வடக்கும்! தெற்கும்!

வள்ளுவர் வடவர்களின் ஆக்கிரமிப்பிற்கு ஆளாகித் தமிழினம் ஆயிரம் வருடங்கள் கடந்த நிலையில் பல்வேறு தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாகக் கூடும் எனக் கருதியிருக்க வேண்டும். 

அதனால்தான் வள்ளுவர் தமது திருக்குறளில் பல இடங்களில் வடவர் போற்றும் தேவர்களைப் பழித்தும், அதே சமயம் தமிழினம் தவறான பாதைதனில் செல்வதைக் கண்டித்துமிருக்கிறார்.

நல்ல சிந்தனையாளர்கள் சற்றுச் சிந்தித்துப் பார்த்தால் இது உண்மையான செய்திதான் என ஒப்புக்கொள்வர்! எனினும் தப்பு செய்யத் தூண்டுபவரை விட அந்தத் தவறினைச் செய்பவர்தான் உண்மையான குற்றவாளி! 

தமிழினம் அந்த வகையில் வடவர் விரித்த வலையில் நன்மை, தீமைகளை ஆராயாமல் வீழ்ந்து விட்டு அவர்களைக் குறை சொல்லிப் பயன் என்ன விழையப் போகிறது! 

என்றாலும் வடவரின் இதிகாசங்களிலும் நமக்கு உண்மை தெரியாத பழங்கதைகளிலும் கூறப்பட்டுள்ள வடவர்களின் மேன்மை குணங்களையும் தமிழினத்தின் அரக்கர்கள் தன்மைகளையும் சற்றுத் தள்ளி வைத்து விட்டு தற்போது நடைமுறையில் உள்ள உண்மை நிகழ்வுகளைச் சற்று ஆராய்ந்துதான் பார்ப்போமே!

புகைப் பழக்கம்! 
    
தமிழக நில அமைப்புபடி தமிழகத்தில் புகையிலை வளரும் சூழல் கிடையாது!  புகையிலை பயிரிடும் நிலப்பரப்பினை ஏராளம் பெற்றிருப்பது வடக்குதான்! ஆயின் தமிழக மண்ணில் புகையிலை பயிரிட வைத்து நல்ல விலை கொடுப்பதாகத் தமிழக விவசாயிகளை வளைத்து தமிழக மண்ணை நஞ்சாக்கியும், தமிழகத்தில் தடை செய்யப்பட்டாலும் மறைமுகமாகப் புழக்கத்தில் உள்ள புகையிலை சார்ந்த தயாரிப்புகள் அனைத்தும் விற்பனை செய்வதும் வடக்குதான்! 

காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம் எனப் பாடிய பாரதியின் வார்த்தை வரிகளைப் பொய்யாக்கிவிட்டு தமிழினத்தைப் பான்பராக் பான்குட்கா எனப் போதை சாம்ராஜ்ஜியத்தில் வீழ்த்தியதும் வடக்குதான்! இன்று காவிரி வெற்றிலையை வாங்குவதற்கும் கூட வடக்கு தயாரில்லை!

மதுபானப் பழக்கம்!
பாரத தேசம் முழுவதும் மதுபான உற்பத்தியில் ஈடுபடுபவர்கள் அனேகமாக வடவர்களாகத்தான் விளங்குகின்றனர். இவர் தவிரத் தென்னகத்தவர் சிலர் உள்ளனரென்றால் அவர்கள் கூட வட நாட்டவர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட அரசியல் வணிகத்  தொடர்பில் வளர்ந்தவர்களாகத்தான் இருக்க முடியும்!

தமிழகத்தில் மீண்டும் கள்ளுக்கடைகள் திறக்க வேண்டுமென விவசாய அமைப்புகளைத் தூண்டி விடுபவர்கள் கூட யார் தெரியுமா? 

இன்று தமிழினத்தை வன்முறைப் பாதைக்கு வழி நடத்த மதத்தின் பேரால் தமிழக இளைஞர்களை  மதவெறியில் வீழ்த்திப் பயிற்சியும் தந்து கொண்டிருக்கும் வட நாட்டு மதவெறி அமைப்புகள்தாம்.

சுற்றுச்சூழல்!

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தீபாவளிப் பண்டிகை வழக்கத்தை தமிழகத்தில் பரப்பியது வடக்குதான்! 

அது போலவே சுற்றுச் சூழலை மாசு படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் அகில பாரத உரிமையினை ஏகபோகமாக வைத்திருப்பதும் வடக்குதான்! தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் வணிகர்களில் தொண்ணூறு சதவீதம் பேர் வடவர்கள்தாம்!

திரைப்படத் துறை!

கலைகள் வளர்த்த தமிழகத்தில் இன்று திரைப்பட மோகம் தலை விரித்தாடுவதைப் பயன்படுத்திக் கொண்டு அதனால் பயனடைவது கூட வடக்குதான்! திரை நட்சத்திரங்கள் பயன் படுத்தும் அலங்காரப் பொருட்களை ஏராளம் தயாரித்து தமிழகத்தில் காசு பார்ப்பதும் வடவர்கள்தாம்! 
  
