வள்ளுவ மகுடம்! அதிகாரம் 6. வாழ்க்கைத் துணைநலம்!

ஒருவரின் வாழ்க்கையில் இணையும் துணைவிக்கு அமைய வேண்டிய குணங்களை வாழ்க்கைத் துணைநலம் என்ற பொருளில் வள்ளுவம் குறிப்பிடுவதிலேயே அவரின் குடும்ப நலமும் நாட்டு நலமும் அடங்கிவிடுகிறது.

அத்தோடு மிகச்சிறந்த மக்கட் செல்வத்தை அளவோடு பெற்றுவிட்டால் அவரைவிடப் பேறு பெற்றவர்கள் எவருமிலர்.

சிறந்த வாழ்க்கைத் துணைநலமென வள்ளுவம் வகுக்கும் மகளிரின் மகுடத் தகுதிகள் இதோ.

குடும்பத்தின் வரவிற்கு ஏற்பச் செலவு செய்யும் பாங்கு, 

தெய்வத்தைவிடத் தன் கணவனே சிறந்தவனெனத் தினந்தோறும்  காலையில் அவனைத் தொழுதெழுதல். 

இல்லறத்திற்குரிய நல்ல குணங்கள் நிறைந்திருந்தல், 

மன உறுதியுடனான கற்புடன் வாழ்தல், 

கடமை தவறாது வழி நடந்து தம் குடும்பத்தின் புகழ் நீங்காமல் வாழுதல்.

எனும் ஏராளமான குண மகுடங்களைச் சுமந்த மனைவியை அடைந்தவன் 

தம்மை இகழும் பகைவர் முன்பும் ஏறுபோலப் பீடு நடை போடுகின்ற புகழினை அடைவான் என வள்ளுவர் வாழ்த்துகின்றார்.

இத்தகு சிறப்பியல்புகளை மகுடங்களாகச் சூடிய ஒரு குணவதி 

மழைவளம் வேண்டிப் பெய்யென ஆணையிட்டால்,

இயற்கையும் அவரது ஆணைக்குக் கட்டுப்பட்டு அடிபணியும் என உறுதிபட உரைக்கிறது வள்ளுவம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!