சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!

       
முதலியார்!

வடவர்களின் கட்டுக்கதைகளை நம்பிப் பிள்ளையாரைத் தெய்வமாக ஏற்றுக்கொண்டு சாதியால் ஆதியில் முதலில் பிரிந்தவர்களே முதலியார்கள்! ஆம் இச்சாதிப்பெயரை பிரித்துச் சொல் அறிந்தால் சாதியால் முதலில் யார் பிரிந்தவர்கள் எனும் கேள்வி பிறக்கும். 

இன்றைய திருச்செங்கோட்டுப் பகுதியில் வாழ்ந்து அந்நாட்களில் தமிழர்தம் புறநானூற்றுப் பாடல் வரிகளில் வரும் தமிழ்த் திருமணங்களுக்குக் கூரைப்புடவை நெய்து கொடுத்த குலம் இது! 

தமிழினத்திற்குப் பருத்தியால் ஆன ஆடை கொடுத்த இவர்கள் பின்னர் வடவர்களின் சாதி வலையில் வீழ்ந்து வடவர்தம் திருமணங்களுக்குப் பட்டுப்புடவை நெய்வதற்குக் காஞ்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டுப் பின்னர் பிள்ளையாரைத் தெய்வமாக ஏற்றுச் சாதிப் பிரிவில் முதலாவதாக வீழ்ந்து இன்று வரை வடவர்தம் வழக்கங்களை ஏற்று வழி நடக்கும் தமிழினம்! 

வடவர்களின் ஆட்சியிலிருந்து தமிழினத்தை நிரந்தரமாக மீட்டுத்தந்த பெரியாரின் மாணவர் அறிஞர் அண்ணாவின் வழியினை மீண்டும் இவ்வினம் பின்பற்றிச் சாதி ஒழிப்பில் முன்னணியில் நிற்க வேண்டும்!        

வன்னியர் படையாட்சி கண்டர்!

தமிழின வரலாற்றில் வடவர்களின் ஆதிக்கத்தை வேரறுக்கப் போராடிய மகேந்திர பல்லவரின் வம்சம் இவர்கள்! வடவர்களால் புகுத்தப்பட்ட காளி வழிபாட்டையும் மூடத்தனமான பழக்க வழக்கங்களையும் அதி தீவிரமாக எதிர்த்த மகேந்திர பல்லவரின் தீரத்தை வரலாறு மறைத்துவிட முடியாது! 

வடவர்களின் ஆதிக்கத்தை வன்மையாக எதிர்த்தமையால் வன்னியர் எனவும் படை கொண்டு ஆட்சி நடத்தியவர்கள் எனும் பொருள் படும் வகையில் படையாட்சி எனவும் தமிழகத்தின் கண்டப்பகுதியில் வாழ்ந்தவர்கள் என்பதால் கண்டர் எனவும் அழைக்கப்படுபவர்கள்!

இன்று தமிழகத்தில் நல்லாட்சி மலரப் புரட்சிகரமான திட்டங்களை அறிமுகப்படுத்தி வரும் இவ்வினம் தீவிரமான சாதி உணர்வால்; தம் மீது புகுத்திக் கொண்ட கறைகளை அகற்றி, கலை வளர்த்த காஞ்சிப் பல்லவரின் மென்மையான ஆட்சி முறை தமிழகத்தில் அமையச் சாதி ஒழிப்பில் தனது பங்கை முதன்மைப்படுத்தினால் தமிழின முன்னேற்றத்தை எவராலுமே தடுக்க முடியாது!

பிள்ளை எனப்படும் வேளாளர் பிரிவினர்!

தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களில் முதன்மையான சோழ வம்சத்தவர்கள் இவர்கள்! இந்த வம்சத்தில்தான் கணக்கிடவே இயலாது ஏராளச் சாதிப் பிரிவுகள்! 

கடல் வழிப் பயணத்தில் உலகை வலம் வந்து சாதனை படைத்ததில் முன்னோடியாக விளங்கியவர்கள் பின்னர் வடவர்களின் ஆதிக்கத்தில் தங்களின் அரண்மனைகள் இன்றைய திருக்கோயில்களாக மாற்றம் பெற்று வீழ்ந்தபோது தாங்கள்தான் கடவுள்களின் பிள்ளைகள் என்ற எதிர்ப்புடன் தமிழகத்தில் மாரி அம்மன் கோயில்களை ஏற்படுத்தி இந்தப் பெயருக்குடைய அடைமொழியை அடைந்தவர்கள்!

கொங்கு வேளாளக் கவுண்டர்கள்!

