மேட்டூர் அணையை உடனடியாகத் திறப்போம்! கடலில் வீணாகும் நீரைச் சேமிப்போம்!


கர்நாடக அணைகள் நிறைவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருவது தமிழக விவசாயிகளின் மனம் குளிரும் நற்செய்தி!

டெல்டா பகுதி சாகுபடிக்காக உடனடியாக இப்பொழுதிருந்தே அணையைத் திறக்க வேண்டும் என்பதுதாம் அப் பகுதி விவசாயிகளின் கோரிக்கை!

அணை முழுவதும் நிரம்பிய பின்னர்தாம் அணையைத் திறப்போம் என வழக்கம் போலத் தமிழக அரசு மவுனம் காக்கிறது!

சென்ற ஆண்டு அணை முழுவதும் நிரம்பிய நிலையில் ஒரு இலட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வெளியேற்றப்பட்டு

அந்த நீர் முழுவதும் கடலில் சென்று வீணானது நாம் அறிந்த செய்திதாம்!

இப்பொழுதும் அதே தவறு ஏற்பட வாய்ப்பு உருவாகியுள்ளது!

சென்ற ஆண்டே விழிப்படைந்திருந்து இந்த ஆண்டு உபரியாக வரும் தண்ணீரை காவிரி பாயும் இடங்களை ஒட்டியுள்ள

குளங்கள், ஏரிகளை ஆழப்படுத்தி அவற்றிற்கு இந்த அதிகப்படியான தண்ணீரைக் கொண்டு சேர்க்க வழி செய்திருந்தால்

ஏராளமான நீர் வளத்தை சேமித்து வறட்சி காலத்தில் பயன்படுத்த வசதியாகி தமிழகத்தில் இவை சேமிக்கப்படும் இடங்களில்

நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகும்!

அரசு செய்வோர் ஒன்றை மட்டும் ஏன் இன்னும் புரிந்து கொள்ளவே மறுக்கின்றனர் என்பதுதாம் இந்கு விளங்காத மர்மமே!

தமிழில் இறைக்கின்ற கிணறுதான் ஊறும் என்ற பழமொழி ஒன்றுண்டு!
வள்ளுவமும் இதைத் தொட்டணைததூறும் மணற்கேணி என உறுதிபடுத்தியுள்ளது!

தற்பொழுது அணைக்கு வரும் தண்ணீரின் அளவினை அப்படியே தேக்கி வைக்காமல் ஒரு சோதனைக்காகவேனும்

அரசு செய்வோர் வரும் அளவிற்கேற்ப இந்த ஆடி மாதத்திலேயே உடனடியாக வெளியேற்ற வேண்டும்!

வெளியேறும் நீர் செல்லும் இடமெல்லாம் ஏற்படும் வெப்பச் சலனத்தின் தாக்கத்தால் கண்டிப்பாகத் தமிழகத்தில்

இந்த ஆடி மாதத் துவக்கத்திலேயே தமிழகத்தில் மழை வளம் உருவாவது நிச்சய உண்மை!

வெளியேறும் நீரும் மழை வளத்தால் கிடைக்கும் நீரும் நிச்சயமாகத் தமிழகத்தில் தற்பொழுது சாகுபடிக்காகக் காத்திருக்கும் நிலங்களை வளப்படுத்தப்போவதும்  நிச்சய உண்மை!

இயற்கையை நம்பாமல் வெறும் மழை நீர்ச் சேமிப்பு என்ற குறைவான சேமிப்பை கருத்தில் கொண்டு

இயற்கை நமக்கு வருடா வருடம் வஞ்சகமின்றி வழங்கும் உபரி நீரை வீணாகக் கடலில் கலக்காமல்

இந்த ஆண்டாவது அரசு செய்வோர் விழிப்புடன் சேமிப்பார்கள் என நம்புவோம்!

இயற்கையை நம்புவோம்! வரும் நீரை உடடினயாக வெளியேற்றிப் பாசனத்திற்கு உதவுவோம்!

உபரியாகி வீணாகும் நீரைச் சேமிப்போம்! இதுவே இன்றைய உடனடி முழக்கமாகத் தமிழகமெங்கும் ஒலிக்க வேண்டும்!

வாருங்கள்! நம் எண்ண அலைகளை இந்தப் பிரபஞ்ச வெளியெங்கும் இன்று முதல் பரவச் செய்து

இயற்கையை நம் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து ஏராளமான மழை வளத்தைத் தமிழகத்தில் பெறுவோம்!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!