முழுப் பூசணியைச் சோற்றில் மறைக்கும் அரசியல் வியாதிகள்!

அரசு செய்வோர் செய்யும் ஊழலுக்குத் தேனெடுத்துக் கப்பம் கட்டவே ஊழல் செய்து புறங்கை நக்கும் 

எடுபிடி அரசு அலுவலர்களின் அலட்சியம் காரணமாகவே கட்டிட விபத்துகள் நேரிட்டு உயிர் பலிகள் நேர்ந்ததென்பது உலகறிந்த உண்மை!

விபத்து நடந்த பின்னர் நட்ட ஈடு கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களைச் சரிக்கட்ட ஆள்பவர்கள் நினைப்பதும்,

ஏதோ தாங்கள்தாம் உத்தமர்கள் என்பது போல முன்னர் ஆட்சி பீடத்தில் அமர்ந்து இதே அலட்சிய அரசு அலுவலர்களிடம் 

இலஞ்சம் பெற்று ஆட்சி சுகம் அனுபவித்த எதிர்க்கட்சியினர் இந்த விபத்திற்கு வாய்மை கேட்டுப் 

பேரணி நடத்திப் போக்குவரத்தை முடக்கி மக்களை இன்னலுக்கு ஆளாக்குவதையும் 

அறிவு சார்நத தமிழ் மக்கள் சற்று உற்று நோக்கினால் இவர்கள் முழுப்  பூசணிக்காயைச் 

சோற்றில் மறைக்கும் அரசியல் எத்தர்கள் என்பது தெள்ளத் தெளிவாகப் புலனாகும்!

எக்காலத்துக்கும் பொருந்தும் 

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே? என்ற இதே திராவிட இயக்கத்தவரின் பசப்புப் 

பாடல் வரிகள்தாம் ஏனோ மனதில் வந்து தொலைகிறது!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!