இடுகைகள்

மே, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காவிரியில் கழிவு நீர்

காவிரியில் கழிவு நீர் கலப்பதாக தமிழகத்திலுள்ள அனைத்து இயக்கங்களும் கருநாடக அரசிற்குக் கண்டன அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர்.  காவிரி மட்டுமன்றி தமிழகத்திலுள்ள அனைத்து ஆறுகளிலும் சாக்கடைக் கழிவு நீர் மட்டுமன்றி அபாயகரமான கழிவுகளான சாயக் கழிவு,  தோல் தொழிற்சாலைக் கழிவு,  காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றும் கழிவு,  வாகனங்களைக் கழுவி வெளியேற்றும் ஆயில் மற்றும் கிரீஸ் கலந்த கழிவு,  எனப் பல்வேறு விதமான கழிவுகளை வெளியேற்றும் ஆலைகளை ஆறு மற்றும் கால்வாய்களின் ஓரத்திலேயே அமைத்துக் கொண்டு வெளியேற்ற அனுமதி கொடுத்தும்  வீடுகள் அலுவலகங்களில் இருந்து வெளியேறும் சாக்கடைக் கழிவுகளை கால்வாய்கள் வழியாக ஆறுகளில் கலந்து வந்த முதற் குற்றவாளிகள் இரு திராவிட இயக்கங்கள்தாம். இவர்கள் தவிர கட்சி பேதமின்றி தேர்தலுக்குத் தேர்தல் இந்த இரு அணிகளில் மாறி மாறி தொகுதிப் பிரதிநிதித்துவம் பெரும் அனைத்து இயக்கத் தலைவர்களும் இந்தக் கழிவுகளை வெளியேற்றும் ஆலைகளின் உரிமையாளர்கள் தங்களின் இயக்கங்களில் ஏதேனும் ஒரு பதவியோ அல்லது செல்வாக்கோ வகிப்பதை மறந்துவிட்டு அறிக்கை விடுத்துள்ள