சுடுகாட்டிற்கு வழி!!

பெருந்தலைவர் காமராசரின் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகளை எத்துணை முறை படித்தாலும் எமது தாகம் தீர்வதில்லை!

சமீபத்தில் அவரைப் பற்றிய ஒரு நிகழ்வைப் படிக்க நேர்ந்தது!

பெருந்தலைவர் முதல்வராக ஒரு கிராமத்திற்குச் சென்றிருந்தபோது அங்குள்ள மக்கள் அவரிடம் ஐயா எங்கள் கிராமத்து சுடுகாட்டிற்கு வழி இல்லை! எனவே சுடுகாடு செல்வதற்கு வழி ஏற்படுத்தித் தாருங்கள் என வேண்டினராம்!

உடனே கர்மவீரர் நான் உங்களின் வாழ்க்கை வசதிகள் முன்னேறுவதற்கு வழி தேடிக் கொண்டிருக்கிறேன்! நீங்கள் எதற்கு சுடுகாட்டிற்கு வழி கேட்கிறீர்கள் என்றாராம்!

இதைப் படித்தவுடன் என்னுள் சிரிப்பலைகளும் அதனுடனே எனது கண்களில் கண்ணீரும் வழிந்தோடியது!

எந்த நேரமும் மக்களின் நலனுக்காகப் பாடுபட்ட அந்த நல்லவர் சுடுகாட்டிற்கு வழி கேட்ட மக்கள் நல்ல ஆரோக்கியத்துடன் எல்லா வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டுமென்று எண்ணி அளித்த பதிலைப் படித்தவுடன்

சாராய ஆலைகளுக்கு முதலாளிகளாக விளங்கி,  குடிக்கு அடிமைகளாக பல தமிழ்த் தலைமுறைகளை விளங்க வைத்து,

அவர்தம் குடும்பங்களைக் கண்ணீரில் மிதக்க விட்டு,

குடித்துக் குடல் வெந்து செத்துச் சுடுகாடு சென்றவர்களின் சுடுகாட்டுக்கூரைகளிலும் ஊழல் செய்து,

அடிப்படை வசதிகளுக்காகப் போராடும் மக்களை வெட்டி வீழ்த்திச் சுடுகாட்டிற்கு அனுப்பும்

 இன்றைய அரசியல்வியாதிகளை நினைந்து

கர்ம வீரரின் நல்ல உள்ளம் புரிந்து இனியாவது இவர்கள் திருந்த வழி காட்ட வேண்டும் என்றுதாம் இந்தப் பிரபஞ்சப் பேராற்றலிடம் வேண்ட முடிகிறது!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!