வள்ளுவ மகுடம் அதிகாரம் 4. அறன் வலியுறுத்தல்!

அறம் தவறாத வாழ்க்தைதாம் ஒருவருக்குச் செல்வமும் சிறப்பும் சேர்க்குமென்கிறார் வள்ளுவர். 

அறம் செயும் மகுடம் அணிவதே மேலானதெனினும் அதே சமயம் அறம் தவறுதல் கேடானதென்றும் வள்ளுவம் எச்சரிக்கிறார்.

அறத்துடன் கூடிய வாழ்க்கை முறையினை இடைவிடாது தொடர்ந்து வாழ்ந்து வருதல் அவசியம் என்கிறார். 

மனத்தாலும் குற்றமற்றவாகி ஆரவாரத்தன்மையற்று அறமுடன் வாழ வலியுறுத்துகிறார். எனவே ஒருவர் மனதாலும் அறம் தவறி வாழக்கூடாது.

அறத்தோடு வாழத் தவிர்க்க வேண்டிய மகுடங்களாக, பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய நான்கு விரும்பத்தகாத குணங்களை ஒழித்தல்தான் சிறந்ததென வலியுறுத்துகிறார்.

அறத்துடன் கூடிய வாழ்க்கையைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் எனத் தள்ளிப்போடுவதைத் தவிர்ப்பவருக்கே இறப்பிலும் அழியாத துணையாக அறம் விளங்கும். 

பல்லக்கில் ஏறுபவராக, அல்லது அதைச் சுமப்பவராக வாழும் தகுதிக்கு அறமே காரணம் என்கிறார் வள்ளுவர்.

தினமும் அறத்துடன் வாழ்தலே பாதையைத் தடுக்கும் பாறாங்கல் போல வாழ்நாள் தொடரத் தடுக்கும் தடைகளை அகற்றும் நன் முயற்சியாம்.

அறம் சார்ந்த வாழ்க்கை முறையைச் சிறப்பாக வாழ்ந்த ஒரே இனம் தமிழினம் மட்டுமே. இல்லறம், துறவறம் அரசியல் என வாழ்வியலை அறம் சார்ந்ததாக முற்றிலும் வாழ்ந்து வந்த நாம் இன்று அறம் தவறிய வாழ்க்கை முறைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம் என்பதுதாம் உண்மை. 
அறமற்ற வாழ்க்கை முறையில் கிடைத்த புகழ் மகுடம்கூடத் துன்பமே தருமென்பதை இல்லறம், துறவறம், மற்றும் அரசியலில் அறம் தவறித் துன்பம் அனுபவிக்கும் நபர்கள் இனியாவது உணர்ந்து அறத்துடன் வாழ முற்படவேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!