மதவாத வன்முறைகள்!

சித்தர்கள் எச்சரித்தது போன்றே மதவாத வன்முறைகள் தமிழகத்தில் அரங்கேறத் துவங்கிவிட்டன!

மதவாதத்திற்கும் சாதியவாதத்திற்கும் விலைபோன தமிழக அரசியல் இயக்கங்கள் தேர்தல் அரங்கிலிருந்து தமிழக மக்கள் சக்தியால் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில்

தம் இயக்கத்தைச் சார்ந்தவர் படுகொலை செய்யப்பட்டார் என்ற காரணத்திற்காக

மத்தியில் ஆட்சியைப் பிடித்த மமதையில் தமிழகத் தலைநகர் சென்னையில்
வன்முறையைப் பரப்பியுள்ளனர் மதவாத அமைப்பினர்!

படுகொலைக்கு ஆளானவரின் மரணம் நிச்சயமாகக் கண்டனத்திற்கு உரியது!

இரங்கத்தக்கது! வருத்தத்திற்குரியது! அனுதாபத்திற்கு உரியது!

அவரது மரணத்திற்குக் காரணமானவர்கள் உடனடியாகக் காவல்துறை வாயிலாக அடையாளம் காணப்பட்டு

குற்றத்திற்குரிய தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் இங்கு மாற்றுக் கருத்தும் கிடையாது!

எந்தக் காரணத்தினால் இந்தப் படுகொலை நடந்தது என்பதை அறிய முடியாத நிலையில் இதற்கு மதவாத முத்திரை குத்தி அரசியலாக்குவது அரசியல்  நாகரீகத்திற்கு எதிரானது!

அதோடு மட்டுமன்றிச் சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொண்டு பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிப்பதும்

ஏதுமறியா அப்பாவிப் பொதுமக்களை அச்சுறுத்துவதும், பொதுமக்களுக்கு இடையூறு செய்வதும்

பிற மதத்தவர்களின் வழிபாட்டுத்தலங்கள் தாக்கப்படுவதும் எவராலும் ஏற்றுக்கொள்ளும் செயலல்ல!

கொலையாளிகள் அடையாளம் காணப்பட்டுத் தண்டிக்கப்படுவதற்கு நிகராக

வன்முறையில் ஏற்பட்ட இழப்புகளைக் கணக்கிட்டு

வன்முறையில் ஈடுபட்ட நபர்களின் சொத்துக்களைக் கைப்பற்றி ஈடு காண்பதும்,

வன்முறையில் ஈடுபட்ட இயக்கம்தான் இழப்புகளை ஈடு செய்ய வேண்டும் என வாய்மை மன்றம் வாயிலாக உத்தரவிடவும் வழக்குப் பதிய வேண்டும்!

சட்டங்கள் கடுமையாக இல்லாவிட்டால் எவர் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைதான் இந்த நாட்டில் உருவாகும்!

இழப்பு ஏற்படுத்துபவர்கள்தான் இழப்புகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்ற கடுமையான நிலைப்பாட்டினைச் சட்டத்தின் துணை கொண்டு துணிந்து நிறைவேற்றினால்தான்;

வன்முறை குணம் உடையோர்

வன்முறையில் ஈடுபடுபடுவதற்தே அஞ்சுகின்ற

அசாதாரண நிலை நிச்சயம் இந்த நாட்டில் உருவாகும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!