ஒரு அப்பாவிப் பாமரனின் சந்தேகம்!


தமிழக முன்னாள் முதல்வர் ஊழல் வழக்கில் சிறை தண்டனை அடைந்து தனது பதவியை இழந்தவுடன் அவருக்குப் பதிலாக ஒரு புதிய முதல்வர் பதவியேற்றார்!

நாடு முழுவதும் என்ன நடக்கிறது என ஊடகங்கள் வாயிலாகக்கூட மக்கள் தெரிந்து கொள்ள இயலாது செய்தி ஊடகங்கள் முடக்கப்பட்ட நிலையில் பதவியேற்றவுடன் புதிய முதல்வர் உடனடியாக கருநாடகத்திற்கு ஊழல் குற்றத்தில் சிறை சென்ற பழைய முதல்வரைப் பார்க்கச் சென்றது அரசு முறைப் பயணமாகக் கருதப்படலாமா?

இந்தப் பயணத்திற்கு ஆன செலவு முழுவதும் அரசின் வரிப்பணத்திலிருந்து செலவிடப்படுவது!  சிறை தண்டனை பெற்ற ஒருவரை காண்பதற்காக ஒரு முதல்வர் மக்களின் வரிப்பணத்தில் செல்வது அதிகார விதி மீறலாகக் கருதப்படுமா?

இவர் மட்டுமன்றி பெரும்பாலான அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும்பாலானவர்கள் கருநாடக மாநிலத்திற்கு இதே காரணத்தை முன்னிட்டுச் சென்றது அரசின் வரிப்பணத்தில் என்றால் மக்களின் வரிப்பணம் காரணமின்றி வீணடிப்பது சட்ட மீறலா?

நாடு முழுவதும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில் அதிகாரத்தில் உள்ளவர்கள் முழுவதும் தமிழகத்திலேயே இல்லை கோட்டையே காலி என ஒரு பிரபலமான தமிழ் வார இதழில் செய்தி வெளிவந்துள்ளது! அப்படி என்றால் இது போன்ற பதவியில் உள்ளவர்கள் தங்களின் கடமையைச் செய்யாமல் எங்கோ சென்றது அதிகார விதி மீறலாகச் சட்டப்படி கருதலாமா?

தயவு செய்து சட்டம் தெரிந்தவர்கள் மட்டும் பாமரனின் சந்தேகங்களைத் தீர்த்து வையுங்கள்! அதே சமயம் பெரும் செல்வத்திற்கு ஆசைப்பட்டு சட்டத்திலுள்ள சந்து பொந்துகளில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி கிரிமினல்களுக்காகப் பாடுபடும் சட்ட வல்லுநர்கள் தயவு செய்து தங்களின் பரிந்துரைகளை இந்தப் பாமரனுக்குத் தெரிவிக்காதீர்கள்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!