கார்த்திகைத் திருவிளக்கு!

             
தமிழகம் இயற்கையாகவே முப்புறமும் கடலால் சூழப்பட்ட நிலப்பரப்பினை உடையது! பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமது நுண்ணிய அறிவாற்றலால் கடலின் தன்மையினை நன்கு புரிந்து கொண்ட நமது முன்னோர்கள் கடல் வளம் அழியாது பேணுவதில் மிகுந்த கவனம் செழுத்தினர்!

கால நிலை மாற்றங்களால், கடலில் ஏற்படும் மாற்றங்களைத் துல்லியமாக அறிந்து அவற்றைச் சமாளிக்கும் ஆற்றல் பெற்றவர்களாக விளங்கினர்!

இதனால்தான் தமிழினம் கடல் கொண்ட லெமூரியாக் கண்டம் தொடங்கி இன்று நாம் வசித்து வரும் தற்போதைய நிலப்பரப்பு வரை தன்னைக் காப்பாற்றிக் கொண்டு வந்துள்ளது!

திரைகடலோடி திரவியம் கொண்டு கடலின் தன்மையினை முழுமையாக அறிந்திருந்த காரணத்தால்தான் லெமூரியாக்கண்ட காலத்திலேயே வட அமெரிக்க மாயர்;களுடனும், பிற நாடுகளுடனும் வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்தனர் நமது முன்னோர்கள்!
 
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வெல்ல முடியாத நிலப்பரப்பிற்குச் சொந்தக்காரர்களாக விளங்கிய சோழர்கள் கடற்பரப்பில் மிகுந்த ஆதிக்கம் செழுத்தினர்!

அதனால்தான் மேற்கில் கிரேக்கம் தொடங்கி கிழக்கில் கடாரம் வரை வணிகம் மற்றும் கலை கலாச்சாரத் தொடர்புகளையும், தம்மை அடிமைப்படுத்த வந்த வடவரைத் துணிச்சலுடன் போரில் எதிர்கொண்டு இமயத்திலும் தமது புலிக்கொடியைப் பறக்கவிட்டுத் தன் பெயரை கங்கைகொண்டான் எனப் பறைசாற்றிய சரித்திரத்தை வரலாறு மறைத்து விடவும் மறந்து விடவும் முடியாது!

கடலின் ஒவ்வொரு துல்லியமான அசைவுகளையும் இன்றுள்ளது போல அறிவியல் கருவிகள் இல்லாத காலகட்டத்திலேயே தமிழினம் முழுமையாக அறிந்திருந்தது மட்டுமல்லாமல், கடல் சீற்றங்களிலிருந்து தமது நிலப்பரப்பையும், தம்முடைய உழைப்பால் உருவாகும் விளை பெர்ருட்களைக் காத்தும் வந்துள்ளனர்.

பொதுவாகத் தமிழகம் தனது  நில அமைப்புப்படி ஆடி மாதம் தொடங்கி ஐப்பசி மாதம் வரை மழை பெய்து வளமடைவது வழக்கம். இதன் பின்னர் கடலில் நிகழும் காற்றழுத்தத் தாழ்வு நிலைகள் காரணமாக, கார்த்திகை, மார்கழி மாதங்களில் புயல் அபாய நிலை இன்று வரை தொடர்வதும் நாம் அறிந்த ஒன்று.

இன்று கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலையில் மட்டும் ஏற்றப்படும் மகாதிருவிளக்கு திருவண்ணாமலை துவங்கி இத்திருவிளக்கு வழக்கங்கள் வழக்கற்றுப் போன திருவானைக்கோயில் சுசீந்திரம் , உள்ளிட்ட ஐம்பெரும் சிவத்தலக் கோயில்களிலும் (இப்பொழுதுதான் இவை கோயில்கள்! முன்னர் இவைகள்தான் தமிழக மன்னர்கள் வாழ்ந்த அரண்மனைகள்) ஏற்றப்படும் வழக்கம் முற்காலத்தில் விளங்கியது.

இந்தக் கோவில்கள் கடற்பரப்பிலிருந்து துல்லியமாக நூறு காத தொலைவில் (இன்றைய அளவீட்டின்படி நூறு கிலோமீட்டர்கள்) கட்டப்பட்டவை.

இயற்கைச் சீற்றக் கடல் அபாயங்களைத் தடுக்கவும், இயற்கையைத் தம்முடைய கட்டுப்பாட்டில் கொண்டு வரவும் திட்டமிட்டுச் சரியான அளவீட்டில் இருக்குமாறு துல்லியமாக அக்காலத் தமிழ் மன்னர்களால் கட்டப்பட்டவை இக்கோயில்கள்.

வடவர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிராத அக்கால கட்டத்தில் இந்த அறிவியல் திருக்கோயில்களில் கார்த்திகை மாதங்களில் குறிப்பிட்ட நாளில் ஒரே சமயத்தில் மகா விளக்குகள் ஏற்றப்படும். இதே நாட்களில் தமிழர்களின் இல்லங்கள்தோறும் வரிசையாகத் திருவிளக்குகள் ஏற்றப்படும்.

இது இன்று வழக்கத்திலுள்ளது போலப் பக்தியின் அடிப்படையில் அல்ல. முழுக்க முழுக்க விஞ்ஞானத்தின் அடிப்படையிலேதான்.    தமிழகம் முழுவதும் கார்த்திகை மாதத்தில் ஏக காலத்தில் திருவிளக்குகள் ஏற்றப்படுவது போன்றவை மட்டுமல்ல, இன்றும் ஒரு சில இடங்களில் மட்டுமே வழக்கத்தில் உள்ள சொக்கப்பனை கொளுத்துவதும் கூட விஞ்ஞானத்தின் அடிப்படையில்தான்.

