இலக்கு 2016

வரும் 2016 ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தலுக்கு இப்பொழுதே தமிழகத்திலுள்ள அனைத்து இயக்கங்களும் தயாராகி வருகின்றன!

இலவசங்களில் மக்களை வீழ்த்தி வாக்கு வங்கியை வளைப்பதற்குத் தேவையான வழிமுறைகளை இது போன்ற இயக்கங்கள் நிச்சயம் வகுக்கும்!

வழக்கம் போலவே இந்தத் தேர்தலிலும் வாக்காளர்களுக்குத் தாங்கள் கொள்ளையிட்ட பணத்தை வாரியிறைத்து

வாக்கு வங்கியை வளைப்பதற்கு வலிமை மிக்க இயக்கங்கள் தயாராகக்கூடும்!

எந்த இயக்கம் ஆட்சிக்கு வந்தாலும் நாட்டில் நிலவும் இலஞ்சமும் ஊழலும் அடியோடு தொலையப்போவதில்லை என்ற

வறட்டு வாதம் பேசியே மக்கள் ஏதேனும் ஒரு ஊழல் இயக்கத்தைத்தான் இந்தத் தேர்தலிலும் ஆட்சியமைக்க வாய்ப்பளிப்பர்!

இந்த நிலையில்

 இந்த நாட்டில் நிலவும் இலஞ்சம், ஊழல், வேலையில்லாத் திண்டாட்டம்,

கொலை, கொள்ளை, வழிப்பறி நிகழ்வுகள், கந்து வட்டிக் கொடுமைகள்,

கனிம வளக் கொள்ளைகள், வனக் கொள்ளைகள்,

சுகாதாரக்கேடு, மாசடைந்த கால்வாய்கள், மாசடைந்த ஆறுகள்,

வளைக்கப்பட்ட அரசு நிலங்கள், வளைக்கப்பட்ட வனங்கள், ஆறுகள், கால்வாய்கள்,

வசிப்பிடமற்ற மக்கள்,

இலவசங்களில் மயங்கி வேலை வெட்டியின்றிச் சுற்றும் கூட்டம்,

குடி, போதை, கடத்தல், ஆள் கடத்தல்,

பாலியல் வன்முறைகள், பெண்களுக்கு எதிரான பலதரப்பட்ட குற்றங்கள்,

மோசமான சாலை வசதிகள், நெரிசலான போக்குவரத்துகள்,

ஊழல் மிகுந்த திட்டங்கள், மோசமான குடிநீர் விநியோகம்,

அண்டை மாநிலங்களுடன் ஏற்படும் ஆற்று நீர் ப் பிரச்சினைகள்,

அண்டை நாட்டுடன் ஏற்படும் மீனவர்களுக்கான இடையூறுகள்,

வாய்மையற்ற அறம் தவறிய வாழ்க்கை முறை,

சாதியவாதம், மதவாதம்,

அதிகார மிரட்டல்கள், பணபல ஆதிக்க மனப்பான்மை,

கட்டுப்படுத்த இயலாத விலைவாசிகள்,

கட்டுபடியாகாத வேளாண் உற்பத்திகள்,

கட்டுப்படுத்த இயலாத மின்கட்டணம், போக்குவரத்துக் கட்டணம்,

எழுத எழுத விரிந்து கொண்டே போகும் ஏராளமான குறைகளுடன் இப்பொழுதுள்ள நிலையிலேயே தொடர்வதா

அல்லது இது போன்ற செயல்களுக்கு இந்தத் தேர்தலிலாவது ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

என்ற எண்ணம் மக்களிடம் உருவாக்க வேண்டும் என நினைப்பவர்கள் போல

ஐந்தாம் தமிழ்ச்சங்கமும் தமிழ்க்கனவு என்ற தலைப்பில் பல கட்டுரைகளை வடித்துள்ளது!

தமிழ் தமிழர் தமிழ்நாடு என இந்த நாட்டைச் சுவாசமாக நேசிப்பவர்களுக்கு இது போன்ற கனவுகள் நிச்சயம் ஏராளம் இருக்கும்!

கனவு காணுங்கள் என நம் தமிழக இளைஞர்களைத் தட்டியெழுப்பியவர் நம் மாண்புமிகு குடியரசுத்தலைவர் உயர்திரு கலாம் அவர்கள்!

ஐந்தாம் தமிழ்ச்சங்கமும் தனது தமிழ்க்கனவுகள் நிச்சயம் ஒரு நாள் நிறைவேறும் என்ற உறுதியான நிலைப்பாடில் உள்ளது!

இந்த உறுதிப்பாட்டின் முதற்படிதான்

ஓவ்வொரு சட்ட மன்றத் தொகுதியிலும் உள்ள இலட்சம் மக்களில் தலை
சிறந்த பத்து வாய்மையானர்களைத் தேர்ந்தெடுதல்!

பணபலமற்ற மக்கள் நலனில் மட்டுமே அக்கரை கொண்ட தியாக மனப்பான்மை படைத்த,

சாதிபேதம் பாராத எளிமையானவர்களாக மக்களால் அடையாளம் காணப்படும் நல்லவர்களை

அந்தத்த தொகுதி மக்களிடம் அறிமுகம் செய்வித்தல்!

கொடி, தோரணம், அலங்கார வளைவுகள், கட்அவுட்டுகள், மேடைகள்,

வாகன அணிவரிசைகள், பேரணிகள், மாநாடுகள் போன்ற எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி

வருகின்ற சட்ட மன்றத் தேர்தலில் மக்கள் சக்தி வென்று பணபல அரசியல் செல்வாக்கு அடியோடு தொலையச் செய்ய

கனவுள்ள அனைவரும் ஒன்று சேர அழைக்கிறது ஐந்தாம் தமிழ்ச்சங்கம்!

2016 ல் தமிழக அரசியல் வரலாற்றில் மகத்தான மாற்றங்கள் ஏற்படுத்தி எளிமையான ஒரு அமைப்பு மக்களுக்காகப் பணி செய்ய உருவாக்க

மேற்கண்ட அவலங்கள் அற்ற தமிழ்நாடு உருவாக விரும்பும் கனவுள்ள அனைவரும்

ஐந்தாம் தமிழ்ச்சங்கத்தினை இணையத்தில் மேலும் வலுவாக்க அழைக்கிறது!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!