தமிழக ஊடகங்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்!

தமிழக ஊடகங்கள் தற்போதுள்ள ஊழல் அரசியல்வாதிகள், பிரபலமானவர்கள் எனப் பணம் படைத்தவர்கள், திரைத்துறையினர் எனச் செல்வந்தர்களாகக் காட்சியளிப்பவர்கள் தருகின்ற அறிக்கைகளையும், அவர்கள் சம்பந்தப்பட்ட எதுவாகினும் உடனுக்குடன் வெளியிட்டுத் தங்கள் பத்திரிகை தர்மத்தைக் கட்டிக் காத்துக் கொள்கின்றனர்.

இவர்கள் தரும் அறிக்கைகள், மற்றும் இவர்கள் சம்பந்தப்பட்ட செய்திகளை வெளியிட்டால்தான் தங்களின் வருமான வாய்ப்பினைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பது உண்மையாயினும், 

தயவு செய்து தமிழக மக்களின் நலன் கருதியாவது உண்மையிலேயே மக்களுக்காகப் பாடுபடும் நல்லவர்கள், எளிமையானவர்கள், தொண்டு மனப்பான்மை உடையவர்கள், தமிழ் அறிஞர்கள், விஞ்ஞானிகள், ஊழலுக்கும், சமூக அவலங்களுக்கும் எதிராகப் போராடும் குணம் உள்ளவர்கள் என 

சமூகப் போராளிகளை அடையாளம் கண்டு அவர்களின் அறிக்கைகளையும், கட்டுரைகளையும், விமர்சனங்களையும் தமிழகத்தின் வருங்கால நலன் கருதி இனியாவது துணிந்து வெளியிடுங்கள்!

முடங்கிக் கிடக்கும் இது போன்ற நல்லவர்களை ஊடகங்கள் வாயிலாக அறிய அறிய மெல்ல மெல்ல ஊழல் பேர்வழிகள், சுயநலமிக்க அரசியல்வாதிகள் மக்களின் மனதிலிருந்து அகன்று நல்லவர்கள் மட்டுமே நிறையத் துவங்குவர்.

ஊழல் பேர்வழிகளும், ஆதிக்கமிக்க அரசியல்வாதிகளும் ஓரம் கட்டப்பட்டால்தான் நாட்டில் ஒழுக்கமும் ஆரோக்கியமிக்க நாகரீகமும் மலரத் துவங்கும்,

அதுதான் நம் தாய்த்தமிழகத்தை வெகு வேகமாக உலக அரங்கில் முன்னெடுத்துச் செல்ல உதவும்!

இதுவே உங்களின் ஊடக வாய்மையாக வருங்காலத் தமிழ்ச் சந்ததி உங்களை போற்றப் போவதற்கு நீங்கள் செய்ய வேண்டிய கைமாறு!

இதுவே வெகுசன ஊடகங்களிடம் எமது பணிவான வேண்டுகோள்! 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!