இடுகைகள்

ஏப்ரல், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு சாமானியனுக்கு மறுக்கப்பட்ட சனநாயகக் கடமை

xU rhkhdpaDf;F kWf;fg;gl;l rdehaff; flik 24.04.2014 Mfpa ,d;W thf;fspg;gjw;fhf thf;Fr;rhtbf;Fr; nrd;Nwd;. thf;fhsu; gl;baypy; vdJ ngau; ePf;fg;gl;bUe;j fhuzj;jhy; ,e;jj; Nju;jypy; thf;fspf;Fk; flikiar; nra;a ,ayhky; tPL jpUk;gpNdd;. gy Mz;Lfs; ehq;fs; FbapUe;j gioa ,lj;jpy; vq;fs; FLk;g cWg;gpdu;fspd; ngau;fs; thf;fhsu; gl;baypy; ,lk; ngw;wpUe;jd. ehq;fs; jw;nghOJ tPL khwp Ntwplj;jpy; trpg;gjhy; Nju;jy; fkprd; mikj;jpUe;j Kfhkpy; vq;fsJ Gjpa Kftup khw;wj;ijg; gjpT nra;jpUe;Njhk;. vdpDk; vq;fs; FLk;g cWg;gpdu;fspd; ngau;fs; Gjpa tpyhrj;jpy;; khw;wk; nra;ag;glhky; gioa ,lj;jpNyNa cs;sJ. khwhf vd;Dila ngau; kl;Lk; me;jg; gFjp thf;fhsu; gl;baypy; ,Ue;j ePf;fg;gl;lJld; Gjpa tpyhrj;jpy; ,izf;fg;glTkpy;iy. vjw;fhf ,J Nghd;w Kfhk;fis elj;Jfpd;wdu;. ,jw;nfd Vuhskhd kf;fspd; tupg;gzj;ij tPz; nra;fpd;wdu; vd;gJ vd; Nghd;w rhkhdpaDf;F tpsq;ftpy;iy. vd; Nghd;w flik jtwhJ gzpf;Fr; nry;Yk; egu;fSf;F thf;fhsu; gl;baypy; jq;fs; ngau; cs;sjh vd;gij mwpe;J nfhs;tjw;F Neuk; xJf;f Kbtj

எது சனநாயக இயக்கம்?

தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் இயக்கங்களுமே தங்களின் இயக்கங்கள் சனநாயக அடிப்படையில் இயங்குவதாகவும்,.  தலைவர்கள் துவங்கி சாதாரணக் கிளைச் செயலர் வரை தங்களின் இயக்கங்களில் தேர்தல் வாயிலாகவே இயக்க நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவதாகவும் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றன. ஆனால் உண்மை நிலை இதற்கு மாறாகத்தான் உள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியென மக்களுக்கு விளங்காமலில்லை. பெரிய இயங்கம் துவங்கி மிகச் சிறிய இயக்கம் வரை தலைவர் முதலாக அதி முக்கியமான பொறுப்புகளை வகிப்பவர்கள்  அந்தந்த இயக்கம் துவங்கிய காலம் தொடங்கி இன்றுவரை தத்தம் பதவியில் நிரந்தரமாக ஒட்டிக்கொண்டுதான் தொடர்கின்றனர். தமிழகத்தின் போதாத குறைக்கு இவர்களின் வாரிசுகளும் படிப்படியாக இந்த இயக்கங்களில் மெல்ல மெல்ல நுழைக்கப்பட்டு அவர்களின் வளர்ச்சியும் அசுரத்தனமாக வளர்ந்து  தங்களின் பெற்றோர் வகித்த பதவிகளைத் தம் வயப்படுத்தி இயக்கத்தைத் தம் கட்டுப்பாட்டில் கொண்டுவரத் துடிக்கின்றனர் இவர்களின் பதவிச்சண்டைகளால் தமிழகம் படும் பாடு உலகிற்கே தெரியும். ஆக எந்த இயக்கமும் தங்கள் இயக்கம் சனநாயக இயக்கம்தான் என மார் தட்டிச்