சோழ வம்சத்தவர்களாகப் பரந்துபட்ட தமிழகத்தின் கண்டப் பகுதியில் வேளாண்மை செய்து வாழ்ந்த இவர்கள் தங்களுக்குள் மட்டுமே இன மோதல்கள் நிகழ்ந்ததாகத் தங்களின் சகோதரர்களில் ஒரு பிரிவை வேட்டுவக் கவுண்டர் என ஒதுக்கிவிட்டுக் கருதும் வீரப்பூரைத் தங்கள் வழிபாட்டுத் தலமாகக் கொண்டாடி வருபவர்கள்!

மகாபாரத யுத்தத்தின் இறுதி நிகழ்விடம்தான் வீரப்பூர் என்பதை எமது உள்ளுணர்வு ஆழமாகப் பிரபஞ்ச சக்திகளின் வெளிப்பாட்டால் நம்புகின்றது! இங்கிருந்துதான் அர்ச்சுனன் போர் புரிய மறுத்துச் சபரிமலை சென்றடைந்து தவம் செய்யத் துவங்கியிருக்க வேண்டும் என்பதே உண்மை வெளிப்பாடு! இந்த உள்ளுணர்வு என்றேனும் வெளிச்சத்திற்கு வந்தே தீரும்!

தங்களின் திருமணச் சடங்குகளில் வடவரைச் சேர்த்துக்கொள்ளாத இந்த இனம் வெகு விரைவில் தங்களின் பகையாளி வேட்டுவ இனமல்ல என உணர்ந்து சாதி பிரித்த வடவர்தம் மதவாதச் சூழ்ச்சியில் வீழாது விடுபட்டுத் தமிழ்ச் சாதிகள் ஒழிந்து ஒன்றுபடத் தங்கள் பங்கை உலகிற்கு வழங்குவது சர்வ நிச்சயம்!

வள்ளுவர்! 

ஆதியில் வானவியலில் வல்லுநராகத் திகழ்ந்த இந்த இனம் புவி மாற்றங்களையும் வருங்காலத்தையும் கணிப்பதில் தீர்க்கதரிசிகள்! துல்லியமான சோதிடவியல் பிறந்தது இவர்களால்தான்! வள்ளுவர் பிறந்தது இந்த இனத்தில்தான்! கணிதவியலில் முன்னோடிகள் இன்று வடவர்களால் தாழ்ந்த சாதியாகித் தம் சுயம் மறந்தனர்!

பள்ளர் பறையர் போன்ற தாழ்த்தப்பட்ட சாதியினர்!

ஆதியில் அரண்மனைகளில் போர்ப் பறை அறைபவர்களாகவும், ஆடல் பாடல் என ஆனந்தப்பள்ளுப் பாடிக் கலை வளர்ப்பவர்களாக வாழ்ந்து உயர் பிரிவினராக விளங்கிய இவர்கள் வடக்கிற்குத் தமிழினம் அடிமைப்பட்ட ஒரு கால கட்டத்தில் இவர்களை ஒழித்து இவர்களின் இடத்தைத் தமதாக்கிக் கொண்டு வடக்கு இவர்களின் இடத்தைக் கைப்பற்றியது!

தம் சுயம் அறியாமல் காலம் காலமாகத் தாழ்த்தப்பட்டவர்களாகத் தம்மை உருவேற்றிக்கொண்டு இன்றுள்ள சாதிகளாக மாற்றம் பெற்ற பரிதாபத்திற்கு உரியவர்கள் இவர்கள்!

வடக்கு இவர்களுக்கெனவே கட்டுக்கதைகளும் இவர்கள் வாழ்வை இன்றுவரை இருட்டிலேயே வைத்துத் தலையெடுக்க விடாமல் செய்யச் சுருட்டும் சாராயமும் கேட்கும் கற்பனைத் தெய்வங்களை உருவாக்கித் தந்தனர்!

இவர்கள் அதை தமது வாழ்வில் பழகுமாறு செய்து இந்த தெய்வங்களுக்கு அவற்றைப் படைக்கும் பழக்க வழக்கங்களையும் கற்றுத் தந்து, பின்னர் தங்களின்  உயிர் பலியிடும் வழக்கத்தையும் உருவாக்கித் தந்து இவர்தம் சுயம் மறக்கடிக்கப்பட்டனர்!

தங்களின் ஆதிக்கத்தைத் தமிழகத்தில் நிலை நாட்டிக்கொள்ள உயர் சாதியினர் எனச் சிலரை மட்டும் உயர்த்தி அவர்களுக்குக் கீழ் இவர்களை அடிமைப்பட வைத்து இன்றுவரை இவர்கள் தயவுடன் தங்கள் மத ஆதிக்கத்தை நிறைவேற்றி இன்றைக்குக் கோயில்களாக மாற்றம் செய்யப்பட்ட அரண்மனைகளில் நுழையவும், அதைவிடக் கொடுமையாகத் தாங்கள் வசித்த தெருக்களில்கூட நுழையவிடாமல் தடுத்து வந்துள்ள வடவர்களின் கொடுமையை இவர்கள்தான் முடிவிற்கு கொண்டுவர வேண்டும்! 

