக்கள் தவிர 25 சதவீத உதிரிக்கட்சிகளை ஆதரிக்கும் மக்கள் அந்த உதிரிக் கட்சிகள் பெரும்பாலும் இந்த இரண்டு பலம் வாய்ந்த திராவிட இயக்கங்களைச் சார்ந்தே தேர்தல்களில் களம் இறங்குவதால் அவர்களும் ஊழல் இயக்கங்களுக்குத் துணை போன நிலையில் ஊழல் இயக்கங்களாகவே கருத வேண்டிய நிலையில் உள்ளனர்! இந்த நிலையில் ஊழலைப் பற்றிப் பேசவே தகுதியற்றவர்கள் ஒர

அமைதிப் பூங்கா!

தமிழகத்தில் ஆளும் இயக்கத் தலைவி அவர்கள் ஊழல் வழக்கில் பதவி இழந்ததும், தமிழத்தில் ஆங்காங்கே பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்டும், அவரது கைதினைக் கண்டித்துத் தாமாகவே கடைகளை அடைத்தும், தங்களின் கண்டனத்தைத் தெரிவித்ததாக ஆளும் கட்சியின் தொலைக்காட்சி இயக்கம் செய்திகளை கூறிக் கொண்டிருக்கிறது! பொதுமக்கள் எதிர்க்கட்சித் தலைவருக்கும் ஒரு குறிப்பிட்ட பாஜக தலைவருக்கும் எதிராகக் கண்டனம் தெரிவித்து அவர்களது உருவப் பொம்மைகளை எரித்தும், ஆங்காங்கே போக்குவரத்து மற்றும் இரயில் மறியல் போராட்டங்கள் நடத்துவதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துக் கொண்டிருக்கிறது! தமிழக மக்கள் எப்பொழுதும் பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த தொலைக் காட்சி ஊடகங்களைக் கண்டு கழித்து செய்தி ஊடகங்களைப் புறக்கணிப்பதால் இதைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்ட கேபிள் தொலைக்காட்சி வசதியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஆளும் இயக்கம் தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதைக்கூட இது போன்ற ஊடகங்கள் வாயிலாகத் தமிழக மக்கள் தெரிந்து கொள்ள இயலாத வண்ணம் தங்கள் தலைவி கைது செய்யப்பட்ட செய்தி வெளியாகத் தொடங்கியது முதல் தமிழகததில் மின்சார வசதியை நிறுத்தியும், பின்னர

தமிழகத்தில் தொலைய வேண்டும்! அரசியல் தற்கொலைகள்!

தமிழகத்தில் ஆளும் இயக்கத் தலைவி அவர்கள் ஊழல் குற்றச்சாட்டில் கருநாடக வாய்மை மன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு சிறை தண்டனை பெறப்பட்ட செய்தியை அறிந்ததும் தமிழகத்தில் ஆங்காங்கே தீக்குளித்தும், தூக்கிக்கிட்டுக் கொண்டும், மாரடைப்பாலும் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் இறந்ததாக ஊடகங்கள் வாயிலாக அறிந்து ஐந்தாம் தமிழ்ச்சங்கம் அவர்தம் குடும்பத்தவர்க்கு தம் ஆழ்ந்த வருத்தங்களைப் பதிவு செய்கிறது! தீக்குளித்தும், தூக்கிட்டும் மரணமடைந்தவர்களின் குடும்பங்களின் நிலையை எண்ணி இரக்க மனம் படைத்த எவருமே மனம் கலங்காதிருக்க மாட்டர்! விலை மதிப்பற்ற உயிர்களை ஊழல் அரசியல்வாதிகளின் உயர் செல்வாக்கு அறியாமல் அப்பாவியான வசதி வாய்ப்பற்ற மக்கள் தமது இன்னுயிர் துறப்பது இனியும் தொடரத் தமிழராய்த் தமிழகத்தில் பிறந்த எவரும் அனுமதிக்கக்கூடாது! தற்கொலை செய்து கொண்டவர்கள் அனைவருமே வசதி குறைவானவர்கள் என்பதுவும், இது போன்றவர்கள் தங்களின் குடும்பச் சுமை தாளாமல் தங்களின் மரணத்திற்குப் பின்னர் கிடைக்கும் கட்சி நிதி உதவியிலாவது தங்கள் குடும்பத்தினரின் ஏழ்மை நிலை தொலையட்டும் என்ற நோக்கில் செயல்படுவதாகப் பரவலான கருத்தும் தமிழகத

நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது

தமிழக முதல்வர் மீது இன்று வாய்மை மன்றத்தில் வரலாற்றுத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது! இந்த நாட்டில் இன்னும் ஏராளமான மனு வாய்மைச் சோழர்கள் துணிச்சலாகத் தம் கடமையைச் செய்து வருகின்றனர் என்பதற்கு பெங்களுரு வாய்மை மன்ற நடுவரின் வாய்மை தவறாத தீர்ப்பு உறுதி செய்துள்ளது! கண்கட்டப்பட்ட வாய்மை தேவதையின் கண்களில் வடிவது ஆனந்தக் கண்ணீர்! இந்த வரலாற்றுத் தீர்ப்புக்கு எதிராக இன்று ஆளும் கட்சியினர் ஆங்காங்கே பொதுச் சொத்துக்களையும் தனியார் சொத்துக்களையும் நாசப்படுத்தி தமிழக மக்களைக் கண்ணீர்க்கடலில் மூழ்கடித்துள்ளனர்! மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என முழங்கியவர்கள் தங்களின் அராஜகத்தால் வரும் தேர்தலில் அடுத்த தீர்ப்புக்குத் தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்! நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது இங்கு சிரிப்பவர் யார்? அழுபவர் யார்? தெரியும் அப்போது என மக்கள் திலகம பாடிய ஒரு பாடல் வரிகள்தாம் இப்பொழுது எமக்குள் ஏனோ வந்து விழுகிறது!

நாணல் போல வளைவதுவும் சட்டமாகலாம்!

பதருன்னிசா அந்த செய்தியை கேட்டவுடன் அவளெதிரே உலகமே சுழலுவது போல தோன்ற சட்டென மயங்கி விழுந்தாள். மயக்கம் தெளிந்து எழுந்த அவளுக்குள் இயல்பாகவே அமைந்திருந்த மன உறுதி அவளது பதட்டத்தை விலக்க தனது மூன்று குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு தன் கணவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவ மனைக்கு விரைந்தாள்!  பலத்த அடிபட்ட நிலையில் ஏராள செலவு பிடிக்கும் என்ற என்ற செய்தியுடன் அவசர வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற தனது கணவரை காண்கையில் மீண்டும் அவளது மன உறுதி குலைந்தாலும் சுதாரித்துக்கொண்டு எப்படியேனும் தனது கணவரது உயிரை காத்து அவரை பழைய நிலையில் நடமாடச் செய்வதென உறுதி கொண்டாள்! உறவுகள் உதவவே என்ற தர்மம் தொலைந்த பூமியில் பிறந்து தொலைந்த அவளால் தனது கணவரை பழைய நிலைக்கு மீட்க இந்த பூமியில் தனது நடுத்தர குடும்பம் தனது கணவரது விபத்திற்கு முன்னர் வாங்கியிருந்த வீட்டையும் நகைகளையும் விற்றே ஏராள மருத்துவ செலவுகளை ஈடுசெய்ய முடிந்தது! கணவரின் வருமானமும் இழந்த நிலையில் தனது மூன்று குழந்தைகளை படிக்க வைக்கவும் தனது கணவரை ஓரளவிற்கு நடமாட செய்யவும் அவள் பட்ட பாடுகள் ஏடுகளில் எழுத வேண்டுமெனில் ஏராள

அரசு மற்றும் தனியார் துறைகளில் ஒழுக்கம் மேன்மையுற!

1.அரசு மற்றும் தனியார் என எந்தத் துறையில் வேலை செய்தாலும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் தம்முடைய வேலைக்கு அரசாங்கமெனில் மக்களின் வரிப்பணத்திலும், தனியார் எனில் தம் போன்ற ஊழியர்களின் உழைப்பிலும்தாம் ஊதியம் கிடைக்கிறது என்பதை மனதில் கொண்டு அதற்கேற்ற உழைப்புடன் பணி நேரத்தை முழுமையாக நிறைவு செய்தல்! 2.தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாகனங்களை தம்முடைய பணிக்கென மட்டுமே பயன்படுத்துதல், மற்றும் அந்த வாகனத்திற்கு ஆகும் எரிபொருள், பராமரிப்பு போன்ற செலவுகளுக்கு ஆகும் உண்மையான கணக்கு வழக்குகளை நேர்மையாகப் பராமரித்தல்! எக்காரணம் கொண்டும் குடும்பத்தினருக்காகப் பயன்படுத்தாதிருத்தல்! 3.அரசுத் துறை என்றால் நாம் மக்களின் பணி செய்வதற்காக இந்தப் பணியில் அமர்ந்திருக்கிறோம் என்ற உணர்வுடனும், தனியார் துறை என்றால் நாம் பணியாற்றும் நிறுவனத்தின் மேன்மைக்காகப் பாடுபட்டு நம் கடின உழைப்பிற்கேற்ற ஊதியமும், பணி உயர்வும் கிடைக்க வேண்டுமென்று மிகுந்த ஒழுக்கத்துடன் வேலை செய்தல்! 4.அரசு மற்றும் எந்தத் தனியார் துறையாக இருந்தாலும் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் போன்றவர்கள் நம்மை நம்பி ஒப்படைக்கும், பணம்

படித்ததில் பிடித்த கதை!

புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்ட்டாய் அவர்களின் சிறுகதை ஒன்றைப் படிக்க நேர்ந்தது!  தனி மனித வாழ்வின் மேன்மையை மிக அழகாக அவர் கையாண்ட நேர்த்தி மிகவும் பிடித்ததால் அதனைச சுருக்கமாக இங்கு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்! ரஷ்யாவின் ஒரு கிராமத்துத் தலைவராக ஒழுக்கமுடன் வாழ்ந்த வசதியான ஒரு பெரியவரும், அதே கிராமத்தில் அளவாகக் குடிப்பது, மற்றும் பொடிபோடுதல் போன்ற பழக்க வழக்கங்களுடன் நெஞ்சில் ஈர உணர்வுள்ள அவரது நண்பருமான இன்னொரு பெரியவரும் இயேசுவின் எருசலேம் நகருக்குப் புனித யாத்திரைக்குப் புறப்பட்டனர்! போதிய பணம் மற்றும் உணவுகளுடன் புறப்பட்ட இருவரில் முதலாமவர் தாம் கிராமத்தில் விட்டு வந்த பணிகளைத் தங்களின் வாரிசுகள் சரியாகக் கவனிப்பார்களோ, தவறு ஏதேனும் நிகழ்ந்துவிடுமோ, இந்தப் புனித யாத்திரையைத் தள்ளிப் போட்டிருக்கலாமோ என்ற பல்வேறான எண்ணங்களைத் தம் கிராமத்தைச் சுற்றியவாறு பயணிக்க இரண்டாமவரோ எவ்விதக் கவலைகளுமின்றித் தம்முள் இறை சிந்தனையோடு மட்டுமே பயணப்பட்டார்! ஆங்காங்கே இது போன்ற பயணிகளுக்கு மக்களிடயே கிடைக்கும் பணிவிடைகளுடன் நீண்ட தொலைவு கடந்த நிலையில் ஒரு பஞ்சம் தாண்டவமாடி

சாலை ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்!

1.சாலையில் ஒரு வாகனத்தை முந்திச் செல்ல முயலும்போது எதிரே ஒரு வாகனம் வந்தால் எதிரில் வருபவரின் இடத்தைத் தாங்கள் ஆக்கிரமிப்பதால் குற்றம் தங்களுடையதே என உணர்ந்து பின் வாங்குதல்! 2.குண்டும் குழியுமான சாலை என்பதற்காக இடது புறம் செல்வதற்குப் பதிலாக வலது புறம் சாலை நன்றாக இருக்கிறது என்பதற்காகச் செல்லும்போது எதிரே வருபவர்களைக் கண்டால் இடது புறம் ஒதுங்கி வழி விடுதல் நம் கடமை என உணர்தல்! 3.வாகனங்களை வலது மற்றும் இடது புறமாகத் திருப்பும்போது சிக்னல் விளக்குப் போடுதல் அல்லது உரிய சைகையினைத் தங்கள் இடது வலது கைகளால் காட்டித் திரும்புதல்! 4. நெருக்கத்தில்  மஞ்சள் சிக்னல் விழுவதைக் கண்டவுடன் வாகனத்தை உடனடியாக நிறுத்தத் தேவையில்லை! அப்படி நிறுத்தினால் நம்மைப் பின்தொடர்ந்துவரும் அவசரக் குடுக்கைகள் நமது வாகனத்தின் பின்பக்கத்தில் வந்து மோதக்கூடும்! அதே சமயம் தொலைவிலேயே மஞ்சள் சிக்னலைப் பார்த்துவிட்டால் கட்டாயம் தங்களின் வாகனத்தை நிறுத்த வேண்டும் என்ற உணர்வுடன் நிறுத்துதல்! 5.சிகப்பு சிக்னல் இருக்கும்போது சாலையில் எந்தப் போக்குவரத்து இல்லையென்றாலும் அவசரப்படாமல் பச்சை விளக்கு போடும்வரை