இடுகைகள்

ஜூலை, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வாழ்க்கை எனக்குக் கற்றுத் தந்த பாடங்கள்! வினையான விளையாட்டு!

எனக்கு நான்கு வயது இருக்கும்போது நடந்த சம்பவம் இது. விடுமுறை நாட்களில் எங்கள் குடும்பத்திற்குச் சொந்தமான தோட்டத்திற்கு   சென்று விளையாடுவது சிறுவர்களாகிய  எங்களது வழக்கம். அவ்வாறே ஒரு விடுமுறை நாளின் காலைப் பொழுதில் தோட்டத்திற்குச்  சென்று விளையாடிக் கொண்டிருந்தோம். பல்வேறு விளையாட்டுகள் விளையாடி முடித்தவுடன் வேறு புதிதாக ஏதாவது விளையாடுவதென முடிவெடுத்து தோட்டத்துத் தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த கன்றுக்குட்டிகளுக்கு எங்களில் யாரோ கன்றுக்குட்டிக்கு எண்ணை தேய்த்துவிடுகிறேன் என்று கூறிக்கொண்டு தொழுவத்தின் சுவர் மீதிருந்த ஒரு புட்டியில் இருந்த திரவத்தை எடுத்து கன்றுக்குட்டிகளுக்கு தேய்த்துவிட்டு பின்னர் தலைவாரி விளையாடினோம். சிறிது நேரம் சென்றபின் அந்த விளையாட்டும் சலித்துவிட அங்கிருந்து அகன்று வேறு விளையாட்டில் திளைத்திருந்தோம். வெளியில் சென்றிருந்த தோட்டக்காவலர் தொழுவத்திற்கு சென்றிருக்கிறார். அங்கு அவர் கண்ட காட்சியை கண்டு திடுக்கிட்டு உடனடியாக எங்களின் உணவகத்திற்கு விரைந்து சென்று தகவல் தர மேலும் சிலர் அங்கு வந்து குவிந்தனர். விபரம் அறிந்த எங்களின் பாட்டியும் அங்கு ஓடோடி வந்து

வள்ளுவ மகுடம்! அதிகாரம் 8. அன்புடைமை!

பிறர் மீது மிகுந்த அன்பு கொண்டவர் பிறருக்குத் துன்பம் நேரிடுவதை அறிந்து தம் விழிகளிலிருந்து பெருக்கும் கண்ணீரின் அளவினக் கண்டு, அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள் என வள்ளுவம் வியக்கின்றது. (வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரும் ஒரு வள்ளுவச் சித்தர்தாமோ?) எப்பொருளையும் தாமே அனுபவிக்கும் சுயநலத்துடன், அன்பில்லாத தன்மை கொண்டவரை பாலைவனத்திடை தளிர்க்கும் உலர் மரமெனமெனவும், எலும்பில்லாத, வெயிலில் காயும் புழுவெனவும், எலும்பாலும் தோலாலும் போர்த்தப்பட்ட உயிரற்ற  உடல் தாங்கியவரெனவும் இகழ் மகுடம் சூட்டுகிறது வள்ளுவம். முற்பிறவியில் தாம் காட்டிய அன்பினாலும் மிகச் சிறந்த ஒழுக்கத்தாலும்தாம் இப்பிறவியிலும் ஒருவர் மிகுந்த இன்பம் அனுபவிப்பார். இவர்கள்தாம் இனி வரும் பிறவிகளிலும் இன்பம் தொடரும் பலன் பெறுவர் என வள்ளுவம் உறுதிபட உரைக்கிறது. உயிரும் உடலும் போல அன்போடு இயைந்து, தம் உயிர் தாங்கிய உடலில் உள்ள எலும்புகளும் பிறருக்குரியதென வாழும் வாழ்க்கை முறையை உடையவர்கள், எப்பிறவியிலும் அன்புடையவராக ஒழுகி வாழ்ந்து ஒழுக்கத்தின் பயன் பெறுவர் என வள்ளுவம் புகழ் மகுடம் சூட்டி இவர்களை

வள்ளுவ மகுடம்! அதிகாரம் 7. மக்கட் பேறு!

