நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது

தமிழக முதல்வர் மீது இன்று வாய்மை மன்றத்தில் வரலாற்றுத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது!

இந்த நாட்டில் இன்னும் ஏராளமான மனு வாய்மைச் சோழர்கள் துணிச்சலாகத் தம் கடமையைச் செய்து வருகின்றனர் என்பதற்கு பெங்களுரு வாய்மை மன்ற நடுவரின் வாய்மை தவறாத தீர்ப்பு உறுதி செய்துள்ளது!

கண்கட்டப்பட்ட வாய்மை தேவதையின் கண்களில் வடிவது ஆனந்தக் கண்ணீர்!

இந்த வரலாற்றுத் தீர்ப்புக்கு எதிராக இன்று ஆளும் கட்சியினர் ஆங்காங்கே பொதுச் சொத்துக்களையும் தனியார் சொத்துக்களையும் நாசப்படுத்தி தமிழக மக்களைக் கண்ணீர்க்கடலில் மூழ்கடித்துள்ளனர்!

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என முழங்கியவர்கள் தங்களின் அராஜகத்தால் வரும் தேர்தலில் அடுத்த தீர்ப்புக்குத் தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்!

நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது இங்கு சிரிப்பவர் யார்? அழுபவர் யார்? தெரியும் அப்போது என மக்கள் திலகம பாடிய ஒரு பாடல் வரிகள்தாம் இப்பொழுது எமக்குள் ஏனோ வந்து விழுகிறது!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!