இடுகைகள்

ஜனவரி, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உன்னை நான் சந்தித்தேன்! நீ ஆயிரத்தில் ஒருவன்!

ஐந்து வயதில் முதன் முதலாக நான் துவக்கப்பள்ளியில் சேர்ந்து எழுது பலகையை எனது வலது கையில்  பிடித்துக்கொண்டு இடது கையில் எழுதுகுச்சியால் எழுதத் துவங்கினேன். இதைக்கண்ணுற்ற எனது வகுப்பாசிரியை திருமதி புஸ்பா அவர்கள் எனது இடது கையில் தனது கரத்தில் இருந்த பிரம்பால் சில அடிகள் வைத்து என்னை வலது கையால் எழுதும்படி பயிற்றுவித்தார். அன்றைக்கிருந்த ஆசிரியர்களின் மனநிலையயும் மக்களிடம் நிலவிய மூடத்தனமான தவறான எண்ணங்களும் இடது கையால் எழுதுவது தவறெனப் பட்டதின் விளைவு நான் எனது எழுதும் பழக்கத்துடன் எனது தலையெழுத்தையும் அவர்கள் மாற்றி எழுதத் துவங்கிவிட்டதாகத்தான் கருதி வந்தேன். அது தவறு. என்னை வழி நடத்தும் மகா சக்தியின் வில் பொதுவாக இடது கைப் பழக்கம் உள்ளவர்கள் உலகத்தில் சுமார் ஆயிரத்தில் ஒருவராகத்தான் பிறக்கின்றனர். வலது கைப்பழக்கம் உள்ளவர்களைக் கட்டுப்படுத்தும் மூளையின் அமைப்பு எங்களைப்போன்ற இடது கைப்பழக்கம் உள்ளவர்களுக்கு இடம்மாறி இருப்பதால் எங்களின் அனைத்துப் பழக்க வழக்கங்களும் வலதுகைப் பழக்கம் உள்ளவர்களுக்கு நேரெதிராகத்தான் இருக்கும். எந்தப் பொருளை எடுப்பதாக இருந்தாலும், மிதிவண்டி ம