உரிமையில் நான்கு திசை கொண்டோம்! உறவினில் நண்பர்கள் பல கொண்டோம்

உரிமையில் நான்கு திசை கொண்டோம்!
உறவினில் நண்பர்கள் பல கொண்டோம்!

பாரத வரலாற்றைச் சற்று கூர்ந்து கவனித்தால் அதில் மறுக்க இயலாத ஒரு உண்மை மறைந்திருப்பது தமிழக மாணவச் செல்வங்களுக்குத் தெரிய வரும்!

பாரத தேசத்தை மாபெரும் பேரரசுகள் ஆண்டதை எப்படி வரலாற்றிலிருந்து மறைக்க முடியாதோ அதைப் போலவே இங்கு மறைந்துள்ள அல்லது வரலாற்றில் மறைக்கப்பட்டுள்ள உண்மைகளையும் வாய்மை குணம் படைத்த எவராலும் மறுக்க இயலாது!

அசோகச் சக்ரவர்த்தி தொடங்கி பல்வேறு மன்னர்களின் ஆட்சிகாலங்களிலும்,

முகலாயப் பேரரசுகளின் ஆட்சி காலங்களிலும் கூட

வடவர்களால் தமிழ் மூவேந்தர்கள் ஆண்ட நிலப்பரப்பின் மீது ஆதிக்கம் செழுத்த முடியவில்லை!

தமிழர்களின் வீரமும் அவர்களிடம் தனித்திருந்த ஏராளமான நற்குணங்களுமே இதற்கு அதி முக்கிய காரணமாகும்!

பழங்காலத் தமிழர்கள் வீரத்தில் தன்னிகரற்றவர்களாக விளங்கினாலும் வடவர்களுடன் வலுச்சண்டைக்குச் செல்லாமல் வடவர்களின் படையெடுப்பைத் தடுத்து அரசாள்வதில் மட்டுமே கவனம் செழுத்திய போதிலும், அவர்களின் போர்க்குணம் எல்லை மீறும்போது மட்டுமே

இமயம் வரை படையெடுத்துச் சென்று வடவர்களை வெற்றி கொண்ட தமிழின வரலாற்றையும் எவராலும் மறுக்க இயலாது!

தமிழினத்தின் மேன்மை குணத்திற்கும் வடவர்களின் ஆதிக்கப் போக்கை முறியடித்த வரலாறுகளின் வெற்றிக்கும் அதி முக்கிய காரணங்களில் பாவேந்தர் பாடிய அன்பு வழி ஒன்றே பிரதானமானது! அடுத்தது தமிழினத்தின் ஒற்றுமை குணம்!

இவர்தம் ஒற்றுமை உணர்வு குலைந்த தருணங்களில்தான் வடவர்களின் ஆதிக்கம் தமிழகத்தில் வேரூன்றித் தழைத்து தமிழினக் கட்டுமானத்தையே அழித்து விட வழி வகுத்து விட்டது!

இப்பொழுதும் கூடத் தமிழகத்தில் வடவர்களின் ஆதிக்க குணம் மேலோங்கக் காரணமே, அடித்தட்டு மக்களின் சிரமங்களைப் புறக்கணித்துவிட்டு பொய்யான நடிப்பினாலும் வாக்குறுதிகளாலும்; பாமர மக்களின் வாக்கு வங்கிகளை வளைத்து ஆட்சி பீடத்தில் அமர்ந்துகொண்டு பொன் பொருள் மற்றும் அதிகார போதைகளில் திளைப்பது மட்டுமல்லாது,

வடவர்களின் தேசியக் கட்சிகளுடன் பச்சோந்தி குணக் கூட்டு வைத்துக் கொண்டு தமிழினத்தை அடகு வைக்கும் தமிழக அரசியல்வாதிகளின் சுயநலப் போக்குதான்; பிரதான காரணமாகும்!

எனினும் இன்றுவரை வடவர்களின் தேசியக் கட்சிகள் தமிழக அரசியல்வாதிகளின் தயவில்தான் ஆட்சி பீடம் ஏற முடிகின்றது! இந்த அளவிலாவது தமிழினம் பாரதத்தை ஆட்சி செய்வதில் மிகப்பெரும் அங்கமாகத் திகழ்வதை வடவர்கள் சகித்துத்தான் தீரவேண்டும்!

