வள்ளுவ மகுடம்! அதிகாரம் 1 கடவுள் வாழ்த்து!

கடவுள் எனப்படும் இறைவன் கற்பிக்கப்படுவதற்கு முற்பட்ட ஆதி இனமாகிய தமிழனின் எழுத்துக்களே உலகிற்கு முற்பட்டது!

அத்தகு எழுத்துக்களைக் கொண்டு ஏராளமான நூல்களைப் படைத்த அறிஞர்களின் திருவடிகளைத் தொழுதல்,

அறிஞர்களின் மாண்புமிகு அடிகளைப் பின்பற்றி நடந்து நிலமுள்ளவரை நீடு வாழ்தல்,

தம்மை நாடி வருவோருக்கு விருப்பு வெறுப்பற்று அறிவு புகட்டித் துன்பமில்லா நிலை பெறல்,

இறைவனென மக்களால் ஏற்கப்படும் தகுதியுள்ள தலைமையால் இருவினைகளாகிய நல்வினையும் தீவினையும் சேராது நீங்குதல்,

ஐம்புலன்களையும் ஒழித்த நல்லோர்களின் தலைமையில் நீண்ட நாட்கள் வாழ முற்படுதல்,

தமக்கு ஒப்புமையற்ற அறிஞர்களின் வழி நடப்பவர்களைத் தவிர மற்றவர்களின் மனக்கவலையை நீக்குதல் அரிதென உணர்தல்,

அறவழி நடக்கும் அறிஞர்களின் வழி நடப்பவர்களைத் தவிர மற்றவர்கள் பிறவிப்பெருங்கடலை நீந்துதல் அரிதெனத் தெளிதல்,

எண் குணமுடைய அறிஞர்களை வணங்காதவர்களின் பிறவி பயனற்றதென உணருதல்,

வள்ளுவம் வகுத்த இத்தகு நல்லோர்களையும் அறிஞர்களையும் பெறாதவர்களே பிறவியெனும் பெருங்கடலில் நெடிது நீந்துகின்ற ஆற்றலற்றவராவர்.

வாழ்வாங்கு வாழ அறிஞர்கள், நல்லோர்கள், மற்றும் மக்கள் அணிய வேண்டிய இறைவனுக்கு நிகரான கல்வி மகுடங்கள் இவையென்பது வள்ளுவரின் பரிந்துரையாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!