இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்!

நவபாரதச் சிற்பி என்றழைக்கப்பட்ட பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் பிறந்த இந்த நன்னாள் பாரதத்தில் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது!

தமிழகத்திலுள்ள அனைத்து பெற்றோர்களுக்கும் ஐந்தாம் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக கீழ்க்ண்ட வேண்டுகோள்களை விடுக்கிறோம்!

தமிழகத்தில் பிறப்பெடுத்துள்ள பிறப்பெடுக்கும் ஒவ்வொரு குழந்தைகளும் அளவற்ற அறிவுடன் திகழக்கூடியவை!

எனவே தங்களின் குழந்தைகளின் கேள்விகளைப் புறக்கணிக்காதீர்கள்! கேள்விகள் கேட்கக்கேட்கத்தான் அந்தக் குழந்தைகளின் அறிவுத் திறன் வளரும்

அவர்களின் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க இயலாவிட்டால் முடிந்தவரை அடுத்தவரிடம் கேட்டாவது அவர்களி;ன் அறிவுத்திறன் மேம்பட உதவுங்கள்!

எந்தக் காரணம் கொண்டும் குழந்தைகளை அடித்து வளர்க்காதீர்கள்! உங்களின் தனிப்பட்ட கோபங்களுக்கு வடிகாலாகக் குழந்தைகளை அடிப்பதை தயவு செய்து நிறுத்துங்கள்!

அடிபட்டு வளரும் குழந்தைகள்தாம் எதிர்காலத்தில் எவர் பேச்சையும் கேளாமல் முரட்டுத்தனமாக வளர்ந்து தீவிரவாதிகளாக மாறும் வாய்ப்புகளுக்குக் காரணமாகலாம்!

குழந்தைகளை அவர்கள் விரும்பும் வரை படிக்க வைப்பதில் எந்தத் தயக்கமும் காட்டாதீர்கள்! அவர்கள் படிப்பதில் ஆர்வமற்றிருந்தாலும் முடிந்தவரை படிக்க வைத்து அவர்களுக்குள்ள தனித்திறமைகளைக் கண்டறிந்து படிப்புடன் அவற்றை வளர்க்க முயலுங்கள்!

உங்களின் குழந்தை எதிர்காலத்தில் ஒரு சிறந்த பாடகராக விளையாட்டு வீரராக பொது வாழ்க்கைத் தொண்டராக ஓவியராக எப்படி வேண்டுமானாலும் வரலாம்

உங்களின் தனிப்பட்ட விருப்பத்தை அவர்களின் மீது நீங்கள் திணிக்க முயன்றால் இத்தகையவர்களை உங்களால் ஒருவேளை நாடு இழக்க நேரிடும்!

குழந்தைகளை வேலைக்கு அனுப்பி அவர்களின் வருமானத்தில் குடும்பம் நடத்துவது அவமானம் எனக் கருதுங்கள்!

குழந்தைகள்தாம் இந்த நாட்டின் எதிர்காலம்! அவர்கள் நேரு அவர்கள் விரும்பிய ரோஜா மலர்களைப் போன்று மலர்ந்து மணம் வீசுபவர்கள்!

எனவே யாராக இருந்தாலும் குழந்தைகளை ஒரு ரோஜா மலராகவே கருதுங்கள்! அவ்வாறே அவர்களை வளர்த்துங்கள்! மலர் போன்ற கண்ணோட்டத்திலேயே குழந்தைகளைப் பாவியுங்கள்!

நாளைய பாரதத்தை வழி நடத்தப் போவது இன்றைய ரோஜா மலர்களாகக்காட்சியளிக்கும் நேரு அவர்கள் மிகவும் விரும்பிய நம் குழந்தைகள்தாம்!

பாரதத்திலுள்ள அனைத்து ரோஜா மலர்களுக்கும் ஐந்தாம் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!