ஆண் பெண் இருவரும் இணைந்த வாழ்க்கையில் அவர்கள் பெற்றெடுக்கும் மக்கட்செல்வங்களால்; அடையும் இன்பங்களை வள்ளுவம்  வியப்புடன் எடுத்தியம்புகிறது. குழந்தைகள் தம்மைத் தொடுவதால் அடையும் இன்பமும்,  சிறு குழந்தையாயின் குழலையும் யாழையும் விட மிக இனியதான அவர்தம் மழலை மொழியும்,  மழலையரின் சிறு கையால் அளையப்பட்டுப் பெறப்பட்ட உணவு அமிழ்தத்தை விட மிக இனிமையானதெனவும் வள்ளுவம் நயம்பட எடுத்தியம்புகிறது. நல்ல பண்புகளை உடைய மக்கட்செல்வத்தைப் பெற்றவருக்கு அடுத்தடுத்துத் தொடரும் பிறவிகளிலும் துன்பமகுடம் சேராதென உறுதிபட உரைக்கும்   வள்ளுவம், சான்றோராக வாழ்ந்து மிகச்சிறந்த பண்புநலன்களைப் பெற்று ஈன்ற பொழுதினை விடப் பெரிதுவக்கும்படி தம் தாய்க்கும்,  இத்தகு மக்களைப் பெற இவர் தந்தை என்ன தவம் செய்தனனோ எனப் பிறர் வியக்கும்படித் தம் தந்தைக்கும்  பெருமை செய்வதே,  பிள்ளைகள் தம் பெற்றோருக்குச் சூடி அழகு பார்க்கும் சிறந்த புகழ் மகுடங்களாம். அறிவிற் சிறந்தவராகத் தம் மக்கட்செல்வத்தை உடையவரே மிகச்சிறந்த பெற்றோராவர்.  இதைவிடச் சிறந்த வேறு எதையும் உலகத்தில் தம்மால் காண இயலவில்லை எனவும் வள்ள

ரமலான் வாழ்த்துக்கள்!

இன்று இசுலாமியர்களுக்கான புனிதப் பண்டிகையான ரமலான் தினம்! உலகெங்கிலுமுள்ள இசுலாமியச் சகோதர சகோதரிகளுக்கு ஐந்தாம் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக இனிய ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்! என்னுடைய இளம் வயதிலிருந்தே இசுலாத்துடனான எனது உறவு துவங்கிவிட்டதெனலாம்! எங்கள் உணவகத்தில் மிகச் சிறு வயதில் வேலைக்கு இணைந்து எங்கள் குடும்பத்தில் ஒருவராக வாழ்ந்து மறைந்த திரு குலோப்ஜான் அவர்களுடன்தான் எனது இசுலாத் உறவு துவங்கியது! எங்கள் குடும்பத்திலுள்ள அனைத்து குழந்தைகளுக்குமே அவரை குலோப்ஜான் மாமா எனத்தான் அழைப்பதில் பெருவிருப்பம் கொள்வோம்!  அவரது திருமணம்கூட எங்கள் தோட்டத்தில் எங்கள் செலவில்தான் நடந்தது அந்தத் திருமணத்தில் இளம் வயதில் கலந்து கொண்டது எனக்குள் இன்றும் பசுமை மாறாத நினைவுகள்தாம்! நாமக்கல்லில் நான் புகுமுக வகுப்புப் படிக்கும்போது எனது வகுப்புத் தோழனாக அறிமுகம் ஆனவர் முகம்மது ஜி முஸ்தாக்! அவரது குடும்பத்தில் ஒருவனாக அங்கு படித்தவரை நான் திகழ்ந்தேன்! அவர்கள் வீட்டில் விருந்துண்டு கழித்த நாட்கள் பல! இப்பொழுதும் ஈரோட்டில் எனது மகளின் பள்ளித் தலைமை ஆசிரியராக விளங்கிய த

மையல்! சமையல்!

