பதவிக்கு எது அழகு?

நேரு மறைந்தவுடன் நாடு ஒரு நெருக்கடியான நிலையைச் சந்தித்த நேரம். அடுத்த பிரதமர் யார் எனும் கேள்வி எழுந்தபோது அதற்குச் சரியான தீர்வான பிரதமரைத் தேர்ந்தெடுத்தார் ஒருவர்.

அவரது மறைவிற்குப் பின்னரும் இதே நிலை. நாடே இவர்தாம் பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் என்று கருதிய நேரத்தில் தனக்கு வந்த வாய்ப்பினை நிராகரித்து இந்திரா அம்மையாரைத் தேர்ந்தெடுத்தவரும் அவரே.

அவர்தான் ஒப்பற்ற தலைவர் கர்மவீரர் காமராசர் அவர்கள்.

பிரதமராகும் தகுதியையும் மறுத்தும், தான் முதல்வராக வகித்த பதவியையே வேண்டாமென மறுத்து  அதற்கும் வேறு தகுதியான ஒருவரை பரிந்துரை செய்தவர் உலகிலேயே இவர் ஒருவராகத்தான் இருப்பார்.

பதவி ஒருவரைத் தேடி வர வேண்டும். அதனைத் தேடி அலைபவர்கள் சுயநலவாதிகள்.

தன்னைத் தேடி வந்த பதவியை மறுத்து தன்னைவிட மேலானவர் இவர் என மற்றவரை தேர்வு செய்பவர்கள்தாம் சுயநலமற்ற அப்பழுக்கற்ற பொதுநலவாதிகள்.

இவர்களைப் போன்றவர்களால்தான் பதவிகள் அழகு பெறுகின்றன.

பதவிகள் ஆடம்பரமானவை! அழகானவை! மேன்மையானவை!

ஆனால் அவை அசிங்கப்படுவதும் அழகாக்கப்படுவதும் அதை வகிப்பவர்களின் தராதரத்தைப் பொருத்தது.

இனியாவது பதவிக்கு அலைபவர்கள் வெட்கப்பட வேண்டும். திருந்த வேண்டும்.

தகுதியுள்ள மற்றவர்களுக்கு வழி விட வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!