தமிழ்த் திரையுலகிற்கு ஏற்பட்டுள்ள மகத்தான இழப்பு

தமிழ்த்திரையுலகில் ஆதிக்கம் செழுத்திய பாரம்பரிய கருநாடக இசையைப் பின்னுக்குத் தள்ளி

மேற்கத்திய இசைக் கருவிகள் துணை கொண்டு மெல்லிசையைத் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகம் செய்வித்து

இசை சாம்ராஜ்ஜியம் நடத்தி வந்த திருமிகு எம் எஸ் விசுவநாதன் அவர்களின் இழப்பு தமிழ்த் திரையுலகிற்கு ஏற்பட்டுள்ள மகத்தான இழப்பேயானாலும்

அன்னார் வயோதிகம் காரணமாகத் தம் இன்னுயிர் நீத்து அவர்தம் உடல் இந்த மண்ணில் புதைக்கப்பட்டாலும்

அவர் உயிர் விதையாக முளைத்து மீண்டும் பிறப்பெடுத்து தமிழிசையை உலகெங்கும் பரவச் செய்வார் என்ற நம்பிக்கைகளுடன்

அவர்தம் உறவினர்களுக்கும் மெல்லிசை மன்னரின் இசை அபிமானிகளுக்கும் ஐந்தாம் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!