சமையற்கலையில் இதிகாச காலம் தொட்டே ஆண்களும் சாதித்து வந்துள்ளதற்கு மகாபாரத நளனே ஒரு உதாரணம்! நளனின் சமையல் திறமையையை இன்றளவும் இந்த நாடு மறவாதிருக்கவே நளபாகம் என்ற சிறப்பான சொல் தமிழில் வழக்கிலுள்ளது! மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் எனப் பாடிய கவிஞரின் வாக்கினை அடையப் பெறும் ஒரு ஆணுக்கு கூடுதல் சிறப்பாக சமையலில் சிறந்த துணை அமைந்து விட்டால் அது இன்னொரு மகத்தான வரமாகவே அவருக்கு அமையும்! இந்த அற்புதமான இரண்டு வரங்களையும் ஒருங்கே பெற்ற பாக்கியசாலி நானே! எனது மனைவியாரின் கரம் பிடித்த சில நாட்களிலேயே எங்கள் வீட்டின் சமையல் ராணிப் பொறுப்பினை அவரே எடுத்துக் கொண்டார்! எனது மனைவியோ நகர்ப்புறத்திலிருந்து வந்தவர்! எனினும் கிராமப்புறங்களிலேயே பொதுவாக மறைந்து கொண்டிருக்கும் கிராமத்துச் சமையல் வகைகளை எங்களுக்கு அவர் அவ்வப்போது சமைத்துக் கொடுப்பார்! அதுவரை நாங்கள் எனது தாயாரின் கிராமப்புறச் சமையல் வகைகளைச் சாப்பிட்டு வந்திருந்தோம்! எனவே எனது மனைவி விதவிதமாகச் சமைத்துத் தரும் கிராமப்புற உணவு வகைகள் எங்களுக்குப் புதியதாக இருநததால் அதன் சுவை எங்களுக்குப் புரிபடவில்லை! எங்களுக

வள்ளுவ மகுடம்! அதிகாரம் 6. வாழ்க்கைத் துணைநலம்!

ஒருவரின் வாழ்க்கையில் இணையும் துணைவிக்கு அமைய வேண்டிய குணங்களை வாழ்க்கைத் துணைநலம் என்ற பொருளில் வள்ளுவம் குறிப்பிடுவதிலேயே அவரின் குடும்ப நலமும் நாட்டு நலமும் அடங்கிவிடுகிறது. அத்தோடு மிகச்சிறந்த மக்கட் செல்வத்தை அளவோடு பெற்றுவிட்டால் அவரைவிடப் பேறு பெற்றவர்கள் எவருமிலர். சிறந்த வாழ்க்கைத் துணைநலமென வள்ளுவம் வகுக்கும் மகளிரின் மகுடத் தகுதிகள் இதோ. குடும்பத்தின் வரவிற்கு ஏற்பச் செலவு செய்யும் பாங்கு,  தெய்வத்தைவிடத் தன் கணவனே சிறந்தவனெனத் தினந்தோறும்  காலையில் அவனைத் தொழுதெழுதல்.  இல்லறத்திற்குரிய நல்ல குணங்கள் நிறைந்திருந்தல்,  மன உறுதியுடனான கற்புடன் வாழ்தல்,  கடமை தவறாது வழி நடந்து தம் குடும்பத்தின் புகழ் நீங்காமல் வாழுதல். எனும் ஏராளமான குண மகுடங்களைச் சுமந்த மனைவியை அடைந்தவன்  தம்மை இகழும் பகைவர் முன்பும் ஏறுபோலப் பீடு நடை போடுகின்ற புகழினை அடைவான் என வள்ளுவர் வாழ்த்துகின்றார். இத்தகு சிறப்பியல்புகளை மகுடங்களாகச் சூடிய ஒரு குணவதி  மழைவளம் வேண்டிப் பெய்யென ஆணையிட்டால், இயற்கையும் அவரது ஆணைக்குக் கட்டுப்பட்டு அடிபணியும் என உறுதிபட உர

வள்ளுவ மகுடம்! அதிகாரம் 5. இல்வாழ்க்கை!

