இடுகைகள்

நவம்பர், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புகை உயிருக்குப் பகை!

எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் எனது தந்தைக்குப் புகை பிடிக்கும் பழக்கம் உண்டு . எனக்கு ஐந்து வயது இருக்கும்போது எங்கள் வீட்டில் எனது தமக்கைகள் இருவரும் ஒரு நாள் எங்கள் வீட்டில் இருந்த ஒரு மரத்தாலான பீரோவின் முன்னும் பின்னும் ஓடியபடி சண்டையிட்டுக் கொண்டிருந்தனர் . எனது தந்தை அந்தப் பீரோவின் மேல் தனது பீடிக் கட்டினை வைத்திருப்பது வழக்கம் . மேலும் சிறுவனாகிய என்னையும் , நான் வளர்ந்து வாலிபனான பிறகும்கூட அவர் இதை கடைகளில் வாங்கி வரச் சொல்வதும் வழக்கம் . அன்று எனது தமக்கைகளின் சண்டை அமளிக்கிடையே நான் எனது தந்தை வைத்திருந்த ஒரு பீடிக் கட்டிலிருந்த பீடி ஒன்றை எடுத்து விளையாட்டாக எனது வாயில் வைக்கப் போனேன் . அப்பொழுது திடீரென அந்த மர பீரோ எனது தமக்கை எவரோ பின்னாலிருந்து தள்ளிவிட்டதால் குப்புற விழுந்தது . பயந்து நான் ஒதுங்கிய போது என் கையிலிருந்த அந்த பீடியும் நழுவியது . என்னுள் ஏதோ நிகழ்ந்தது . இது தவறான பழக்கம் என்பதாக . என்னை இன்றுவரை காத்துவரும் நல்ல சக்தி செய்த எச்சரிக

தமிழக ஊடகங்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்!

தமிழக ஊடகங்கள் தற்போதுள்ள ஊழல் அரசியல்வாதிகள், பிரபலமானவர்கள் எனப் பணம் படைத்தவர்கள், திரைத்துறையினர் எனச் செல்வந்தர்களாகக் காட்சியளிப்பவர்கள் தருகின்ற அறிக்கைகளையும், அவர்கள் சம்பந்தப்பட்ட எதுவாகினும் உடனுக்குடன் வெளியிட்டுத் தங்கள் பத்திரிகை தர்மத்தைக் கட்டிக் காத்துக் கொள்கின்றனர். இவர்கள் தரும் அறிக்கைகள், மற்றும் இவர்கள் சம்பந்தப்பட்ட செய்திகளை வெளியிட்டால்தான் தங்களின் வருமான வாய்ப்பினைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பது உண்மையாயினும்,  தயவு செய்து தமிழக மக்களின் நலன் கருதியாவது உண்மையிலேயே மக்களுக்காகப் பாடுபடும் நல்லவர்கள், எளிமையானவர்கள், தொண்டு மனப்பான்மை உடையவர்கள், தமிழ் அறிஞர்கள், விஞ்ஞானிகள், ஊழலுக்கும், சமூக அவலங்களுக்கும் எதிராகப் போராடும் குணம் உள்ளவர்கள் என  சமூகப் போராளிகளை அடையாளம் கண்டு அவர்களின் அறிக்கைகளையும், கட்டுரைகளையும், விமர்சனங்களையும் தமிழகத்தின் வருங்கால நலன் கருதி இனியாவது துணிந்து வெளியிடுங்கள்! முடங்கிக் கிடக்கும் இது போன்ற நல்லவர்களை ஊடகங்கள் வாயிலாக அறிய அறிய மெல்ல மெல்ல ஊழல் பேர்வழிகள், சுயநலமிக்க அரசியல்வாதிகள் மக்களின் மனதிலி

காது கேளாதவரிடம் ஊதிய சங்கு!

நல்லவர்களுக்கு வாக்களிக்க மறுக்கும் மக்கள்! குடவோலை எனப்படும் வாய்மைத் தத்துவ முறையில் தங்களின் மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து பாரபட்சமற்ற நல்லவர்களை சங்ககாலத்தில் தேர்ந்தெடுத்துப் பயனுற்ற நம் தமிழக மக்கள் இன்று படிப்பறிவு பெற்ற நாட்களிலும் ஏனோ தங்களின் சரியான மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கத் தவறுகின்றனர். மக்கள் தாங்கள் சார்ந்துள்ள இயக்கம் அறிவிக்கும் வேட்பாளர்களைத்தான் கவனிக்கிறார்களே தவிர அவர்கள் எளிமையானவர்களா அல்லது வசதி படைத்தவர்களா என்பதை கவனிப்பதே இல்லை.  இன்றுள்ள இயக்கங்கள் தேர்தலில் ஏராளமாகச் செலவிடக்கூடிய தகுதியுள்ள பெரும் செல்வந்த அரசியல்வாதிகளைத்தாம் தங்களின் தேர்தல் வேட்பாளர்களாகக் களமிறக்குகின்றன. இந்தச் செல்வந்தர்கள் இந்த அளவிற்கு உயர்ந்துள்ளது அவர்களின் சொந்த உழைப்பிலா அல்லது மக்கள் தொண்டு செய்ய வந்து அதைத் தவறாகப் பயன்படுத்தி செல்வந்தர்களானார்களா என்பதையெல்லாம் மக்கள ஆராய்வதே இல்லை. எந்தவித நிறுவனமும் நடத்தாத ஒருவர் சாதி வாக்கினை மட்டுமே பெற்று வளர்ந்து ஒரு தேர்தலில் தனது சொத்து மதிப்பினை ஐம்பது இலட்சங்கள் என்கிறார். அதே வேட்பாளர் ஐந்த

இப்பொழுதிருந்தே விழித்திடுங்கள்!

