புகை உயிருக்குப் பகை!
எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் எனது தந்தைக்குப் புகை பிடிக்கும் பழக்கம் உண்டு . எனக்கு ஐந்து வயது இருக்கும்போது எங்கள் வீட்டில் எனது தமக்கைகள் இருவரும் ஒரு நாள் எங்கள் வீட்டில் இருந்த ஒரு மரத்தாலான பீரோவின் முன்னும் பின்னும் ஓடியபடி சண்டையிட்டுக் கொண்டிருந்தனர் . எனது தந்தை அந்தப் பீரோவின் மேல் தனது பீடிக் கட்டினை வைத்திருப்பது வழக்கம் . மேலும் சிறுவனாகிய என்னையும் , நான் வளர்ந்து வாலிபனான பிறகும்கூட அவர் இதை கடைகளில் வாங்கி வரச் சொல்வதும் வழக்கம் . அன்று எனது தமக்கைகளின் சண்டை அமளிக்கிடையே நான் எனது தந்தை வைத்திருந்த ஒரு பீடிக் கட்டிலிருந்த பீடி ஒன்றை எடுத்து விளையாட்டாக எனது வாயில் வைக்கப் போனேன் . அப்பொழுது திடீரென அந்த மர பீரோ எனது தமக்கை எவரோ பின்னாலிருந்து தள்ளிவிட்டதால் குப்புற விழுந்தது . பயந்து நான் ஒதுங்கிய போது என் கையிலிருந்த அந்த பீடியும் நழுவியது . என்னுள் ஏதோ நிகழ்ந்தது . இது தவறான பழக்கம் என்பதாக . என்னை இன்றுவரை காத்துவரும் நல்ல சக்தி செய்த எச்சரிக