இவை அல்லாது பாரதத்தை ஆட்சி செய்வது தமிழினம்தான் என்பதை வேறு சில காரணங்களாலும் விளக்க முடியும்!

வடவர்களின் இந்தி மொழியின் எழுத்துக்களை அறிவுடையோர் சற்று உற்று நோக்கினாலே போதும்! மொழி வடிவமற்ற வடவர்களுக்கு மொழி அறிவு தந்து அடைக்கலம் தந்தது கூடத் தமிழினம்தான் எனத் தௌ;ளத் தெளிவாக விளங்கிவிடும்!

சங்ககாலத் தமிழிலுள்ள பெரும்பாலான எழுத்துக்களின் அரை வடிவத்தை அப்படியே ஏற்;;;;;;;றுக்கொண்டு தங்களால் எழுதிப் பழக முடியாத ஓ போன்ற சிக்கலான எழுத்;துக்களை தங்கள் வசதிக்கேற்ப மாற்றியமைத்துக் கொண்ட வடவர்களின் மொழி அமைப்பு உண்மை உலகுக்கே நன்கு விளங்கும்!

அது மட்டுமல்ல! தமிழில் அம்மா என உச்சரிக்கும் சொல் குளிர்ப் பிரதேச நடுக்கமுற்ற வடவர்களால் மா எனவும் அப்பா என உச்சரிக்கும் சொல் அதே போலவே பாபா பிதா எனவும் உச்சரிக்கப்படுகின்ற விதம் போல ஏராளமான தமிழ்க் கொடைகளை வடவர்களின் இந்தி மொழியில் ஆதாரம் காட்ட எம்மாலும் முடியும்! எனவே மொழியால் கூடத் தமிழ்தான் பாரதத்தை ஆள்கிறது!

பாரத அரசின் முத்திரைச் சின்னமாகிய நான்முகச் சிங்கச் சின்னம் கூடத் தமிழருக்கே உரித்தான இலட்சினை என எம்மால் உறுதியாகக் கூற முடியும்! ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தை ஆண்ட பல்லவர்களின் கொடியில் சிங்கச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தாக வரலாறு கூறுகிறது!

பல்லவ மன்னர்களின் தலைநகரமாக விளங்கியது காஞ்சி மாநகரம்! கலைகள் வளர்த்த காஞ்சி மாநகரத்தில் ஏராளமான பல்கலைக் கழகங்கள் நிறைந்திருந்தமையும் உலகெங்குமிருந்து மாணவர்கள் படிக்க வந்ததையும் வரலாறு விவரிக்கின்றது!

அன்று பௌத்தர்களுக்கு தமிழினம் பல்லவர் காலத்தில் விட்டுக் கொடுத்த காஞ்சி மடம் பின்னர் மதவாத வடவர்களின் ஆதிக்கத்தால் சங்கர மடமாக மாற்றப்பட்ட வரலாறும் எவராலும் மறுக்க இயலாது!

அத்தகு மேன்மை வாய்ந்த தலைநகரின் மத்தியில்; கட்டாயம் பல்லவர்தம் கொடிக்கம்பமென காஞ்சித்தூண் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்! வடவர்களின் படையெடுப்பின் போது கவர்ந்து செல்லப்பட்ட அத்தூண் காஞ்சியை சாஞ்சியாக்கி அசோகச் சக்கரவர்த்தி காலத்தியதாகக் கருதப்படும்  சாஞ்சித்தூண் என சாரநாத்தில் மாற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும்;!

எனவே தமிழர்களின் கலையறிவிற்கு சான்றாக விளங்கிய பல்லவர்களின் சிங்கமுக முத்திரைதான் பாரத நாட்டின் அதிகார முத்திரையாக விளங்க வேண்டுமென்பது காலத்தின் கட்டாயம்!

அடுத்ததாக இமயம் வரை படையெடுத்துச் சென்று இமயத்தில் விற்கொடியைப் பறக்க விட்ட சேர நாட்டு; தெய்வமாகப் போற்றப்படும் அய்யப்பனின் வாகனம் புலி! சேரனைப் போன்றே கங்கைக் கரையில் வடவரை வெற்றி கொண்ட சோழரின் கொடியில் பட்டொளி வீசிப் பறந்த சின்னம் புலி! பாரதத்தின் அதிகார பூர்வ தேசிய விலங்கும் புலிதான்!