நாடார்!

பெயரிலேயே இவர்களின் குணம் தெரிந்துவிடும்! உதாரணத்திற்குப் பெருந்தலைவர் அவர்கள் ஒருவரே போதும்!

செட்டியார்கள்! ரெட்டியார்கள்!

வணிகத்தை வாழ்க்கை முறையாகக் கொண்டு கடல்கடந்து சென்று சீரும் சிறப்புமாகச் செட்டும் குடித்தனமுமாக வாழ்ந்தவர்கள் இவர்கள் என்பதால் செட்டியார் எனவும் இவர்களில் பிரிந்து தெலுங்கு பேசும் மக்கள் ரெட்டியார் எனவும் பெயர் பெற்றனர்!

மருத்துவர் எனப்படும் நாவிதர்!

இன்று தமிழக்க கோவில்களில் முடி காணிக்கை இறக்குபவர்களாக தொழில் செய்யும் இந்த இனம் வடவர்களின் ஆதிக்கத் தமிழகத்தில்தான் இந்நிலைக்குத் தள்ளப்பட்டனர்!

ஆதியில் சித்த மருத்துவர்கள் துணையுடன் மிகச் சிக்கலான அறுவை சிகிச்சை முறையை நாவிற்கு இதமாகப் பேசி நோயாளிகளைக் குணப்படுத்துவதி;ல்; கை தேர்ந்ததால் நாவிதர் என அழைக்கப்பட்ட இரண சிகிச்சை  மருத்துவ நிபுணர்கள் இவர்கள்! 
இன்று தம் சுயம் மறந்து தாழ்ந்த இனமென தம்மைக் கருதிக்கொண்டாலும் அழகுக்கலை நிபுணர்களாக விளங்கி வளமாக வாழ்கின்றனர்!

மலையாளி!

குறிஞ்சி நிலமாம் மலைப் பகுதியை ஆழ்பவர்கள் என்ற பொருளில் அழைக்கப்பட்டவர்கள்! இன்று கேரள மாநிலத்தவராகப் பிரிந்து மலையாளத் தமிழைப் பேசுபவர்கள்! குறிஞ்சிநிலக் கடவுளாம் முருகனைத் தம் கடவுளாக ஏற்று வணங்கும் நம் கேரள சகோதரர்கள்!

நாயக்கர்! நாயுடு! 
தமிழர்தம் மூன்று கலைகளில் நாடகக் கலைப் பிரிவில் வருபவர்கள் இவர்கள்! புராணக் கதைகளை நடித்துக் காட்டி அதில் வரும் கதாபாத்திர நாயகர்களாக வாழ்ந்த இவர்கள்தான் பின்னாலில் சாதியால் பிரிந்து வடவர்களின் மொழியும் கன்னடமும் கலந்த தெலுங்கு மொழிக்குச் சொந்தக்காரர்களாக மாறிவிட்டனர்!

ஆட்சிக்கட்டிலில் அமரத்துடிக்கும் இன்றைய திரைப்பட நாயகர்களின் முன்னோடிகள் இவர்கள்தாம் எனலாம்! அந்நாளில் தம் நடிப்புத்திறத்தால்தான் இவர்கள் நம் மூவேந்தர் ஆட்சிகளுக்கு முடிவு கட்டி நாயக்கர்களின் ஆட்சியைத் தமிழகத்தில் வேறூன்ற வழி செய்தனரோ என்ற சந்தேகம் ஆந்திரத்திலும் தமிழகத்திலும்  தமது நடிப்பால் ஆட்சிகளைப் பிடித்த இரு திலகங்களின் செயலால் உறுதியாகிறது!

தமிழகத்தைப் பொருத்தவரை திரைப்பட மோகத்தால் மக்களைத் தம் வசப்படுத்தி ஆட்சியில் அமர வழி வகுத்த திராவிடக் கட்சிகளை உருவாக்கிய தந்தை பெரியார் பிறந்த இந்த இனம் அவரது சாதி ஒழிப்பு இலட்சியத்தில் இனி முன்னணியில் நிற்குமென்பது சர்வ நிச்சயம்!

வண்ணார்! 

அந்நாட்களில் தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மூலிகை வளங்களைப் பயன்படுத்தித் துணிகளுக்கு வண்ணம் சேர்க்கும் தொழிற்பிரிவில் வருபவர்கள் இவர்கள்! மக்களின் உடை அழுக்கைச் சுமந்து வெளுத்து வெள்ளையாக்கித் தரும் இவர்களைச் சாதியால் பிரித்துத் தாழ்த்தித் தமிழினம் தன்னை அழுக்காக்கிக் கொண்ட பரிதாபத்தை நாம் என்னென்பது!

