வள்ளுவ மகுடம்! அதிகாரம் 8. அன்புடைமை!

பிறர் மீது மிகுந்த அன்பு கொண்டவர் பிறருக்குத் துன்பம் நேரிடுவதை அறிந்து தம் விழிகளிலிருந்து பெருக்கும் கண்ணீரின் அளவினக் கண்டு,

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள் என வள்ளுவம் வியக்கின்றது.

(வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரும் ஒரு வள்ளுவச் சித்தர்தாமோ?)

எப்பொருளையும் தாமே அனுபவிக்கும் சுயநலத்துடன், அன்பில்லாத தன்மை கொண்டவரை

பாலைவனத்திடை தளிர்க்கும் உலர் மரமெனமெனவும்,

எலும்பில்லாத, வெயிலில் காயும் புழுவெனவும்,

எலும்பாலும் தோலாலும் போர்த்தப்பட்ட உயிரற்ற  உடல் தாங்கியவரெனவும்

இகழ் மகுடம் சூட்டுகிறது வள்ளுவம்.

முற்பிறவியில் தாம் காட்டிய அன்பினாலும் மிகச் சிறந்த ஒழுக்கத்தாலும்தாம் இப்பிறவியிலும் ஒருவர் மிகுந்த இன்பம் அனுபவிப்பார்.

இவர்கள்தாம் இனி வரும் பிறவிகளிலும் இன்பம் தொடரும் பலன் பெறுவர் என வள்ளுவம் உறுதிபட உரைக்கிறது.

உயிரும் உடலும் போல அன்போடு இயைந்து,

தம் உயிர் தாங்கிய உடலில் உள்ள எலும்புகளும் பிறருக்குரியதென வாழும் வாழ்க்கை முறையை உடையவர்கள்,

எப்பிறவியிலும் அன்புடையவராக ஒழுகி வாழ்ந்து ஒழுக்கத்தின் பயன் பெறுவர் என வள்ளுவம் புகழ் மகுடம் சூட்டி இவர்களை உயர்த்துகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!