இல்லறம் துறவறம் மற்றும் பொதுநலம் ஆகிய மூன்று துறைகள் சார்ந்தவர்க்கு இல்லறத்தில் இருப்பவர்கள் துணையாக விளங்க வேண்டுமென வள்ளுவம் அறிவுறுத்துகிறது. இல்வாழ்க்கையில் ஈடுபடும் தம்பதியருக்கு உரிய மகுடங்களாக வள்ளுவம் அன்பையும் அறத்தையும் பரிந்துரைக்கிறது. பழிக்கு அஞ்சுதல், அறவழியில் ஈட்டிய பொருளை விருந்தினர், துறவியர் மற்றும் சுற்றத்தாருடன் பகுத்துண்டு, பிறர் பழிக்கும் தீமைகள் இன்றி வாழ்தல் ஆகிய குணங்களோடு வாழ்பவர்கள் தெய்வத்திற்குச் சமமானவர்கள் எனப் புகழ் மகுடம் சூட்டுகிறார் வள்ளுவர். இத்தகு மேன்மையான வாழ்க்கை முறையை இல்லறத்திலிருந்து கொண்டே வாழ்பவர்கள் தவம் செய்பவர்களை விட வலிமையானவர்கள் எனவும் மேம்படுத்துகிறது வள்ளுவம்.  வள்ளுவர் உலகளாவிய அளவிற்கு உயர்ந்து சிறப்படையப் பின்புலமாகத் திகழ்ந்தவர் அவரது துணைவியாகிய  வாசுகி அம்மையார் அவர்கள்தாம் எனலாம். தாம் வகுத்த குறள் நெறிகளுக்கேற்ற துணைவியாக அவரை அடைந்ததால்தாம் வள்ளுவப் பெருந்தகை அனுபவித்து அனுபவித்து குறள் நெறி முழுக்க இல்லறத்திலுள்ள நல்லறங்களைப் போதித்துள்ளார்.  இன்றுள்ள தலைமுறைத் தமிழ்ப் பெண்களை வாசுகி போல வாழுங

வள்ளுவ மகுடம் அதிகாரம் 4. அறன் வலியுறுத்தல்!

அறம் தவறாத வாழ்க்தைதாம் ஒருவருக்குச் செல்வமும் சிறப்பும் சேர்க்குமென்கிறார் வள்ளுவர்.  அறம் செயும் மகுடம் அணிவதே மேலானதெனினும் அதே சமயம் அறம் தவறுதல் கேடானதென்றும் வள்ளுவம் எச்சரிக்கிறார். அறத்துடன் கூடிய வாழ்க்கை முறையினை இடைவிடாது தொடர்ந்து வாழ்ந்து வருதல் அவசியம் என்கிறார்.  மனத்தாலும் குற்றமற்றவாகி ஆரவாரத்தன்மையற்று அறமுடன் வாழ வலியுறுத்துகிறார். எனவே ஒருவர் மனதாலும் அறம் தவறி வாழக்கூடாது. அறத்தோடு வாழத் தவிர்க்க வேண்டிய மகுடங்களாக, பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய நான்கு விரும்பத்தகாத குணங்களை ஒழித்தல்தான் சிறந்ததென வலியுறுத்துகிறார். அறத்துடன் கூடிய வாழ்க்கையைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் எனத் தள்ளிப்போடுவதைத் தவிர்ப்பவருக்கே இறப்பிலும் அழியாத துணையாக அறம் விளங்கும்.  பல்லக்கில் ஏறுபவராக, அல்லது அதைச் சுமப்பவராக வாழும் தகுதிக்கு அறமே காரணம் என்கிறார் வள்ளுவர். தினமும் அறத்துடன் வாழ்தலே பாதையைத் தடுக்கும் பாறாங்கல் போல வாழ்நாள் தொடரத் தடுக்கும் தடைகளை அகற்றும் நன் முயற்சியாம். அறம் சார்ந்த வாழ்க்கை முறையைச் சிறப்பாக வாழ்ந்த ஒரே இனம் தமிழினம் மட

அரைக்காசு சம்பளமானாலும் அரசாங்க வேலை!

