வீரத்துறவி! விவேகானந்தச் சித்தர்!


ஒவ்வொரு நூற்றாண்டிலும் இந்த பாரத மண்ணில் பல்வேறு இடங்களில் சித்தர்கள் பிறந்து வாழ்ந்து தம் அடையாளத்தைப் பதிவு செய்து மறைந்து வாழ்கின்றனர்!

சென்ற நூற்றாண்டில் அவ்வாறு பிறந்த சித்தர்களில் தனித்துவமானவர் நரேன் என இளமையில் அழைக்கப்பட்டுப் பின்னர் தம்முடைய சுயம் அறிந்த குறுகிய காலத்தில்

பாரத மக்களிடம் தம்மை ஒரு சித்தராகப் பிரகடனப்படுத்தியவர் சுவாமி விவேகானந்தர்!

ஒரு மதம் சார்ந்து வாழ்ந்து மறைந்தாலும் சித்தர்களுக்கே உரிய பழைமையைச் சாடுதல் மூடத்தனமான பழக்க வழக்கங்கள்

மண் மூடிப் போகச் செய்வதில் தம் பங்கிற்கு அரிய தொண்டாற்றியவர் விவேகானந்தர்!

பாரத இளைஞர்களை வீரமுள்ளவர்களாக, விவேகமுள்ளவர்களாக, பகுத்தறிவுமிக்கவர்களாக மாற்றம் செய்வித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் விவேகானந்தர்!

பகுத்தறிவு சார்ந்த அவரது வீர உரைகள் இன்றுவரை இளைய சமுதாயத்தை விவேகானந்தர் வசம் ஈர்க்கவல்லது என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்துகள் கிடையாதெனலாம்!

தமிழக மண்தாம் நரேந்திரரை அமெரிக்க மண்ணிற்குத் தம் உழைப்பில் உருவான செல்வத்தில் அனுப்பி வைத்து அவரது புகழ் பெற்ற

சிகாகோ நகரச் சொற்பொழிவின் வாயிலாக விவேகானந்தராக உலகப் புகழ் பெற வைத்தது என்பதில் தமிழராகப் பிறந்த அனைவரும் பெருமிதப்படவேண்டும்!

கன்னியாகுமரியில் பொங்கும் அலையோசைச்கிடையே தவம் செய்த அந்த வீரத்துறவியின் மௌனத் தவம்தாம் இன்றுவரை

தமிழினத்தை அமைதி வழியில் நடத்தி வருகின்றது என்பதைச் சித்தர்கள் பற்றி அறிந்த எவரும் மறுக்க இயலாது!

விவேகானந்தர் சாடிய மதவாதமும், சாதியவாதமும், மூடத்தனப் பழக்க வழக்கங்களும்,

பொய்யான இழிவு நிறைந்த இதிகாச நம்பிக்கைகளும் தமிழகத்தை விட்டு அடியோடு அகல

விவேகானந்தச் சித்தர் வழி காட்டிய பகுத்தறிவு நெறியில் மட்டுமே வீர நடை போட்டுத் தமிழக இளைய சமுதாயம்

வருங்காலத் தமிழகத்தை அறம் நிறைந்த நேர் வழியில் வழி நடத்த முன்வர வேண்டுமென்பதே

ஐந்தாம் தமிழ்ச்சங்கம் தமிழக இளைய சமுதாயத்திடம் வைக்கும் பிரதான வேண்டுகோளாகும்!

இன்றைய தினம் விவேகானந்தர் நினைவு தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டாலும் என்றும் இந்தப் பிரபஞ்சப் பெருவெளியில் மறைந்து வாழும்

அவர் போன்ற சித்தர்களின் சீரிய பகுத்தறிவு எண்ணங்கள்தாம் இனியும் தொடர்ந்து தமிழகத்தை வழி நடத்தும் என்பதில் எமக்குள் ஐயமேதுமில்லை!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!