பிரபஞ்ச சக்திகள்!


                    உலகெங்குமுள்ள மக்களின் நம்பிக்கைப்படி காலம் காலமாகக் கடவுள் ஒருவர்தான் எனும் நம்பிக்கை சரியல்ல எனப் பிரபஞ்ச சக்திகள் என்னுள் ஒரு புதிய சிந்தனையைத் தோற்றுவித்து விட்டன!

உலகில் உயிர்கள் தோன்றிய பின்னர் படிப்படியாக மாற்றங்கள் அடைந்து மனித இனம் மற்ற உயிரினங்களை விடச் சற்று மேம்பட்டு சிந்திக்கின்ற திறனை அடைந்தன!

நாகரீகமின்றி கண் போன போக்கில் வனங்களில் கூட்டம் கூட்டமாகத் திரிந்து காட்டுமிராண்டித்தனமாக வாழ்ந்து வந்த மனித இனம் கால வெள்ளத்தில் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து, தங்களின் வாழ்க்கை முறைகளை மேம்படுத்திக் கொள்ளத் துவங்கியது!

எல்லையில்லாத உலகில் நாடோடிக்கூட்டமாக வாழ்ந்த மனித இனம் தனக்கென இருப்பிடம் தனக்கென வேளாண்மை செய்ய வயல்கள் என எல்லை வகுக்கத் துவங்கின!

அதுவே பின்னர் விரிவடைந்து இனம் மொழி மதம் நாடு எனப் பேதங்கள் உருவாகத் துவங்கின! பின்னர் தனது எல்லைகளை விரிவு படுத்துவதென்ற செயலில் ஈடுபடத் துவங்கி போர்களில் ஈடுபட்டு மனித இனம் தங்களுக்குள் அடித்துக் கொண்டு வாழத் துவங்கின!

ஓவ்வொரு இனமும் கடவுள் வழிபாட்டை ஏற்படுத்தத் துவங்கின!
இதன் காரணமாக மனித இனத்திற்குள் கருத்து பேதங்கள் தோன்றத் துவங்கின! இந்தக் கருத்து மோதல்கள் வலுவடைய வலுவடைய உலகில் நன்மைக்கென ஒரு சக்தியும் தீமைக்கென ஒரு சக்தியும் உருவாகின!

மனித உயிர்கள் இறப்பைச் சந்தித்தாலும் அவற்றின் இயல்புகள் அந்தந்த காலத்திற்கேற்ப மாறத் துவங்கின! இறப்பிற்குப் பின்னாலும் மனித உயிர்கள் மீண்டும் மீண்டும் மனித உடல்தாங்கி தங்களின் முற்பிறப்பின் நோக்கங்களுக்கேற்ப இந்த பூமியிலேயே தொடர்ந்து வாழத் துவங்கின!

எனினும் பெரும்பாலான உயிர்கள் பிரபஞ்ச வெளியிலேயே சஞ்சரித்துக்கொண்டு காலம் இடம் தேர்ந்தெடுத்து பூமியில் பிறப்பெடுக்கத் துவங்கின! பிரபஞ்ச வெளியில் சஞ்சரித்து வாழும் இந்த மனித உயிர்களில் தீமை செய்யும் சக்திகளும் அவற்றை எதிர்க்கின்ற நன்மை செய்யும் சக்திகளும் நிலைபெற்றன!

இவைகளின் செயல்பாடுகளை மண்ணில் வாழும் மக்களின் எண்ணங்கள்தான் இன்று வரை தீர்மானித்து வந்துள்ளன! இவற்றின் சதவீதம் நன்மைக்கு ஆதரவாக அதிகரிக்கும்போது உலகில் நன்மைகள் அதிக அளவிலும் தீமைக்கு ஆதரவாக அதிகரிக்கும்போது உலகில் தீமைகளும் விழையத் துவங்கின!

இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு காலம் காலமாக பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்துள்ளதாலேயே உலகம் பல்வேறு விதமான கால கட்டங்களில் மிகப்பெரிய போர்களையும் இயற்கைப் பேரிடர்களையும் சந்தித்து வந்துள்ளது!

தமிழினத்தின் அறிவிற்கும் ஆய்விற்கும் எட்டிய வகையில் தமிழகத்தில் வள்ளுவப் பெருந்தகை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மனித சமுதாயத்தின் நன்மைக்கென வள்ளுவத்தைப் பாடி வைத்தார்! வடக்கில் புத்தர் தோன்றி வடவர்களிடம் தோன்றிய மூடப்பழக்க வழக்கங்களை களைய முற்பட்டார்!

இவர் போன்றே உலகில் இதே கால கட்டத்தில் தோன்றிய இயேசுவும் நபிகளும் தங்களின் கருத்துக்களைப் போதனையாகத் தங்களின் மக்களுக்கு அறிவுறுத்தினர்!

மூடப்பழக்க வழக்கங்களில் மூழ்கித் திலைத்த பழைமைவாதிகளால் இந்த நல்லவர்கள் தாங்கள் வாழ்ந்த காலம் முதற்கொண்டு பிரபஞ்ச வெளியில் நிலை கொண்டு மறைவாக வாழும் இந்த நாள் வரை எதிர்க்கப்பட்டே வருகின்றனர்!

இதன் பின்னர் தோன்றிய பல்வேறு நல்ல சக்திகளும் மனித உயிர்களின் மேன்மைக்கென கடுமையாகப் போராடி வந்துள்ளனர்! தமிழகத்தை வழி நடத்திய மூவேந்தர்களின் ஆட்சிக்காலத்தில்தான் வடவர்கள் நம் தமிழகத்தில் பக்தி மார்கம் என்ற பெயரில் ஆதிக்கம் செழுத்தத் துவங்கினர்!

அவர்களை நல்வழிப்படுத்தவே தமிழகத்தில் பதினென் சித்தர்கள் தோன்றினர்! அவர்களுக்குத் தலைமை தாங்கி இன்றுவரை நம் தமிழகத்தை அமைதிப் பூங்காவாகக் காத்து வருபவர்கள் தமிழ்க் கடவுளர்களாம் முருகனும் தொல்காப்பியம் சுட்டும் மாயோன் எனப்படும் கண்ணனுமான சைவ வைணவப் பிரதான பிரபஞ்ச சக்திகளே!

இந்தச் சக்திகளின் துணையை வாய்மை உணர்வை உயிர் நோக்கமாகக் கொண்டவர்கள்தாம் அடைய முடியும்! தமிழருக்கு இந்தச்சக்திகளின் துணை ஏராளம் உண்டு!

இவர்களின் துணையுடன் தமிழகத்திலும் உலகெங்கிலும் வாழும் வாய்மை  எண்ணம் நிறைந்தோரின் உணர்வுகளை மேம்படுத்தி உலகை ஆளும் சக்தி தமிழுக்கு உண்டு!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!