இது பழமொழியாகத் தோன்றினாலும் இன்றுவரை அரசு வேலைக்காகத் தவமிருப்பவர்களைத்தான் நாடு கண்டு வந்துள்ளது! எத்தனையோ வேலை வாய்ப்புகள் தனியார் துறையில் கொட்டிக் கிடந்தாலும் இன்றைய இளைஞர்கள் தனியார் துறையில் வேலை பார்த்துக்கொண்டே அரசு வேலைக்குத்தான் முழு வீச்சில் கவனத்தைச் செழுத்துகின்றனர். வகுப்பு அடிப்படையிலாவது அல்லது பெரும் தொகை இலஞ்சமாகக் கொடுத்தாவது எப்படியாவது அரசு வேலையைப் பெற்றுவிட வேண்டும் எனத் துடிப்பவர்கள்தாம் இன்று ஏராளம்! தாங்கள் பணி செய்யும் தனியார் நிறுவன வேலைகளில் துடிப்புடனும், ஆர்வத்துடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் தற்போதய பணியிலிருந்து மேற் பதவிகளை அடைய வேண்டிய உழைப்பு மனப்பான்மையும் அற்றவர்களாகத்தான் பெரும்பாலான இளைய சமுதாயத்தினரின் மன நிலை உள்ளது! இத்தகு மனப்பான்மை ஏற்படுத்தும் விளைவுகளினால் இருக்கின்ற வேலையில் ஏனோதானோவெனச் செயல்படுவதால் தனியார் நிர்வாகங்களும் வந்தவரை இவர்களைப் பயன்படுத்திக் கொள்வோம் என்ற மனப்பான்மையுடன்தான் செயல்பட வேண்டியதாயுள்ளது! காலியாகும் வேலை வாய்ப்பிடங்களை நிரப்புவதற்கும், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி அதில் படிப்பிற்கும் த

வள்ளுவ மகுடம் அதிகாரம் 3. நீத்தார் பெருமை!

நீத்தார் என வள்ளுவம் குறிப்பது நாளிதழ்களில் நீத்தார் இறுதிச்சடங்கு என அறிவிப்புகளில் இடம் பெறும் இறந்தோர் எனப் பொருள்படும் நீத்தார் அல்லர். உலகப் பற்றுகளை மனதினின்று ஒழித்துக்கட்டி, அறிவு எனும் அங்குசத்தால், ஐம்புலன்கள் எனும் மதயானைகளை அடக்கி ஆளும் தகுதி படைத்தவர்களே, துறவு எனும் இலக்கணத்திற்குத் தகுதியானவர்கள் என வள்ளுவர் இலக்கணம் வகுக்கிறார். செயற்கரிய செய்யும் ஆற்றல் படைத்த, நற்குணம் நிரம்பிய, அனைத்து உயிர்களின் மீதும் அருளுடைய, ஒழுக்கத்தில் சிறந்த மகுடம் சூடிய பெரியோரின் சினம், சிறியதாக இருந்தாலும் அதன் விளைவை எவராலும் தாங்க இயலாது என வள்ளுவர் எச்சரித்துமுள்ளார். இத்தகைய துறவிகளை இன்றைய உலகில் காண்பதென்பது அறிதான செயல்தாம். நீத்தார் என்ற போர்வையில் மதவேடமிட்ட போலிகளும், மக்களுக்காகத் தன் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் இழந்ததாக நடித்துக்கொண்டே மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையிடும் அரசியல்வாதிகளும் அடியாட்கள் துணையுடனும் பணபலத்துடன் உலவும் கலிகாலமிது. மக்கள்தாம் இனிப் போலிகளின் மகுடங்கள் சாய்த்து, உலகப் பற்றுகளை உண்மையாக நீத்தவர்களை அடையாளம் கண்டறிந்து, இவர்கள்தாம் வள்ளு

வள்ளுவ மகுடம் அதிகாரம் 2. வான் சிறப்பு!