அது மட்டுமன்றி எண்ணங்களின் வலிமையை உணர்ந்த நம் முன்னோர்கள் இது போன்ற புயல் அபாய நாட்களில் திருவண்ணாமலை திருஆனைக் காவல், சுசீந்திரம் போன்ற முக்கியமான ஐந்து தலங்களிலும் ஒன்று கூடித் தங்களின் எண்ண ஆற்றலை இந்தப் பிரபஞ்ச வெளியில் செழுத்தி புயலின் வலிமையைத் தங்களின் எண்ண ஆற்றல் வழிமையால் வென்று புயல் அபாய இடர்களைக் கட்டுப்படுத்துவர்!

தமிழகம் முழுவதும் இன்றுள்ளது போல இரண்டு நாட்களில் முடிந்து விடும் கார்த்திகை திருவிளக்குகள் ஏற்றப்படும் வழக்கம், செல்வ வளம் மிகுந்த வளமுற்ற தமிழகத்தில் புயல் அபாய நிலை நீங்கும் வரை தொடர்ந்து இதே வித மக்களின் எண்ண அலைகளால் புயல் அபாயங்கள் கட்டுப்படுத்தப்படும் வரை  நீடிக்கும்.

இந்த அறிவியல் ரீதியான தீபங்களாலும், சொக்கப்பனை கொளுத்துதலாலும் வான மண்டலம் சூடேற்றப்படுகிறது. இதன் காரணமாகக் கடலில் ஏற்படும் காற்றழுத்தத் தாழ்வு நிலை வழுவடையத் துவங்கி மேல்நோக்கி எழும்பி வலிவு குன்றி கடற்பரப்பிலேயே மழை பொழிந்து திசை மாறிச் சென்று விடும். இதன் காரணமாகக் கடற்கரைப் பகுதிகள் மட்டுமே அந்நாட்களில் இலேசான மழைப் பொழிவால் பாதிக்கப்படும்.

அதே போன்று வானவியலில் வல்லுநர்களாகத் திகழ்ந்த தமிழினம் இன்று வழக்கத்திலுள்ள ஆவாவளிப் பட்டாசுகளைப் போலன்றி அந்நாட்களில் ஆற்றல் பொருந்திய வானவெடிகளைப் பயன்படுத்தி மிக நீண்ட தொலைவு பாய்ந்து சென்று புயல் அபாய மேகங்களையும் தேவையற்ற மழைப் பொழிவு ஏற்படுத்தி விளை பயிர்களை நாசப்படுத்தும் மேகங்களையும் கலைந்தோடச் செய்து வெற்றி காண்பதில் வல்லவர்களாகத் திகழ்ந்திருக்கக் கூடும்!

இத்தகு விஞ்ஞான அறிவால் தமிழினம் தமது விளை நிலங்களையும் விளைச்சலையும் காலம் காலமாகக் காத்து வந்துள்ளது! இன்றோ தமிழினம் இத்தகைய அறிவியல் விஞ்ஞானக் கோயில்களை வடவர்களிடம் இழந்து தவிக்கிறது! தமிழினம் இதை மட்டுமா இழந்தது?.

வடவர்களின் கட்டுக்கதைப் புராணங்களை நம்பி இயற்கைச் சீற்ற விழைவுகளிலிருந்து தப்பிக்க வழியின்றி மட்டுமல்ல அந்நாட்களில் உடற்பயிற்சிக் கூடங்களாக விளங்கி யோக ஆசனம் சிற்பம் பரதம் உள்ளிட்ட கலைகளை வளர்க்கப் பயன்பட்ட பண்பாட்டுத் தலங்களையும் அல்லவா இழந்து தவிக்கிறது!

அறிவியல் தொழில் நுட்பம் நிறைந்த இன்றும் கூட நமது விஞ்ஞான அறிவு  பயனற்றுப் போவதையும், புயல் கால ஆபத்துகளைத் தவிர்க்க இயலாத கையறு நிலையில்தான் நமது அரசு செய்வோர் தடுமாறுகின்றனர்!

அதோடு மட்டுமன்றி இக்கால கட்டத்தில் நிகழும் மக்களின் இன்னல்கள்கூட கேலிக்கூத்தாகிறது! தற்பொழுது  ஆட்சி சுகம் அனுபவிப்பவர்களும், ஆட்சி சுகம் அனுபவித்து முடிந்து மக்களால் நிராகரிக்கப்பட்ட முந்தைய ஆட்சியாளர்களும், மக்களின் திரைப்பட மோகத்தைப் பயன்படுத்தி ஆட்சிக்கட்டிலில் ஏறத் துடிப்பவர்களும் தமது வாக்கு வங்கியைத் தக்க வைத்துக் கொள்ளவும், விரிவுபடுத்தவும் நடத்தும் நாடகங்கள் நாடறிந்தது.

ஆயின் அன்றிருந்த நம் முன்னோர்கள் இன்றைய அவலங்களைப் போலல்லாது உண்மையாக மக்கள் படும் துயரங்களை விஞ்ஞான ரீதியில் அறிந்து அதனைத் தீர்க்கும் வழி முறைகளையும் கண்டறிந்து இயற்கையை வென்றனர். இடர்களைக் கலைந்தனர்.

விஞ்ஞானத் தமிழினம் எழ வேண்டும்! மெய்ஞ்ஞான ஆற்றல் பெறவேண்டுமெனில் தமிழகத்தில் இது போன்று அறிவியலுடன் எண்ண ஆற்றல்கள் மேம்பட்ட மக்கள் சக்தி எழ வேண்டும்!

இத்தகைய மெய்ஞ்ஞானத் தமிழினம் நிச்சயம் ஐந்தாம் தமிழ்ச்சங்க ஆட்சி காலத்தில் உருவாக்கப்படும்!

   

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!