சைவ வைணவத் திருமணங்கள்!

         
நம் தமிழத்தில்தான் சைவ வைணவப் பண்பாடு இன்றுவரை பெரும்பாலும் கட்டி காக்கப்பட்டு வந்தாலும் நம் இளைய தலைமுறைக்கு இதிலுள்ள நன்மைகள் பெரும்பாலும் புரிந்து கொள்ளப்பட வழியின்றி மதவாதிகள் தடுத்து விட்டனர்!

சைவமும்  வைணவமும் மாமன் மைத்துனர் உறவு முறையின் அடிப்படையில் அமைந்த தொன்று தொட்டு நிலவும் தமிழர் பண்பாட்டு வழக்கமாகும்!

வடக்கே ஆட்சி புரிந்த சிவந்த நிறமுடைய சைவத்தமிழர் தலைவன் முருகனும் தெற்கே ஆட்சி புரிந்த மாயோன் எனப்படும் வைணவக்கடவுள் கண்ணனும் மாமன் மைத்துனன் முறையுடைய பழைமை மிக்க தமிழ்க் கடவுளர்களாவர்.

மன ரீதியான மனித எண்ணங்கள் வேறு! உடல் ரீதியான மனித உறவுகள் வேறு! சைவமும் வைணவமும் இதில் தெளிவான கருத்துகளைக் கொண்டுள்ளன!

தமிழகத்தில் சைவ வைணவப் பிரிவுகளை மதமாக மாற்றிய பெருமை பார்ப்பன இனத்தையே சாரும். 

அவர்களின் கட்டுப்பாட்டில் வந்த தமிழகத்தில் இருந்த தமிழினம்தான் ஒற்றுமை குலைவதற்காகப் பின்னர் அவர்களால் சாதிகளாகப் பிரிக்கப்பட்டது.

இதன் பின்னர் வடக்கில் தோன்றிய புத்தமும் சமணமும் தமிழத்தில் மதங்களாக நுழைய முற்பட்டுப் பின்னர் சைவ வைணவப் பார்ப்பனர்களின் எதிர்ப்பினைச் சமாளிக்க இயலாமல் தமிழகத்திலிருந்து காணாமல் போயின.

சைவத்தையும் வைணவத்தையும் தங்கள் மதமாக இன்றுவரை பறை சாற்றிக் கொண்டிருக்கும் உயர்சாதி இந்து அமைப்பான பார்ப்பன இனம் சைவ வைணவத்தைக் கோயில்களில் தொடங்கி சாதி ரீதியாகத் தமிழினத்தைத் தொடர்ந்து பிரித்தாண்டு வந்துள்ளனர்!

மேலும் தங்களின் பழங்கதைகளால் தமிழினத்தை அரக்கர்கள் எனக் கொச்சைப்படுத்தி அதில் வெற்றியும் காண்பதாகக் கருதிக்கொண்டு தங்கள் சந்ததியினரை இழந்து கொண்டும், அங்கக் குறைபாடுள்ள குழந்தைகளைப் பெற்றுக்கொண்டும் வெகு வேகமாக அழிந்து வருகின்றனர்!

பார்ப்பனர் இனத்தில் மட்டும்தான் சைவர் வைணவருக்கும் வைணவர் சைவருக்கும் பெண் கொடுக்க மாட்டார்! சைவர்கள் சைவர்களுக்குள்ளும் வைணவர் வைணவர்களுக்குள்ளும் மட்டும்தான் பெண் கொடுத்துப் பெண் எடுப்பர். 

இதன் விளைவு, தமிழகத்திலுள்ள பெரும்பாலான பார்ப்பனக் குடும்பங்களில் அங்கம் மற்றும் மனநலக் குறைபாடுடைய குழந்தைகள்! எனது வாழ்க்கை அனுபவத்திலேயே பார்ப்பன இனத்தில் இது போன்ற குறையுடைய ஏராளமானவர்களைச் சந்தித்துள்ளேன்!

இதற்கு அதி முக்கிய சாட்சி சிதம்பரம்தாம். இங்கு பல ஆண்டுகள் முன்பு குடியேறிய மூவாயிரம் தீட்சிதர்கள் குடும்பங்கள்  இன்று ஐநூறுக்கும் குறைவாகக் குறுகி மேற்கண்ட குழந்தைகளை உடைய செய்திகள்தாம்! 

நம் தமிழகத்தில் இன்று வரைமுறை கடந்து தொடர்கின்ற வரதட்சிணைக் கொடுமைகள், மண முறிவுகள், அங்கக் குறைபாடுள்ள குழந்தைகள் பிறத்தல், பலதார மணம், பொருந்தாத கள்ள உறவுகள் அடுத்தவரைக் கெடுத்தல், பாலியல் உறவு, வன்முறை உணர்வுள்ள குழந்தைகளாகப்  பிறந்து உலகை அச்சுறுத்தும் வன்செயல்களில் ஈடுபடும் தீவிரவாத வன்முறையாளர்களாதல் போன்ற நிகழ்வுகள் உருவாவதற்குச் சைவ வைணவ உறவுகளில் ஏற்படும் தவறுகளே காரணமெனலாம்!

மருத்துவ விஞ்ஞானமும் நெருங்கிய உறவுகளில் தொடரும் திருமணங்களால்தான் அங்கக் குறைபாடான குழந்தைகள் உருவாவதாக இன்றுவரை எச்சரித்து வருகின்றன!