வள்ளுவம் வான் சிறப்பின் பெருமைகளை இயம்பிய குறள் நெறிகள் இதோ. அமிழ்தெனப்படும் மழை வளம் தொடர வழி காணல், உண்பதற்கு உணவுண்டாக மழையாகிப் பின் உணவாவதும் மழையென உணர்தல், மழையின்றிப் போனால் பரந்த இவ்வுலகம் வறுமையுற்றுப் பசியுடன் வாழ நேருமென அறிதல், மழையின்றிப் போனால் உழவுத்தொழில் அழிவுற்று நாட்டின் உணவு வளம் குன்றுமெனத் தெளிதல், தனது அருமையை உணர்ந்து தம் பயனைத் தக்க வைத்துக்கொள்பவர்க்கு நட்பாகவும், அறியாதவரைக் கெடுப்பதாகவும் தன்மையுடையது மழையெனப் புரிதல், மழையின்றிப் போனால் பசுமையற்றுப் போகும், எனவே பசுமை உள்ளவரையே மழையும் தொடரும் என நினைதல், கடலிடத்துச் செல்வம் குறைந்தால் மழைவளம் குறையுமென உணர்தல், மழைவளம் பெருகும் வழிகளை அடைத்துவிட்டுப் பூசை பரிகாரம் எனச் செலவிடும் அத்துணை முயற்சிகளும் பயனற்றதெனப் பகுத்தறிதல், தவ வலிமையுடன் தானம் செய்து வாழாத உலகில் வான் மழை அரிதாகும் எனப் புரிதல், நீரின்றி உலகமையாது என உணர்ந்து அந்நீரின் இடையறாத ஓட்டத்தைத் தடுத்திடாமல் இயற்கையோடு இயைந்து வாழ முற்படாவிடில்  மழைவளம் அறிதாகி விடக்கூடும். எனவே வள்ளுவச் சித்தரின் கருத்திற்கேற்ப ஆறுகள் உய

தொலைந்து போன இலட்சியங்கள்!

பொதுவாக ஒரு பள்ளிக் குழந்தையை நாம் சந்திக்கும்போது அவரிடம் நீ என்ன படிக்கப் போகிறாய்? எதிர்காலத்தில் என்னவாகப் போகிறாய்? என்பதுதாம் நம் கேள்விகளாக இருக்கும்! அவரவர் தத்தம் எதிர்காலப் படிப்பைச் சொல்வதுடன் தாம் படித்துவிட்டு அந்தத் துறை சார்ந்த பணியைச் செய்யும்போது ஏழைகளின் நலனுக்காகப் பாடுபடுவேன்! நாட்டு முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவேன்! என்பன போன்ற பல்வேறு இலட்சியங்களை கண்கள் ஒளிர ஒரு கனவாகச் சொல்வார்கள்! பொய்யாகச் சொல்லப்படுவதில்லை இந்தப் பிஞ்சு மனதின் கனவுகள் என்பதும் இந்த வார்த்தைகள் அவர்தம் ஆழ் மனதின் வெளிப்பாடு என்பதையும் நாம் நன்கறிவோம்! இது போன்ற கேள்விகள் காலம் காலமாகக் கேட்கப்பட்டு வருவதும் காலம் காலமாக மேற்கண்ட பதில்கள் கிடைத்து வருவதும் கண்கூடான உண்மையாகும்! இத்தகையோர்தான் படித்து முடித்த பின்னர் தற்பொழுது மருத்துவம், விஞ்ஞானம், அரசியல், காவல், அரசுத்துறை எனப் பல்வேறு பணிகளில் வலம் வருகின்றனர்! இவர்களில் தத்தம் இளம் வயது இலட்சியத்தைக் கட்டிக் காத்து ஏழைகளுக்குச் சேவை செய்பவர்கள், நாட்டு நலனுக்காகப் பாடுபடுபவர்கள் எத்தனை சதவீதம் பேர் எனக் கணக்

முழுப் பூசணியைச் சோற்றில் மறைக்கும் அரசியல் வியாதிகள்!

அரசு செய்வோர் செய்யும் ஊழலுக்குத் தேனெடுத்துக் கப்பம் கட்டவே ஊழல் செய்து புறங்கை நக்கும்  எடுபிடி அரசு அலுவலர்களின் அலட்சியம் காரணமாகவே கட்டிட விபத்துகள் நேரிட்டு உயிர் பலிகள் நேர்ந்ததென்பது உலகறிந்த உண்மை! விபத்து நடந்த பின்னர் நட்ட ஈடு கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களைச் சரிக்கட்ட ஆள்பவர்கள் நினைப்பதும், ஏதோ தாங்கள்தாம் உத்தமர்கள் என்பது போல முன்னர் ஆட்சி பீடத்தில் அமர்ந்து இதே அலட்சிய அரசு அலுவலர்களிடம்  இலஞ்சம் பெற்று ஆட்சி சுகம் அனுபவித்த எதிர்க்கட்சியினர் இந்த விபத்திற்கு வாய்மை கேட்டுப்  பேரணி நடத்திப் போக்குவரத்தை முடக்கி மக்களை இன்னலுக்கு ஆளாக்குவதையும்  அறிவு சார்நத தமிழ் மக்கள் சற்று உற்று நோக்கினால் இவர்கள் முழுப்  பூசணிக்காயைச்  சோற்றில் மறைக்கும் அரசியல் எத்தர்கள் என்பது தெள்ளத் தெளிவாகப் புலனாகும்! எக்காலத்துக்கும் பொருந்தும்  எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? என்ற இதே திராவிட இயக்கத்தவரின் பசப்புப்  பாடல் வரிகள்தாம் ஏனோ மனதில் வந்து தொலைகிறது!