பல தொழில் கற்றல்

பல தொழில் கற்றல் இளம் வயதிலேயே எனக்கு பலவகையான தொழில்கள் கற்கும் வாய்ப்பு அமைந்தது.  எனது தாய் வழித் தாத்தா அமரர் கந்தசாமி அவர்களை ஊரில் சோடாக்காரர் என்றால்தான் தெரியும். என்னையும் சோடாக்காரருடைய பேரனா என்றுதான் ஊரார் விசாரித்தறிவர்.  அந்த நாட்களில் குடிசைத் தொழிலாக விளங்கிய சோடா, மற்றும் குளிர்பானங்கள் தயாரித்து விற்றல், திருமணம் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு ஒலி ஒளி அமைத்தல், பெட்ரோமாக்ஸ் லைட் வாடகை, மற்றும் மிதிவண்டிகள் வாடகைக்கு விடல், புதிய மிதிவண்டிகள் விற்பனை, பழைய மிதி வண்டிகளைப் பழுது பார்த்தல், அவ்வப்போது வரும் இரு சக்கர வாகனங்களின் பழுதுகளை நீக்குதல், மகிழுந்து மற்றும் சரக்கு வண்டிகளின் டயர் பஞ்சராவதைப் பழுது பார்த்தல் என அவரது தொழில்களின் வரிசை நீளும். பள்ளிக்குச் செல்லாத வயது துவங்கி பள்ளி இறுதிப் படிப்பு முடியும் வரை நான் பள்ளி நேரம் தவிர மற்ற நேரங்களில் அங்குதான் தவம் கிடப்பேன்.  பள்ளிக் கல்வியோடு தொழிற்கல்வியும் எனக்கு ஏராளமாக அஙகுதான் கிட்டியது. அது தவிர நான் மற்ற நேரங்களில் என் வயதுக்கும் மீறிய பெரியவர்களின் நட்பையும் பெற்றிருந்தேன்.  அவர்களில் மின்சார சாதனங்களைப்

பாரம்பரிய சித்த மருத்துவம்

                    பாரம்பரிய சித்த மருத்துவம் நம்முடைய பாரம்பரிய சித்த மருத்துவத்திற்கும் ஆங்கில வழி மருத்துவத்திற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. நம்முடைய போதாத காலம் ஆங்கிலேயர்கள் இந்த மண்ணில் கால் பதித்து அவர்களுடய மருத்துவ முறைக்குள் நம்மைப் புகுத்திவிட்டனர். ஆங்கில வைத்தியம் அசைவ உணவு வகைகளை மனிதர்களுக்குப் பரிந்துரைக்கின்றது. மாறாக நம் சித்த வைத்திய முறையோ அசைவ உணவு வகைகள் நஞ்சுக்கு இணையானதென வலியுறுத்தி அவைகளைத் தவிர்க்;குமாறு அறிவுறுத்துகிறது. வள்ளுவச் சித்தரும் உயிர்களைக் கொன்று தின்றல் பாவம் என்றும் பிற உயிர்களைக் கொல்லாதவர்களை அவை கைகூப்பித் தொழும் எனவும் இயம்பியுள்ளார். அசைவ உணவுப் பழக்கத்தில் திலைக்கும் நம் மக்கள் இந்தப் பழக்கத்தைக் தவிர்க்க இயலாத காரணத்திற்காகவே நம் சித்த மருத்துவ முறையைப் பயன்படுத்தத் தயங்குகின்றனர். மேலும் நம் பாரம்பரிய சித்த மருத்துவம் பாரம்பரியக் குடும்ப மருத்துவம் என்ற முறையில் தயாரிப்பு முறைகளை இரகசியமாக்கி சித்த மருத்துவத் துறையே வளர வாய்ப்பின்றித் தள்ளாடுகிறது. வெள்ளையரிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிய நம்மவரும் சித்த மருத்துவ ம

நீதான் ஒரு மிருகம் இந்த மதுவில் விழும் நேரம்!