நம் தமிழகத்தில் பெண் கொடுத்துப் பெண் எடுக்கும்போது இப்பொழுதெல்லாம் என்ன சாதி எந்த குலம் என்றுதான் விசாரிக்கின்றனரே தவிரச் சைவமா வைணவமா எனப் பெரும்பாலும் கேட்பதில்லை! சைவ வைணவ உறவு முறைகளைப் புரிந்து கொள்ளாத இந்தச் செயல் நம் பல்லாயிரம் ஆண்டு கால நாகரீகத் தமிகத்திற்குக் குந்தகம் விளைவிப்பதாகத்தான் அர்த்தம். 

சாதிகளால் இதுவரை தமிழினம் பிரிந்திருந்தாலும் பெரும்பாலான குடும்பங்கள் சைவ வைணவ முறைகளிலிருந்து தவறாதிருந்ததால்தான் மேற்கண்டது போன்ற மோசமான விளைவுகளிலிருந்து ஓரளவு தப்பித்து வந்துள்ளது!

ஆனால் தமிழினம் தற்பொழுது சைவ வைணவ உறவு முறையிலிருந்து விலகி மூடத்தனமான பக்தி மார்க்கத்தில் மூழ்கி மீண்டும் வடவர்தம் குருட்டுத்தனமான பாதைக்குத் திரும்பித் தங்கள் பண்பாட்டை இழக்க நேரிடுமோ என்ற அச்சத்தின் விழைவுதான் இந்த ஆய்வினை மேற்கொள்ள வேண்டியதாயிற்று!

பொதுவான ஆய்வுக்கு எட்டியவரை இது போன்ற சைவ வைணவ உறவைச் சரிவரப் பேணுகின்ற குடும்பங்களில் இது போன்ற தவறுகள் அவ்வளவாக இருப்பதில்லை என அறிய முடிகிறது!

எனவே இனியாவது நம் உயர்ந்த எண்ணங்களால் தமிழகத்தில் வேறூன்றியுள்ள சாதிப் பிரிவுகளைக் கலைவதற்கு முதற்படியாக இனி ஒரு பெண்ணோ ஆணோ மண வாழ்க்கை துவங்குவதற்கு முன் குறைந்தது சைவ வைணவ உறவுகளைத் தவறாமல் புதுப்பித்து தமிழின உயர்வுக்கு வழி காண வேண்டுமென்பதே நம் தமிழக இளைய சமுதாயத்திற்கு நான் வைக்கும் கோரிக்கை!

சைவ வைணவப் பிரிவுகள் தமிழகத்திலுள்ள அனைத்து இன சாதிப் பிரிவுகளிலும் இன்றுவரை கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் தமிழகத்திலுள்ள சாதிகளை இந்த இரு பெரும் பிரிவுகளின் கீழ் கொண்டுவந்து ஒன்றாக்கி விட்டால் தமிழகத்திலுள்ள சாதிகள் அனைத்தையும் ஒழித்துவிட முடியும்.

இதன் பின்னர் வரும் தலைமுறை சைவ வைணவப் பிரிவைக் கேட்டே பெண் கொடுத்து பெண் எடுக்க முற்படும். சாதிகளை ஒழிக்க விரும்பும் அனைத்து இன மக்களும் ஒன்று பட்டால் வெகுவிரைவில் தமிழகத்தில் பிரிவினை விதை விதைக்கும் சாதித் தலைவர்களும் ஒன்றுபடும் மக்கள் சக்தியின் எழுச்சியால் காணாமல் போகும் நிலை உருவாகும்!

தமிழகத்தில் கிறித்தவத்திற்கு மாறியவர்கள்கூடப் பெரும்பாலும் தங்களின் முந்தைய சாதி அமைப்பிலேயே தொடர விரும்புகின்றனர். இது மறைமுகமாக அவர்களின் சாதி விருப்பத்தையே வெளிப்படுத்துவதாக அமைகிறது. அவர்களும் இனி சைவ வைணவத்தைத் தங்களுக்குள் புதுப்பித்துக் கொண்டு கிறித்தவத்திலுள்ள ஏராளமான உட்பிரிவுகளைக் கலைய முற்படலாம்.

இது தமிழகத்தில் வாழும் தமிழ் பேசும் இசுலாமிய நண்பர்களுக்கும் கண்டிப்பாகப் பொருந்தும்! அவர்களும் முகலாயர் ஆதிக்கத் தமிழகத்தில் மதம் மாறிய தமிழர்கள்தாம். குறிப்பாக இசுலாமியர்களில் தீவிரமான மத உணர்வு உள்ளவர்களும் இதே போன்று நெருங்கிய உறவுகளில் திருமணம் முடிக்கின்றனர்! அவர்களும் தங்களிடமிருக்கும் வேறுபாடுகளைக் கலைந்து தங்களின் குடும்ப உறவுகளைப் பேண வேண்டுமென்பதே முறையான உறவுகளின் திருமணச் சேர்க்கையால் உடல் நலம் ஆரோக்கியம் மிகுந்த சந்ததியினர் நிறைந்த  தமிழ்க்குடும்ப அமைப்புகள் உருவாக விடுக்கும் கோரிக்கையாகும்! 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!