அமைச்சர்! அரை பிளேடு!


இது எனது வணிக வாழ்வில் நேர்ந்த அனுபவம்!

எங்கள் பல்பொருள் விற்பனை அங்காடியில் பொருட்கள் வாங்குவதற்காக ஒரு அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் வந்திருந்தனர்!

விலை உயர்ந்த சவரக் கத்தி, சவரத் தூரிகை, சவரப்பசை, சவரத்திற்குப் பின் போடப்படும் விலை உயர்ந்த வாசனை திரவியம், 

விலை உயர்ந்த பற்பசை, பல்குச்சி, விலை உயர்ந்த குளியல் சோப்பு, 

முகப் பவுடர், தலைக்குப் போட விலை உயர்ந்த எண்ணெய்ப்புட்டி, சீப்பு, 

உடலில் தெளிக்கும் விலை உயர்ந்த வாசைன திரவியம்,

விலை உயர்ந்த எவர்சில்வரினால் ஆன பிளாஸ்க் சூடாகப் பானம் அருந்த, அதே அளவில் குளிர்ச்சியான பானம் பருக மற்றொரு பிளாஸ்க், 

இன்னும் ஏராளமான பொருட்களை அவர்கள் வாங்கினர். இவையெல்லாம் எதற்கு என அவர்களிடம் வினவினோம்!

அதற்கு அவர்கள் தெரிவித்த பதில் இதுதான்!

இன்று எங்கள் துறை சார்ந்த அமைச்சர் ஆய்விற்காக வருகிறார். அவர் தங்கும் அறையில் வைப்பதற்காகத்தான் இவைகளை நாங்கள் வாங்குகிறோம் என்றனர்!

இங்கு வாங்கியவை தவிர அமைச்சருக்கு அணிவிப்பதற்கென சால்வை, சந்தன மாலை, உள்ளிட்ட ஏராளமான பொருட்களை வாங்குவதற்காக பல்வேறு  இடங்களுக்குச் செல்லவும் அவர்கள் அவசரப்பட்டனர்! 

இந்தப் பொருட்களை வாங்குவதற்காக அவர்கள் அரசு வாகனத்தில் வந்திருந்தனர். 

எங்களிடம் வாங்கிய பொருட்களின் மதிப்பே சுமார் நான்காயிரம் ஆகும்! வேறு இடங்களில் ஆன செலவு எவ்வளவோ யாம் அறியோம்!

பொருட்களுக்கான செலவு எந்த ஒப்பந்ததாரர் தலையில் ஏறியதோ, அல்லது இவர்கள் தங்கள் கைக்காசைச் செலவிட்டு வாங்குகிறார்களா என்றும் எங்களால் அறிய இயலவில்லை!

இவையெல்லாம் ஒரு நாள் ஆய்விற்காக வந்த அமைச்சருக்காகச் செலவிடப்பட்டவை! 

பெருந்தலைவர் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த உயர்திரு மறைந்த கக்கன் அவர்கள் 

தனது ஒரு இரயில் பயணத்தின்போது அரை பிளேடு கொண்டு தனது முகச்சவரத்தை முடித்துக்கொண்டதாக 

எப்போதோ படித்தது அப்பொழுது பார்த்து ஏனோ எனது நினைவில் வந்து தொலைத்தது!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!