நீதான் ஒரு மிருகம் இந்த மதுவில் விழும் நேரம்! ஒரு தொலைக்காட்சியின் வேட்பாளர் நேர்முகக் கலந்துரையாடல் நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. அதில் ஆளும் இயக்கத்தின் வேட்பாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  ஒரு பொது மக்கள் பிரதிநிதி மதுவிலக்கு பற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு ஆளும் தரப்பு வேட்பாளர் அளித்த பதில் இதோ இதுதாம்! தமிழகத்தில் மதுக்கடைகளை தாங்கள் அங்கம் வகித்த பழைய இயக்கம்தான் திறந்து வைத்தது. நாங்கள் அதனை இப்பொழுது தொடர்கின்றோம்.  இரண்டு தலைமுறைகள் இதனால் நாசமாகிவிட்டன. இப்பொழுது எவர் குடிக்காமலில்லை? நீங்கள் வேண்டுமானால் டாஸ்மாக் கடைக்குச் சென்று பாருங்கள். அங்கு பெண்கள் கூட அமர்ந்து சர்வசாதாரணமாகக் குடிப்பதைக் காணலாம். நாங்கள் இந்த நிலையில் மதுவிலக்கு கொண்டு வந்தால் கள்ளச்சாராய வியாபாரிகள் பெருகி விடுவர். ஆந்திரத்திலிருந்தும் புதுச்சேரியிலிருந்தும் கர்நாடகத்திலிருந்தும் மது வகைகளைக் கடத்திவந்து இங்கு விநியோகம் செய்பவர்கள் ஒரே நாளில் கோடீசுவரர்கள் ஆகிவிடுவர். எனவே எங்களால் மதுவிலக்கை இந்த நிலையில் அமல்படுத்த இயலாது என்று பதிலலித்தார். அவர் இந்த பதிலை உச்சரிக்கும்போத

தர்மபுரி

தர்மபுரிப் பேருந்து எரிப்பு வழக்குச் சம்பவம்! கொலைக் குற்றங்கள் பெரும்பாலும் இரு நபர்களுக்கிடையே ஏற்படும் சண்டையின்போது உணர்ச்சி வசப்படுதல் காரணமாகவே நிகழ்கின்றன! இது சம்பந்தப்பட்டவர்களைத் தூண்டிவிடும் பிரபஞ்சத்தில் நிலை கொண்டிருக்கும் தீய சக்திகளின் எண்ண அலைகள் இவர்களின் வெளி மனதை ஆக்கிரமித்தல், அல்லது இவர்களின் உறவுகள், அல்லது நட்பின் காரணமாக இருக்கலாம்! இது போன்ற கணநேரச் சிந்தனைத் தடுமாற்றத்தில் நிகழும் குற்றங்களைச் செய்யும் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை அவர்கள் மனம் திருந்தி வாழக்கூடியவையாக அமைய வேண்டும்! பாதிக்கப்பட்ட குடும்ப உறவினர்களுக்கும் இக்குற்றம் ஏற்பட அமைந்த சூழல் நன்கு விளக்கப்பட்டு அவர்களும் குற்றவாளிக்கு எதிரான மனநிலையினைக் கைவிட்டு, கடுமையான தண்டனையைக் குற்றவாளிக்கு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையைக் கைவிடுமாறு செய்ய வேண்டும்! திட்டமிட்ட கொலைகளைச் செய்யும் குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை அவசியமற்றது என்றே நான் கருதுகிறேன்! இதுபோன்ற குற்றவாளிகளைத் தண்டிப்பது அவர்களின் தேகத்தை தண்டித்து அவர்களின் உலக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதால் நியாயமானதாகலா

தமிழ் ஈழம்

தமிழ் ஈழம் 2014 நாடாளுமன்றத் தேர்தல் களம் விறுவிறுப்படையத் துவங்கிவிட்டது. தமிழகத்தில் சுயேச்சைகளையும் சேர்த்தால் கிட்டத்தட்ட ஏழு முனைப்போட்டி துவங்கிவிட்டதெனலாம். தேர்தல் களத்தில் உள்ள அத்துணை இயக்கங்களும் தாங்கள் வெற்றி பெற்றால் இலங்கைப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டுவோம் என முழங்கி வருகின்றனர். தங்களை இலங்கை மக்களின் ஆதரவாளர்கள் எனப் போட்டி போட்டுக்கொண்டு முழங்கிவரும் இந்த இயக்கங்களின் ஒரு செயலை தமிழக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள் எனக் கருதுகிறோம். முள்ளி வாய்க்கால் படுகொலைகள் உள்ளிட்ட ஏராளமான போர்க் குற்றங்கள் நிறைந்த இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமான கடுமையான இறுதிக்கட்டப் போர் இலங்கையில் நிகழ்ந்து கொண்டிருந்தபோது தமிழகத்தில் அப்போது சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரைகள் நிகழ்ந்து கொண்டிருந்தன. போர் நிகழ்வுகள் உலகிற்கு வெளிவரத் துவங்கியவுடன் இந்த இயக்கங்கள் முதலைக்கண்ணீர் வடிக்கத்துவங்கி அதைத் தங்களின் பரப்புரைகளில் வெளிப்படுத்தின. சில இயக்கங்கள் மத்திய அரசை எதிர்த்து பரப்புரை செய்தன. சில இயக்கங்கள் மவுனம் காத்தன. எனினும் தங்களைத் தமிழீழ ஆதவாளர்களாகக்

இயற்கை விதி!