சென்னையை உலுக்கிய புயல் மழையால் சென்னை மற்றும் புற நகர் பகுதிகள் மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையை ஊடகங்கள் வாயிலாக அறிவதில் வேதனை கொள்கிறோம். இயற்கையை மனிதன் நம்பாததும், சுயநலமிக்கவர்கள் கால்வாய்கள் ஏரிகள், என மழை நீர் செல்லும் வழிகள், சேகரமாகும் இடங்களை ஆக்கிரமித்து மனைகள் விற்க, அந்த இடங்கள் ஏரிகளாக இருந்தததையும் அறியாமல் வீடுகளைக் கட்டியதால் இயற்கை தன் போக்கில் ஏராளமான மழைப் பொழிவினை வாரி வழங்க அவை சேகரமாகும் இடங்கள் பரிதாபமாக வீடுகளாக இருந்த காரணத்தால் வெள்ளக் காட்டில் அங்கு வாழும் மக்கள் இன்று தத்தளிக்கின்ற நிலை உருவாகியுள்ளது. மழை வரவா போகிறது என்ற அலட்சியம் மக்களுக்கும் அரசுகளுக்கும் ஏற்பட்டுத் தொலைய இயற்கையை நம்பாது ஆற்றின் கரையோரம் துவங்கி ஆற்றுக்குள்ளேயே வீடுகள் கட்டப்பட்டதும், வெள்ள காலங்களின் அபாயம் அறிந்தும் அரசுகள் அந்த வீடுகளை அங்கீகரித்து மின் இணைப்பும் இலவசமாக வாக்கு வங்கிக்கென வழங்கித் தொலைய, இன்று ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் வீடுகள் மூழ்கித் தங்களின் உயிரைக் காத்துக் கொண்டு உடமைகளை இழந்து தவிக்கும் மக்களை நினைந்து வேதனையுற மட்டுமே முடிகிறது. சென்னையை

ஆலய சமத்துவம்

எனது மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக திருச்சியில் உள்ள அமைப்பு நடத்தும் மங்கள விழா என்ற பெண் மற்றும் ஆண் வீட்டார்களின் நேரடிச் சந்திப்புக்கு இந்த மாதத் துவக்கத்தில் சென்றிருந்தோம். இந்த முறை நாங்கள் முறையாகப் பதிவு செய்யச் சற்று கால தாமதம் ஏற்பட்டதால் அந் நிகழ்வில் எங்களால் கலந்து கொள்ள இயலவில்லை. எனது துணைவியார் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள இயலவில்லை என்ற வருத்தத்துடன் உறவினர் இல்லம் திரும்பிக் கொண்டிருந்தபோது  வயலூர் சென்று வரலாமா என என்னிடம் வினவினார். நான் சித்தர்களின் தலைவன் முருகனின் பகுத்தறிவு வழி நடப்பவன். எனவே நல்லதாகப் போனது முருகன் தன்னிடம் வரச் சொல்லவே இந்த நிகழ்விலிருந்து அழைக்கிறார். இல்லையென்றால் இன்று மதியம்வரை நிகழ்வில் கலந்து கொண்டு ஊர் திரும்பவே நேரம் சரியாக இருந்திருக்கும் என்று கூறி நாங்கள் சென்ற சாலையிலிருந்து அருகிலேயே இருந்த வயலூருக்கு வாகனத்தைச் செழுத்தினேன். அங்கு சென்றபோது முருகன் சந்நிதியில் ஒரு பிராமணக் குடும்பத்துப் பெண்கள் தமிழில் இனிமையாக முருகனை வரச் சொல்லியும் வரம் தரச் சொல்லியும் பாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சகோதரி அர்ச்சகரு

மக்கள் சேவைகளையும் காசாக்கலாமே!

என் போன்று வாடகை வீட்டில் வசிப்பவர்கள் சந்தர்ப்ப சூழல், மற்றும் வீட்டு வாடவை உயர்வு காரணங்களுக்காக குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையேனும் இடம் மாறும் நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக குடிமைப் பொருள்கள் வழங்கு அட்டை, மற்றும் தேர்தல் அடையாள அட்டையில் அடிக்கடி நாங்கள் இட மாறுதல் செய்ய வேண்டி விண்ணப்பிக்க வேண்டிய நிலை உருவாகிறது.  இதில் குடிமைப் பொருள் அட்டை மாறுதலுக்கு கையூட்டு இன்றி இடம் மாறுதலைப் பதிவு செய்தல் இயலாததென்பது நாடே அறிந்த ஒன்று. தேர்தல் கமிசன் வாக்காளர் பெயர்களில் புதிய வாக்காளர்களைச் சேர்த்தல், நீக்குதல், இட மாறுதல்களைப் பதிவு செய்தல் போன்ற வேலைகளை அவ்வப்போது செய்து வந்தாலும், இவை முறையாகச் செயல்படுத்தப்படுவதில்லை என்பதுதாம் கண்கூடான உண்மை.  ஏனென்றால் இது போன்ற முகாம்களில் அரசியல் இயங்கங்களின் பிரதிநிதிகள்தாம் ஆதிக்கம் செழுத்துகின்றனர்.அதிலும் குறிப்பாக ஆளும் இயக்கம் சார்ந்தவர்களின் ஆதிக்கம்தாம் அதிக அளவில் உள்ளது. என் போன்று வேலைக்குச் செல்பவர்கள் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அன்றுதான் இது போன்ற முகாமிற்கு சென்று அங்கு விநியோகிக்கப்படும் படிவங்