இது போன்றுதான் நம் தமிழினத்தின் சாதிப் பிரிவுகளின் பின்னணிக்குச் சரியான காரணம் உள்ளது! தமிழினம் சாதிகளால் பிரிந்தாலும் அதற்கான சரியான வழக்குச் சொல்லைத்தான் தங்கள் சாதிப்பெயருக்கு அடை மொழியாக ஏற்று வந்துள்ளது!
அறிவுடைய தமிழக மாணவர்கள் இனியாவது தெளிவுற்று சாதியென்பது நாம் சார்ந்த தொழில்தானே தவிர வேறு காரணம் ஏதுமில்லை என உணர்ந்து சாதிகளை ஒழித்துத் தமிழினத்தை உயர்த்திச் சாதிப்பவர்களாக மாறவேண்டும்!


வேளாளரின் தோட்டத்தில் வண்ணார் துவைத்த சட்டையணிந்த தாழ்ந்த இனத்தவர் நிலத்தைப் பண்படுத்தி விளைவித்து அவராலே அறுவடை செய்யப்பட்டுச் செட்டியார் எனும் வணிகரிடம் சென்று பிள்ளை எனும் வாடிக்கையாளர் சாப்பிடும் அரிசி எந்த சாதிக்குச் சொந்தமானது?  

ஒவ்வொரு சாதிக்காரரும் தம் சாதியைப் பிடித்துக்கொண்டு இனியும் தொங்கினால் பேருந்துப் பயணம் கூட இனித் தனித்தனியான சாதிக்குதான் தொடங்கப்படவேண்டும்! ஆம் தீவிரமான சாதிமத வெறியர்கள் ஏன் பிற மத சாதியினர் ஓட்டுநராக உள்ள பேருந்தில் ஏற வேண்டும்? இங்கு மட்டும் தவிர்க்கப்படும் சாதிமத பேதங்கள் தமிழர்களின் எல்லா இடங்களிலும் தவிர்க்கப்படுவது ஒன்றும் இயலாத காரியமல்ல! வேண்டியதெல்லாம் எல்லோரும் ஓர் குலம் என்ற உயரிய நாகரீகம்தான்!

நான் அடிக்கடி என்னை சார்ந்தவர்களிடம் சாதிப்பிரிவினைகள் தமிழர்களுக்குள் இருக்கவே கூடாது என்பேன்! அதற்கு அவர்கள் சாதிகளை ஒழிக்கவே முடியாது என ஆணித்தரமாகப் பதிலளிப்பர்! ஆம் சாதிகளை ஒழிக்க முடியாதுதான்! 

ஆனால் சாதிகளை இணைக்க முடியுமே! இன்று முதல் மாணவச் செல்வங்கள் சைவத் தமிழர், வைணவத் தமிழர் என்ற இரு பிரிவுகளுக்குள் தம்மைக் கொண்டு வர வேண்டும்! பள்ளிகளில் சாதி என்ற இடத்தில் சைவத்தமிழர் அல்லது வைணவத்தமிழர் என்று குறிப்பிடுமாறு வற்புறுத்த வேண்டும்! (படிக்கவும் எனது சைவ வைணவத் திருமணங்கள் கட்டுரையினை)

நாளாக நாளாக இதுவே நடைமுறைக்கு வந்துவிட்டால் சாதிகள் தாமாகவே இந்தத் தமிழகத்தை விட்டு அகன்றுவிடும்!

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் வரவிற்குப் பிறகுதான் தமிழகத்தில் தமிழர் தமது பெயருக்கு பின்னர் சாதிப்பெயர்கள் எனும் வால் ஒட்டிக்கொண்டு எழுதுவதை வெட்டிவிட்டுச் சாதி அடைமொழியைத் தவிர்க்கத் துவங்கினர்!

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தமிழக மக்கள் சாதியவாதத்தையும் மதவாதத்தையும் நிராகரித்துள்ளது வரவேற்கத்தக்கது.

ஆனால் வடவர்கள் இன்றுவரை சாதிவெறியில் திலைப்பவர்கள்! இதற்கு ஒரே சாட்;சியம் நம் தமிழகத்திலுள்ள தொலைபேசி டைரிதான்! எனது கருத்தை படித்த பின்னராவது தமிழகத்தில் வசிக்கும் வடவர்களின் பிள்ளைகள் தங்களின் பெயருக்குப் பின்னர் சாதிகளை இணைத்து எழுதுவதைத் தவிர்ப்பார்கள் என நிச்சயமாக நம்புகிறேன்!      

இந்த மாற்றம் தமிழகத்தில் அமையவிருக்கும் ஐந்தாம் தமிழ்ச்சங்க ஆட்சி காலத்தில் நிரந்தரமாகும் நிலை உருவாகும்!

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!