இயற்கை விதி! பொதுவாக இயற்கை என்பது ஐந்து பூதங்களால் ஆளப்படுவதாக பக்தி மார்க்கம் கூறுகிறது! நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு எனப்படுவையே இவை! இதில் முதல் நான்கும் இயற்கையாக அமைந்தவை! ஆயின் ஐந்தாவதான நெருப்பு பகலவனிடமிருந்துதான் வருகிறது! பூமிப்பந்தில் விழும் கடும் வெயிலில் நன்கு காய்ந்த சருகுகள் சில நேரங்களில் தாமாகவே பற்றிக்கொள்ள வாய்ப்பு உண்டு! இது தவிர காய்ந்த இரண்டு மரக்கிளைகள் உராய்வதால் தீ ஏற்படுகிறது!  மேலும் ஆகாயத்தில் இரண்டு நீர் சுமந்த மேகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும்போது உருவாகும் இடியானது நிலத்திடை வரும்போது அதில் உள்ள வெப்ப ஆற்றல் தீயாக உருவாகிறது! தமிழகத்தில் தோன்றிய சித்தர்கள் பக்தி மார்க்கம் கடைப்பிடித்த யாக முறைகளை எதிர்த்தவர்கள்! அதிலும் குறிப்பாக யாக குண்டங்கள் உருவாக்கி தீ வளர்த்து அதில் மனித உழைப்பில் உருவான பொருட்களை இட்டு வீணாக்குவதை கடுமையாக எதிர்த்தவர்கள்! இது போன்ற யாகங்களால் பயனேதுமில்லை என முற்றிலும் உணர்ந்த ஞானிகள் அவர்கள்! பகலவனுக்குக் கீழ் உள்ள உயிர்கள் அனைத்தும் அதைச் சார்ந்து வாழும் நிலையில் உள்ளதால் இது போன்ற இயற்கைக்கு மாறா

பேரணிகள்!

பேரணிகள்! ஐந்தாம் தமிழ்சங்க வாய்மையே வெல்லும் இயக்க ஆட்சி காலத்தில் நடைபெறப்போகும் பேரணிகள் இனி இப்படித்தான் இருக்கும்! நம் மக்களிடம் நிலவும் தவறான பழக்க வழக்கங்களை களைவதற்கு ஆட்சியாளர்கள் மாணவ சமுதாயத்தை பயன்படுத்திக் கொள்வதை நாம் பல முறை காண்பதுண்டு! வருடத்தில் சில குறிப்பிட்ட தினங்களில் பள்ளிகளில் பயிலும் மாணவச் செல்வங்களை விழிப்புணர்வுப் பேரணி என்ற பெயரில் நீண்ட தொலைவு கடும் வெயிலில் பதாகைகள் ஏந்தியும் முழக்கங்கள் எழுப்பியும் செல்ல வைத்து வதைப்பதை ஏற்புடையதாக அறிவுடையோர் கருதக்கூடாது! குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்போம் என முழக்கமிடும் இதே அரசுகள், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு, குடிபோதை, சுற்றுச்சூழல் மாசுபடுதல், முறை தவறிய வாழ்க்கை முறையால் வாங்கும் எயிட்சு வியாதிகள், போக்குவரத்து விழிப்புணர்வு போன்ற பேரணிகளை முற்றிலும் பள்ளிக் குழந்தைகளை பயன்படுத்தி இனி வரும் காலங்களில் நடத்தக்கூடாதென உச்ச வாய்மை மன்றத்தால் தடை ஆணை ஒன்று நிரந்தரமாக செயல்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது கருத்தாகும்! இது போன்ற பேரணிகளால் சமுதாயத்தில் பெருமளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக எமது அறிவிற