மூன்றாவதாக தமிழ்க் கடவுளாம் முருகனுக்கு வாகனமாக விளங்கியது மயிலாகும்! வடவர்களால் தமிழக அரண்மனைகள்  ஆக்கிரமிக்கப்பட்டு சமஸ்கிருத மொழி அர்ச்சனையை கல்லாக நின்று முருகன் சகித்துக் கொண்டாலும்

அவனது வாகனமாகிய மயிலுக்குத்தான் தேசியப் பறவையெனும் பெருமை கிட்ட வேண்டுமென்பதுவும் காலத்தின் கட்டாயம்தான்!

இறுதியாக அதே தமிழ்க் கடவுள் முருகன் அவதரித்தாகக் கூறப்படும் தாமரை மலர்தான் பாரதத்தின் தேசிய மலராக வேண்டுமென்பதுவும் காலத்தின் கட்டாயம்தான்!

பரதம் கலையாக மலர்ந்த கண்டத்தை வெளிநாட்டவர் வியந்து பரத கண்டமென அழைக்க வடவர்கள் தம் கற்பனைத் திறத்தால் இராமாயணத்தை படைத்து பரதனை உயர்வாக்கி பரத கண்டமென திரித்தாலும் உண்மை உறங்கியா விடும்? பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இமயம் முதல் குமரி வரை ஆட்சி செய்த தமிழினம் இன்றுள்ள நிலைக்கு குறுகியது ஆரியர்களின் படையெடுப்பிற்கு பயந்து அல்ல!

தமிழினம் தனது இனத்திற்கே உரிய குணமான யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வந்தாரை வாழ வைக்கும் குணத்தால்தான்! படிப்படியாகத் தங்கள் எல்லைகளையும் வடவர்களின் சூழ்ச்;சியால் தங்களின் சக உதிரங்களையும் ஏன் மொழியையும் கூட விட்டுக் கொடுத்து வாழ்வது இந்த தேசத்தின் நன்மைக்காகவும் இந்த தேசத்தின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்க வேண்டும் என்ற உயரிய குணத்தினால்தான்!

நம் பாரத தேசத்தின் வரை படத்தை சற்று உற்று நோக்குங்கள்! அதில் நம் தமிழன்னையின் முகத்தை தௌ;ளத்தெளிவாக காண இயலும்! எனினும் பாரத அன்னையின் பாதங்களாக விளங்குவது தமிழகம்தான்!

பாரதம் உலக அரங்கில் கம்பீரமாக எழுந்து நிற்பதற்கு வலுவான கால்களாக திகழ்வது தமிழகம்தான்! இப்பொழுது சொல்லுங்கள்! பாரதத்தை ஆள்வது தமிழ்தானே!

தமிழினம் விட்டுக்கொடுத்த பாரதத்தின் தலைப்பகுதியிலும் கால்பகுதியான இலங்கையிலும் இரத்த ஆறுகள் ஓடுவதற்கு காரணமே வடக்கிலுள்ளவர்களின் மதவெறியும் அவர்களின் வழிவந்தவர்களாம் சிங்களர்களின் புத்தம் மறந்த யுத்த வெறியும்தான் பிரதான காரணம்!

தீர்க்க இயலாத இந்த இரண்டு யுத்தங்களையும் தீர்க்க தமிழர்களின் ஒன்றுபட்ட எண்ணங்களால்தான் நிச்சயம் முடியும்! தமிழ்க்கடவுள் முருகனின் தலைமையில் தமிழகத்தை இதுவரை அமைதி வழியில் நடத்தி வரும் சித்தர்களின் எண்ணங்களை தமிழர்கள் அனைவரும் தம்முள் ஏற்க துவங்கினால் உலக அளவில் தமிழினம் பேசப்படுகின்ற காலம் ஒரு நாள் நிச்சயம் உருவாகும்! இங்கு நல்லவர் வாழும் புதிய சமுதாயம் நிச்சயம் ஒருநாள் அரும்பும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!