தமிழகத் திரைப்படங்களில் அளவிற்கதிகமான வன்முறைக் காட்சிகளும் ஆபாசக் காட்சிகளும் இடம் பெறுவதற்கு அதிமுக்கிய காரணமே நமது தமிழ்த் திரைப்படத் துறையினர் வடக்கில் தயாராகும் ஆபாசம் நிறைந்த திரைப்படங்களைப் பின்பற்றித் திரைப்படங்கள் தயாரிப்பதுதான்! 

இன்று தமிழக ஆட்சிக்கட்டிலை அடையத் துடிக்கும் நடிகர்கள் தமது புரட்சிகர எண்ணங்களைக் கூடத் திரையில் அரைகுறை ஆடையணிந்த பெண்களுக்கு நடுவில் நின்றுதான் பாடிப் பரப்புவர்.

வரி ஏய்ப்பு!

வரி ஏய்ப்பு செய்வதிலும் வரிக்கு உட்படாத வணிகம் செய்வதிலும் வல்லவர்கள் தமிழகத்திலுள்ள வட பாரத வணிகர்கள்தாம்! இவர்களிடம் இலஞ்சம் பெற்று வரி ஏய்ப்போரை வளர்த்து விடும் நமது அதிகாரிகள் ஒழுங்காகக் கணக்குக் காட்டி வணிகம் செய்யும் நம் தமிழக வணிகர்களைக் கசக்கிப் பிழிந்து சக்கையாக்கி விடுவதுதான் வேடிக்கை.

தரமற்ற பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை!

உயிர் காக்கும் பொருட்கள் தொடங்கி அனைத்து வித அன்றாட உபயோகப் பொருட்களின் உற்பத்தியிலும் விநியோகத்திதுலும் தரத்தினை ஒரு பொருட்டாகவே மதியாமல் இலாப நோக்கம் ஒன்றினையே குறிக்கோளாகக் கொண்டு வணிகம் செய்வதில் வடவர்களை மிஞ்ச யாராலும் முடியாது. சீனத்திலிருந்து ஏராளமான தரமற்ற பல்வேறு வகையான நெகிழிக் குப்பைகளைச் சட்ட விரோதப் பணப் பட்டுவாடா வாயிலாக இறக்குமதி செய்து தமிழகத்தில் விற்பனைக்கு விடுப்பதும் வடவர்கள்தாம்! 

சாதிமத வெறி!

தமிழகத்து ஆண்களின் பெயருக்குப் பின்னால் சாதிப் பெயர்களை இணைத்து எழுதும் வழக்கம் தந்தை பெரியாரின் எழுச்சிக்குப் பின்னர் தொலைந்து விட்டதெனலாம்! இப்பொழுது திருமணப் பத்திரிக்கைகளில்தான் இன்ன சாதியினரின் திருமணம் எனத் தெரிந்து கொள்ள முடியும்! 

தற்பொழுதோ தந்தை பெரியாரால் ஆட்சி பீடம் ஏறியவர்களால் வளர்த்துவிடப்பட்ட சாதித்தலைவர்களின் ஆதிக்கத்தால்தான் தமிழகத்தில் பெரியாரால் விரட்டப்பட்ட சாதி உணர்வும், சாதித் தூண்டுதல் மோதல்களையும் மீண்டும் காண முடிகிறது! 

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டு மண்ணில் வருடா வருடம் மாரியம்மன் திருவிழாவில் அம்மனுக்குச் சொந்தமான இடத்தில் பொங்கல் வைக்க வாருங்கள் என மத உணர்வினைத் தூண்டும் வகையில் செயல்படுவதும் வடக்கின் மதவாத அமைப்புகள்தாம்!

வடவர்களைப் பொருத்தவரை சாதிப்பெயரைத் தம் பெயருக்குப் பின்னால் பயன்படுத்தாதவர்களை மிக அரிதாகவே காண முடியும்! மறுப்பவர்களின் வாதத்தைப் பொய்யாக்கத் தமிழகத் தொலைபேசி டைரக்டரியே போதுமானது. 

மதவாதத்தை வளர்த்து வடக்கில் இசுலாமியர்களுக்கு எதிராகவும் தெற்கில் சிங்கள இனமென வாழ்ந்து தமிழர்களுக்கு எதிராகவும் இரத்த ஆறுகளை ஓட விடுவதும் வடக்குதான்!

இப்பொழுது சொல்லுங்கள் தமிழகத்தை வழி நடத்தக்கூடிய தகுதியும் திறமையும் வடக்கிற்கு வெண்சாமரம் வீசாத பச்சோந்தி குணமற்ற ஐந்தாம் தமிழ்ச்சங்க வாய்மையே வெல்லும் இயக்கத் தமிழருக்கன்றி வேறு எவருக்கும் கிடையாதென்று ஆணித்தரமாக!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!