வள்ளுவ மகுடம்! அதிகாரம் 1 கடவுள் வாழ்த்து!

கடவுள் எனப்படும் இறைவன் கற்பிக்கப்படுவதற்கு முற்பட்ட ஆதி இனமாகிய தமிழனின் எழுத்துக்களே உலகிற்கு முற்பட்டது! அத்தகு எழுத்துக்களைக் கொண்டு ஏராளமான நூல்களைப் படைத்த அறிஞர்களின் திருவடிகளைத் தொழுதல், அறிஞர்களின் மாண்புமிகு அடிகளைப் பின்பற்றி நடந்து நிலமுள்ளவரை நீடு வாழ்தல், தம்மை நாடி வருவோருக்கு விருப்பு வெறுப்பற்று அறிவு புகட்டித் துன்பமில்லா நிலை பெறல், இறைவனென மக்களால் ஏற்கப்படும் தகுதியுள்ள தலைமையால் இருவினைகளாகிய நல்வினையும் தீவினையும் சேராது நீங்குதல், ஐம்புலன்களையும் ஒழித்த நல்லோர்களின் தலைமையில் நீண்ட நாட்கள் வாழ முற்படுதல், தமக்கு ஒப்புமையற்ற அறிஞர்களின் வழி நடப்பவர்களைத் தவிர மற்றவர்களின் மனக்கவலையை நீக்குதல் அரிதென உணர்தல், அறவழி நடக்கும் அறிஞர்களின் வழி நடப்பவர்களைத் தவிர மற்றவர்கள் பிறவிப்பெருங்கடலை நீந்துதல் அரிதெனத் தெளிதல், எண் குணமுடைய அறிஞர்களை வணங்காதவர்களின் பிறவி பயனற்றதென உணருதல், வள்ளுவம் வகுத்த இத்தகு நல்லோர்களையும் அறிஞர்களையும் பெறாதவர்களே பிறவியெனும் பெருங்கடலில் நெடிது நீந்துகின்ற ஆற்றலற்றவராவர். வாழ்வாங்கு வாழ அறிஞர்கள

வீரத்துறவி! விவேகானந்தச் சித்தர்!

ஒவ்வொரு நூற்றாண்டிலும் இந்த பாரத மண்ணில் பல்வேறு இடங்களில் சித்தர்கள் பிறந்து வாழ்ந்து தம் அடையாளத்தைப் பதிவு செய்து மறைந்து வாழ்கின்றனர்! சென்ற நூற்றாண்டில் அவ்வாறு பிறந்த சித்தர்களில் தனித்துவமானவர் நரேன் என இளமையில் அழைக்கப்பட்டுப் பின்னர் தம்முடைய சுயம் அறிந்த குறுகிய காலத்தில் பாரத மக்களிடம் தம்மை ஒரு சித்தராகப் பிரகடனப்படுத்தியவர் சுவாமி விவேகானந்தர்! ஒரு மதம் சார்ந்து வாழ்ந்து மறைந்தாலும் சித்தர்களுக்கே உரிய பழைமையைச் சாடுதல் மூடத்தனமான பழக்க வழக்கங்கள் மண் மூடிப் போகச் செய்வதில் தம் பங்கிற்கு அரிய தொண்டாற்றியவர் விவேகானந்தர்! பாரத இளைஞர்களை வீரமுள்ளவர்களாக, விவேகமுள்ளவர்களாக, பகுத்தறிவுமிக்கவர்களாக மாற்றம் செய்வித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் விவேகானந்தர்! பகுத்தறிவு சார்ந்த அவரது வீர உரைகள் இன்றுவரை இளைய சமுதாயத்தை விவேகானந்தர் வசம் ஈர்க்கவல்லது என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்துகள் கிடையாதெனலாம்! தமிழக மண்தாம் நரேந்திரரை அமெரிக்க மண்ணிற்குத் தம் உழைப்பில் உருவான செல்வத்தில் அனுப்பி வைத்து அவரது புகழ் பெற்ற சிகாகோ நகரச் சொற்பொழிவின் வாயிலாக விவேகானந்தராக உல

மேட்டூர் அணையை உடனடியாகத் திறப்போம்! கடலில் வீணாகும் நீரைச் சேமிப்போம்!

கர்நாடக அணைகள் நிறைவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருவது தமிழக விவசாயிகளின் மனம் குளிரும் நற்செய்தி! டெல்டா பகுதி சாகுபடிக்காக உடனடியாக இப்பொழுதிருந்தே அணையைத் திறக்க வேண்டும் என்பதுதாம் அப் பகுதி விவசாயிகளின் கோரிக்கை! அணை முழுவதும் நிரம்பிய பின்னர்தாம் அணையைத் திறப்போம் என வழக்கம் போலத் தமிழக அரசு மவுனம் காக்கிறது! சென்ற ஆண்டு அணை முழுவதும் நிரம்பிய நிலையில் ஒரு இலட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வெளியேற்றப்பட்டு அந்த நீர் முழுவதும் கடலில் சென்று வீணானது நாம் அறிந்த செய்திதாம்! இப்பொழுதும் அதே தவறு ஏற்பட வாய்ப்பு உருவாகியுள்ளது! சென்ற ஆண்டே விழிப்படைந்திருந்து இந்த ஆண்டு உபரியாக வரும் தண்ணீரை காவிரி பாயும் இடங்களை ஒட்டியுள்ள குளங்கள், ஏரிகளை ஆழப்படுத்தி அவற்றிற்கு இந்த அதிகப்படியான தண்ணீரைக் கொண்டு சேர்க்க வழி செய்திருந்தால் ஏராளமான நீர் வளத்தை சேமித்து வறட்சி காலத்தில் பயன்படுத்த வசதியாகி தமிழகத்தில் இவை சேமிக்கப்படும் இடங்களில் நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகும்! அரசு செய்வோர் ஒன்றை மட்டும் ஏன் இன்னும் புரிந்து கொள

தரமற்ற கட்டுமானங்கள் உணர்த்தும் பாடம்!

சென்னையில் சமீபத்தில் இடிந்து விழுந்த புதிய கட்டிடக் கட்டுமானத்தால் ஏற்பட்ட இழப்புகள் உணர்த்தும் பாடம்! விலை மதிப்பில்லா மனித உயிர்களின் இழப்பு! காயமடைந்தவர்களின் சொல்லொணாத் துயர வேதனைகள்! பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் அடைந்த சொல்லொணாத் துயரங்கள்! நிவாரணப் பணிகளுக்காக அரசு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதால் ஏற்படும் வரி இழப்பு!  கடும் சவாலுக்கிடையில் நிவாரணப் பணியில் தங்களது உழைப்பினை வெளிப்படுத்தியவர்கள் அடைந்த உடல் மற்றும் மன வேதனைகள்! அருகில் வசித்த குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டதால் அவர்களுக்கு ஏற்பட்ட வீண் சிரமங்கள்! நிவாரணப் பணிக்காக மாற்றி விடப்பட்ட போக்குவரத்து பாதிப்பால் சுற்றுப்புற மக்கள் அடைந்த இன்னல்கள்! வீணடிக்கப்பட்ட ஏராளமான மனித உழைப்பு! விபத்து நிவாரணத்திற்கென ஏராளமான மனித வள ஆற்றல் இழப்பு! ஏராளமான அளவிற்கு ஆற்று மணல்!  ஏராளமான சுண்ணாம்பு வளம்! வீணான கனிம வளங்கள் மறு சுழற்சிக்கு உட்படுவதால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்பு! நிவாரணம் வழங்குவதற்கு அரசுக்கு ஏற்பட்ட வரி இழப்பு! குடியிருப்புகளுக்கு வங்கிக் கடன்